Tamil Nadu 11th Standard Tamil Book மெய்ம்மயக்கம் Solution | Lesson 2.6

பாடம் 2.6. மெய்ம்மயக்கம்

11ஆம் வகுப்பு தமிழ், மெய்ம்மயக்கம் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 2.6. மெய்ம்மயக்கம்

I. குறுவினா

ய், வ், ஞ், ட், ற், ந் மெய்களுக்கான வேற்றுநிலை, உடனிலை மெய்மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக

மெய்கள்வேற்றுநிலை மெய்மயக்கம்உடனிலை மெய்மயக்கம்
ய்செய்யாறுவாய்மை
வ்செவ்வாய்தெவ்யாது
ஞ்விஞ்ஞானம்மஞ்சள்
ட்கட்டம்காட்சி
ற்வெற்றிபயிற்சி
ந்செந்நெறிதந்த

II. சிறுவினா

தமிழ்நெடுஞ்கணக்கு வரிசையில் இனவெழுத்துகளின் பங்கைக் குறிக்க

சொற்களின் இடையில் மெல்லின எழுத்துகளுக்குப்பின் வல்லின மெய்கள் மட்டுமே வருவதை இனவெழுத்துக்கள் அல்லது நட்பெழுத்துக்கள் என்பர்

எ.கா :

  • ங் – க் (அங்கம்)
  • ஞ் – ச் (பஞ்சம்)
  • ண் – ட் (பண்டம்)
  • ந் – த் (சந்தம்)
  • ம் – ப் (கம்பம்)
  • ன் – ற் (தென்றல்)

கூடுதல் வினாக்கள்

I. குறுவினா

1. மெய்மயக்கம் என்றால் என்ன? அதன் வகைகளை கூறு.

சொல்லின் இடையில் மெய்யெழுத்துக்கள் அடுத்து அடுத்துவருவது மெய்மயக்கம் எனப்படும். இது

  • உடனிலை மெய்மயக்கம்
  • வேற்றுநிலை மெய்மயக்கம்

என இருவகைப்படும்.

2. உடனிலை மெய்மயக்கம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக

சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

எ.கா : அச்சம், எச்சம், மொத்தம், சாத்தன், அப்பம், கப்பம்

3. எந்தெந்த மெய்யெழுத்துக்கள்  தம் மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உடனிலை மெய்மயக்கமாக வரும்?

க், ச், த், ப் மெய்யெழுத்துக்கள்  தம் மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உடனிலை மெய்மயக்கமாக வரும். இந்த மெய்யெழுத்துக்கள் அருகில் அவற்றுக்குரிய எழுத்து வரிசை மட்டுமே வரும். பிற எழுத்துக்கள் வரா. அவ்வாறு வந்தால்  அச்சொல் தமிழ்ச்சொல்லாக இருக்காது.

4. வேற்றுநிலை மெய்மயக்கம் விவரிக்க

  • சொற்களின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்து தொடர்ந்து வருவது வேறுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.
  • தமிழில் ர், ழ் ஆகிய இரண்டும் மெய் எழுத்துக்களுடன் சேர்ந்து வராமல் பிற மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்து வரும். எனவே இவவ்விரு மெய்யெழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டும் உரியனவாம்

எ.கா :

  • ர் – தேர்தல், உயர்வு
  • ழ் – வாழ்பவன், சூழ்க

5. ஈரொற்று மெய்மயக்கம் என்றால் என்ன?

தனிச்சொற்களிலோ கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய ஈரொற்றாய் வரும் (மூன்று மெய்களாக மயங்கி வரும்) இதனை ஈரொற்று மெய்மயக்கம் என்பர்.

  • ய் – காய்ச்சல், நாய்க்கால்
  • ர் – உயர்ச்சி, தேர்க்கால்
  • ழ் – வீழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி

இலக்கணத் தேர்ச்சி கொள்

பத்தியைப் படித்து மயங்கொலிப் பிழைகளைத் திருத்துக.

வேலன் நூலகம்  செண்றான். வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழந்து நிண்றான். அன்டங்கள் குறித்த புத்தகங்களை கன்டான். அந்தப் புத்தகங்களிலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொன்டு நெஞ்சம் மகிழ்ன்தான்.

விடை:

வேலன் நூலகம்  சென்றாள். வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கண்டு மகிழந்து நின்றான். அண்டங்கள் குறித்த புத்தகங்களை கண்டான். அந்தப் புத்தகங்களிலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு நெஞ்சம் மகிழ்ந்தான்.

