பாடம் 2.4 புயலிலே ஒரு தோணி

உயிரின் ஓசை > 2.4 புயலிலே ஒரு தோணி
நூல்வெளி
| புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி. இந்நூலாசிரியர் ப.சிங்காரம் (1920 – 1997). இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது. அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம். அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். வேலைக்காக இந்தோனேசியா சென்றார். மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார். |
முன்தோன்றிய மூத்தகுடி
| நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” – அகநானூறு 208 : 22 |
குறு வினா
மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.
குறிப்பு: இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் சளப் தளப் என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்
- தேனடையிலிருந்து விழும் தேன் துளியைப் போல மணித்துளிகளுக்கு ஒரு முறை நீர் “சொட் சொட்” என விழுந்தது.
- விரும்பத்தக்க தென்றலைப் போலவும் மயிலிறகின் வருடல் போலவும் மெல்லிய குளிர் உடலில் ஓடும்.
- நீர் உள்ள தடாகத்திலே பல வகையான மீன்களும், தவளைகளும் தாவிக்குதிக்கும் போது எற்படும் ஓசையை ஒத்த “சளப் தளப்” என்ற சத்தத்துடன் தேங்கி கிடந்த நீர்க் குட்டையில் குழந்தைகள் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.
- அமைதியான நீரோட்டம் கொண்ட நதியானது இழுத்து வரும் சிறுசிறு கட்டை மற்றும் இதர பொருட்கள் போல குழந்தைகள் ஓடும் நீரில் காகிதக் கப்பல்களை விட்டு மகிழ்ந்தனர்.
நெடு வினா
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
முன்னுரை:-
மனித வாழ்க்கை போல இயற்கையும் இன்பம் துன்பம் நிறைந்தது. அந்த வகையில் “புயலில் ஒரு தோணி” என்ற புதினத்தில், பா.சிங்காரம் எழுதியுள்ள வருணணை, அடுக்குத்தொடர் மற்றும் ஒலிக்குறிப்பும் பற்றிக் இக்கட்டுரையில் காண்போம்.
புயல் வருணணை:-
கொளுத்தும் வெயில் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டது. பாண்டியன் அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் கும்மிருட்டு ஆனது. காற்றில்லாமல் ஒரே இறுக்குமானது. இடிமுழக்கத்துடன் மின்னல் வானத்தைப் பிளந்தது. வானம் உடைந்தன. வெள்ளம் கொட்டியது. சூறாவளி ஆடிக் குதித்தது. வானுடன் கடல் கலந்துவிட்டது. மழை தெரியவில்லை. கடல் வெறிக் கூத்தாட்டத்தால் தொங்கான் மூழ்கி சிப்பங்கள் கடலில் நீந்துகின்றன. வானம், கடல், காற்று, மழை ஒன்று சேர்ந்து கூக்குரலிட்டது. வானம் பிளந்து நெருப்பை கக்கியது.
அடுக்குத்தொடர்:-
தொங்கான் நடுங்கித் தாவி தாவி குதிகுதித்தது. பிறகு தொங்கான் குதித்து விழுந்தது நொறுநொறு என்று நொறுங்கியது. சுழன்று கிறுகிறுத்துக் கூத்தாடியது.
ஒலிக்குறிப்பு:-
தொங்கான் தாவி விழுந்தது. சுழல்கின்றது. கடலில் சிலுசிலு மரமரப்பு ஙொய்க் புய்வ், ஙொய்க் புய்வ் என இடி முழக்கம் செய்ய சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன. பகல் இரவாகி உப்புக்காற்று உடலை வருடியது.
முடிவுரை:-
புயலுக்கப் பின்னால் ஐந்தாம் நாள் கரை தென்பட்டது. அடுத்தநாள் முற்பகல் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள். பிலவானிலிருந்து சும்தா வரை புயல் இப்படிப் பயமுறுத்தியது. இத்தகைய வருணனையோடு புயலில் தோணி படும்பாட்டை அழகாய் விவரிக்கின்றார் பா.சிங்காரம்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்
- புயலிலே ஒரு தோணி
- புயலிலே ஒரு தோனி
- கடலிலே ஒரு அலை
- காற்றிலிலே ஒரு போராட்டம்
விடை: புயலிலே ஒரு தோணி
2. ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம் _________யைச் சேர்ந்தவர்.
- கள்ளர்பட்டி
- சிங்கம்புணரி
- புளியம்பட்டி
- வங்கம்புணரி
விடை: சிங்கம்புணரி
3. ப.சிங்காரம் _________ நாளிதழில் பணியாற்றினார்.
- தினமலர்
- இந்து
- தினத்தந்தி
- சுதேசிமித்திரன்
விடை: தினத்தந்தி
4. தொங்கான் என்பதன் பொருள்
- மாலுமி
- படகு
- கப்பல்
- தோனி
விடை: கப்பல்
குறுவினா
1. கப்பித்தான், தொங்கான் பொருள் தருக
- கப்பித்தான் – தலைமை மாலுமி (கேப்டன்)
- தொங்கான் – கப்பல்
2. புயலின் பெயர்கள் எதற்கு உதவும்?
புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்புக்
குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
3. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது?
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.
4. புயல்களுக்குப் பெயர் வைப்பது எது?
புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம்
5. உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் புயல்களுக்கு பெயர் வைக்க எத்தனை பெயரைப் பட்டியலிட்டுள்ளது?
உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
6. புயலுக்கு பெயர் வழங்கியுள் நாடுகள் எவையெவை?
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து
7. இந்தியா புயலுக்க கொடுத்த புயலின் பெயர்களை எழுதுக.
பயன்படுத்தப்பட்ட பெயர்கள்
அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்),
கடைசியாக
லெஹர் (அலை).
இன்னும் வரவிருப்பவை
மேக், சாஹர், வாயு.
8. இலங்கை புயலுக்கு தந்த பெயர் எது?
இலங்கை புயலுக்கு தந்த பெயர் ‘கஜா’
9. ‘பெய்ட்டி’ புயல் பெயர் தந்த நாடு எது?
அடுத்து வந்த ‘பெய்ட்டி’ புயல் பெயர் தாய்லாந்து தந்தது.
10. இடம்புரிப் புயல்கள் தாக்கும் இடங்களை யாவை?
வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை , ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்களும் இடம்புரிப் புயல்கள்!
11. வலம்புரிப் புயல்கள் தாக்கும் இடங்களை யாவை?
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்!
12. கொரியாலிஸ் விளைவை கண்டுபிடித்தவர் யார்?
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார்.
13. கொரியாலிஸ் விளைவு என்றால் என்ன?
புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.
14. பிலவான் எங்குள்ளது
பிலவான் இந்தோனேசியாவில் உள்ளது
சில பயனுள்ள பக்கங்கள்