மெய்ம்மயக்கச் சொற்களை வகைப்படுத்து

வாய்க்கால்வாழ்கவாழ்ந்தபாக்கம்
சேர்தல்நார்ச்சத்துஎச்சம்மார்கழி
ஆழ்தல்மொத்தம்கப்பல்தாழ்ச்சி
உடனிலை மெய்ம்மயக்கம்
எச்சம், மொத்தம், கப்பல், பக்கம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
வாழ்க, மார்கழி, தாழ்தல், சேர்தல்
ஈரொற்று மெய்ம்மயக்கம்
வாய்க்கால், வாழ்ந்த, நார்ச்சத்து, தாழ்ச்சி

தொடர்களில் உடனிலையாகவும், வேற்றுநிலையாகவும் இடம்பெற்றுள்ள மெய்ம்மயக்கச் சொற்களைக் கண்டறிக

அ) இந்திய விண்வெளி ஆய்வுக்கழம் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆ) நேர்மை என்னும் சிறந்த கொள்கையைச் சார்ந்து வாழ்பவர்களே உயர்ந்தவர்களாக் கருதப்படுபவர்.

இ) இயற்கை காட்சிகளின் வழியாக எளிய சொற்களைக் கொண்டு, கவிதை எழுதப் பழகவேண்டும்.

ஈ) இந்தியா கணினித் தொழில்நுட்பத் துறையில் வேகமான வளர்ச்சி கண்டு வரலாற்றின் பக்கங்களில் இடம் பெற்று வருகிறது.

உ) வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வு செய்து “ஒற்றைவைக்கோல் புரட்சி” என்னும் நூலை ஜப்பான் அறிஞர் எழுதினார்.

உடனிலை மெய்ம்மயக்கம்வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
அ) வெற்றி, குறிக்கோள், செயல்பட்டுந்திய, விண்வெளி, ஒன்றையே, கொண்டு
ஆ) என்னும், கருதப்படுவர்நேர்மை, சிறந்த, கொள்கை, சார்ந்து, வாழ்பவர், உயர்ந்தவர்
இ) –இயற்கை, காட்சி, சொற்களை, கொண்டு, பழக வேண்டும்.
ஈ) வரலாற்றின், பக்கங்களில் இடம் பெற்றுஇந்தியா, தொழில் நுட்பம், வளர்ச்சி, கண்டு
உ) வைக்கோல், பற்றி, ஒன்றை என்னும் ஜப்பான்சிறந்த, ஆய்வு, செய்து, புரட்சி

மொழியை ஆள்வோம்

I. சான்றோர் சித்திரம்

ஆபிரகாம் பண்டிதர் (1859 – 1930)

தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆபிரகாம் பண்டிதர் தென்காசிக்கு அருகேயுள்ள சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில் பிறந்தவர். இளமையிலேயே புகைப்படக்கலை, அச்சுக்கலை, சோதிடம், மருத்துவம், இசை, ஆகிய துறைகளில் பெரு விருப்பம் கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதன் நுட்பங்ககளை பயின்றார். திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றும்போதே சித்த மருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று மக்களால் அன்புடன் பண்டுவர் (மருத்துவர்) என்று அழைக்கப்பட்டார். சில ஆண்டுகள் பணியாற்றிய பின் அதைவிடுத்து முழுமையாகச் சித்த மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். தஞ்சையில் குடியேறினார். மக்கள் அவரைப் பண்டிதர் என அழைக்கத் தொடங்கினார். பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் ஆழ்ந்து கற்று, சங்கீத வித்தியா மகாஜனசங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி, தமது சொந்தச் செலவிலேயே தமிழிசை மாநாடுகள் நடத்தினார். அனைத்திந்திய அளவில் நடந்த இசை மாநாடுகளுக்கும் சென்று உரையாற்றினார். அவருடைய இசைத்தமிழ் தொண்டின் சிகரம் கருணாமிர்த் சாகரம் எழுபத்தோராண்டுகள் வாழ்ந்து தமிழக்குத் தொண்டு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

வினாக்களுக்கு விடையளிக்க

1. உடனிலை மெய்ம்மயக்கச் சொற்களை எடுத்து எழுதுக.

இயக்கத்தின், புகைப்படக் கலை, அச்சுக்கலை, சித்த மருத்துவம், பெருவிருப்பம், கிடைக்கும், திண்டுக்கல்லில், அழைக்கப்பட்டார், செலுத்தினார், மக்கள், வித்தியா, அமைப்பை, உருவாக்கி, நடத்தினார், இசைத்தமிழ், எழுபத்தோராண்டுகள், தமிழுக்கு

2. வேற்றுநிலை மெய்ம்மயக்கச் சொற்களை எடுத்து எழுதுக.

கருணாமிர்த, ஆழ்ந்து, சங்கீத, வாழ்ந்து

3. உடனிலை மெய்ம்மயக்கமாகவும், வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் எழுதி, மெய்களை அடிக்கோடிடுக.

உடனிலை மெய்ம்மயக்கம்வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
போற்றப்படும், அருகேயுள்ள, என்னும், சிற்றூர், கற்று, உரையாற்றினார்ந்தை, பண்டிதர், சாம்பவர், பிறந்தவர், நுட்பங்களை, பயின்றார்,  அன்புடன், பண்டுவர், ஆண்டுகள்

4. கீழ்க்காணும் வடமொழிச் சொற்களைத் தமிழாக்குக

அ) சங்கீதம்

  • இசை

ஆ) வித்தியா

  • அறிவு

இ) மகாஜனம்

  • அதிகாரம் பெற்றவர்

ஈ) சாகரம்

  • கடல்

5. இலக்கணக்குறிப்பும், பகுபத உறுப்பிலக்கணம் தருக

அ) பயின்றார், ஆ) தொடங்கினார்

இலக்கணக்குறிப்பு

  • பயின்றார் – பலர்பால் வினைமுற்று
  • தொடங்கினார் – பலர்பால் வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம்

அ) பயின்றார் = பயில் + ற் +ஆர்

  • பயில் – பகுதி
  • ற் – ல்-ன் ஆனது விகாரம், இறந்தகால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

ஆ) தொடங்கினார் = தொடங்கு + இன் + அர்

  • தொடங்கு – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

மொழிபெயர்க்க

1. Just living is not enough. One must have sunshine, freedom and a little flower – Hans Anderson.

பெயருக்கு வாழ்வது வாழ்க்கையல்ல, ஒவ்வொருவருடைய வாழ்க்கை ஒளிமயமானதாகவும், சுதந்திரமாகவும், மலர்களைப் போன்று மணமும் அழகும் உள்ளதாக அமைய வேண்டும். – ஹேன்ஸ் ஆண்டர்சன்

2. In nature, light creats the colour. In the picture, colour creates the light – Hans Hofmann

இயற்கை ஒளி வண்ணங்களை உருவாக்குகிறது. ஓவியம் வண்ணங்கள் ஒளியை உருவாக்குகிறது – ஹான்ஸ் ஹோஃப்மான்

3. Look deep into nature and then you will – understand everything better – Albert Einstein

இயற்கையை ஆழமாகப் பாருங்கள், அனைத்தையும் தெளிவாக புரிந்து கொள்ளலாம் – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

4. Simplicity is nature’s first step, and the last of art – Philip James Bailey.

எளிமை என்பது இயற்கையின் முதற்படி; அதுவே கலையின் இறுதிப்படி ஆகும் – பிலப் ஜேம்ஸ் பெய்லி

5. Roads were made for journeys not destination – Confucius.

பாதைகள் என்பது பயணங்களுக்கானது. இலக்குகளுக்கானது அல்ல – கன்ஃபூஷியஸ்

III. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

1. உலை, உளை, உழை

  • மன உளைச்சல் தீரவும், வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்.

2. வலி, வளி, வழி

வலி – நோய், வளி – காற்று, வழி – பாதை

  • வளி வேகமாக வீசியதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு முகிலன் வழி தெரியாமல் அலைந்தனால் அவனுக்கு கால் வலித்து.

3. கலை, களை, கழை

கலை – சாத்திரம், களை – முகவழகு, கழை – மூங்கில்

  • கழை மேல் நடக்கும் கலையில் சிறந்த பெண்ணின் முகம் களையாக இருந்தது.

4. கனை, கணை

கனை – குரல் ஒலி, கணை – அம்பு

  • போர்களத்தில் கணையால் அடிப்பபட்ட குதிரை கனைத்தது.

5. குரை, குறை

குரை – ஒலி, குறை – சிறிது, சுருங்குதல்

  • எங்கள் வீட்டிற்கருகில், இப்போதெல்லாம் நாய்கள் குரைக்கும் ஓசை குறைந்துவிட்டது.

5. பொரி, பொறி 

பொரி – நெல் பொரி, பொறி – இயந்திரம்

  • கண்ணன் பொரியைத் தின்று கொண்டே பொறியில் இருந்த பழுதைச் சரிபார்த்தான்.

IV. கீழ்காண் விளம்பரத்தைப் பத்தியாக மாற்றி அமைக்க

இயற்கை உணவுத் திருவிழா

11ஆம் வகுப்பு தமிழ், மெய்ம்மயக்கம் பாட விடைகள் - 2021

“உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!” என்ற திருமூலர் வாக்கினை மெய்பிக்கும் இயற்கை உணவுத் திருவிழா, சென்னையில் உள்ள தீவுத்திடலில் தை மாதம் 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவ்விழாவானது மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். இங்கு ஆவாரம்பூச்சாறு, குதிரைவாலிப் பொங்கல், வாழைப்பூவடை, திணைப் பணியாரம், வல்லாரை அப்பளம், முடக்கத்தான் தோசை, தூதுவளைச்சாறு, சாமைப் பாயாசம், கேழ்வரகு உப்புமா, கம்புப் புட்டு, அகத்தி பூ போண்டா, முள் முருங்கை அடை ஆகியவையும் இவை போன்ற இன்னும் பல உணவு வகைகளும் இங்குக் கிடைக்கும்.

மொழியோடு விளையாடு

I. நயம் பாராட்டுக

மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே! ஒரு
வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே!

வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும்
வாடிவாடிப் போவதேனோ? வெண்ணிலாவே!

கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்
கூட்டினில் உறங்குவாயாே? வெண்ணிலாவே!

பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே!  நீயும்
பாரில் வர அஞ்சினையாே? வெண்ணிலாவே!

– கவிமணி

மோனைத்தொடை

  • ளர்ந்து – வாடி
  • கூகை – கூட்டினில்
  • ந்தடிப்போம் – பாரில்

மோனைத்தொடை

  • வெள்ளி – வர்ந்து
  • வாடி – கூட்டினில்

இயைபுத்தொடை

  • வெண்ணிலவே

அணி நயம்

  • உவமையணி பயின்று வந்துள்ளது. “போல” உவமஉருபு வெளிப்படையாக அமைந்து வந்துள்ளதால் இது உவமை அணி ஆயிற்று.

கற்பனை நயம்

  • நிலவு வளர்வது தேய்வது பற்றி கூற வந்த கவிஞர், வளர்ந்து வளர்ந்து வந்த பிறகு வாடி வாடிப் பேனாதாக் குறிப்பிடுகிறார். நிலவு பகலில் தெரியாது. இதனை கூட்டில் உறங்குவதாகக் கூறுகிறார். இவ்வாறு கற்பனை ததும்பத் பாடியுள்ளார்.

அணிநயம்

  • இனிய சந்த நயத்துடன் பொருந்தி, வேறுபட்ட பல் சீர்கள் அமைந்து இசையமைத்துப் பாடுவதற்கேற்ப இப்பாடல் திகழ்கின்றது.

II. புதிர்களில் மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடிக்க

1. ஐந்தெழுத்துக்காரன்
முதலிரண்டோ பாட்டெழுதுபவரின் பட்டம் (கவி)
இரண்டும் மூன்றுமோ பசுப்பால் என்பதன் பின் இறுதி (ஆவின்)
கடைசி இரண்டெழுத்தோ மானினத்தின் ஒருவகையாம் (கலை)
இரண்டம் ஐந்துமோ பொருளை விற்கத் தேவையாம் (விலை) – அது என்ன?

  • கவின்கலை

2. இறுதி இரண்டெழுத்தோ
பழத்தின் முந்தைய பச்சை நிலை (காய்)
தமிழ்க்கடவுளின் முற்பதியை முதிலிரு எழுத்தில் வைத்திருக்கும் (முரு)
நடுவிலோ ஓரெழுத்து ஒருமொழி (கை)
அதற்கும் முன் பொட்டு வைத்த ஙகரம் (ங்)
சேர்த்தால் காயாவன் (காய்)
பிரித்தால் நிலைமொழியில மரமாவன் (முருங்கை)
ஏழெழுத்துக்காரன் அவன் யார்?

  • முருங்கைக்காய்

III. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கைப் பாதுகாப்பு குறித்த முழுக்கத்த தொடர்கள் எழுதிக் காட்சிப்படுத்துக

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

  • நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டைத் தவிர்ப்போம்!
  • காற்று மாசுபடுவதை தடுப்போம்!
  • நீரையும் காற்றையும் தூய்மையாக்குவோம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!

இயற்கைப் பாதுகாப்பு

  • மரங்கள் வெட்டுவதை தவிர்ப்போம்!
  • காடுகள் மற்றும் நீர் நிலையங்களை காப்போம்!
  • இயற்கை வளங்களை காப்போம்!

கலைச்சொல் அறிவோம்

  1. இயற்கை வேளாண்மை – Organic Farming
  2. மதிப்புக்கூட்டுப் பொருள் – Value Added Product
  3. வேதி உரங்கள் – Chemical Fertilizers
  4. வேர் முடிச்சுகள் – Root Nodes
  5. ஒட்டு விதை – Shell Seeds
  6. தூக்கணாங்குருவி – Weaver Bird
  7. தொழு உரம் – Farmyard Manure
  8. அறுவடை – Harvesting

அறிவை விரிவு செய்

  • இயற்கை வேளாண்மை – கோ. நம்மாழ்வார்
  • பனைமரமே பனைமரமே – ஆ. சிவசுப்பிரமணியன்
  • யானைகள்-அழியும் பேருயிர் – ச. முகமது அலி, க. யோகானந்த்
  • பறவை உலகம் – சலீம் அலி. Elephants: Majestic Creatures of the Wild – Shoshani. J.


சில பயனுள்ள பக்கங்கள்