Tamil Nadu 11th Standard Tamil Book பிள்ளைக்கூடம் Solution | Lesson 4.2

பாடம் 4.2. பிள்ளைக்கூடம்

11ஆம் வகுப்பு தமிழ், பிள்ளைக்கூடம் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 4.2. பிள்ளைக்கூடம்

இரா. மீனாட்சி, 1970களில் எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.

இவர் பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்;

ஆசிரியப்பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.

கொடி விளக்கு’ என்னும் நூலிலிருந்து இக்கவி்தை எடுத்தாளப்பட்டுள்ளது.

குறு வினா

இங்கே ஐம்தாண்டு வேம்பு
கோடையில் கொட்டும் பூக்களை
எண்ணச் சொல்கிறார்கள் – எண்ணச் சொல்கிறவர்கள் யார் எண்ணுபவர்கள் யார்?

  • எண்ணச் சொல்கிறவர்கள் : தாழ்மொழியில் கற்பிப்போர்
  • எண்ணுபவர்கள் : தாய்மொழியில் கற்போர்

கூடுதல் வினாக்கள்

I. இலக்கணக்குறிப்பு

  • கற்பிக்கும் – பெயரச்சம்
  • பறந்து, நடக்க, இசைக்க, வீழ்ந்து – வினையெச்சங்கள்

II. பகுபத உறுப்பிலக்கணம்

1. வீழ்ந்து = வீழ் + த்(ந்) + த் + உ

  • வீழ் – பகுதி
  • த் – சந்தி
  • ந்- ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ –  வினையெச்ச விகுதி

2. பறந்து = பற + த்(ந்) + த் + உ

  • பற – பகுதி
  • த் – சந்தி
  • ந்- ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ –  வினையெச்ச விகுதி

3. பயின்று = பயில்(ன்) + ற் + உ

  • பயில் – பகுதி
  • ன் – ஆனது விகாரம்
  • ற் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

4. விரும்புகிறேனன் = விரும்பு + கின்று + ஏன்

  • விரும்பு – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

III. புணர்ச்சி விதிகள்

1. பள்ளிக்கூடம் = பள்ளி + கூடம்

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி பள்ளிக்கூடம் என்றாயிற்று.

2. ஐம்பதாண்டு = ஐம்பது + ஆண்டு

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” விதிப்படி ஐம்பத் + ஆண்டு என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ஐம்பதாண்டு என்றாயிற்று.

3. தட்டுக்கூடை = தட்டு + கூடை

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி தட்டுக்கூடை என்றாயிற்று

4. சர்க்கரைப் பண்டம் = சர்க்கரை + பண்டம்

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி சர்க்கரைப் பண்டம் என்றாயிற்று

5. குறுஞ்செடி = குறுமை + செடி

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி குறு + செடி என்றாயிற்று.
  • “இனமிகல்” என்ற விதிப்படி குறுஞ்செடி என்றாயிற்று.

IV. பலவுள் தெரிக

1.  கீழ் உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க 

அ, கொட்டும் பூக்களை1. குறிக்கச் சொல்கிறார்கள்
ஆ. தியானிக்கும் நேரத்தை2. ஓவியமாகத் தீட்டச் சொல்கிறார்கள்
இ. எறும்புகளின் வேகத்தை3. கவிதை எழுதச் சொல்கிறார்கள்
ஈ. மழைத்துளிகளின் வடிவத்தை4. எண்ணச் சொல்கிறார்கள்
5. அளக்கச் சொல்கிறார்கள்
  1. அ – 2, ஆ – 1, இ – 4, ஈ – 3
  2. அ – 1, ஆ – 3, இ – 5, ஈ – 2
  3. அ – 3, ஆ – 2, இ – 1, ஈ – 5
  4. அ – 4, ஆ – 1, இ – 5, ஈ – 2

விடை : அ – 2, ஆ – 1, இ – 4, ஈ – 3

2. பிள்ளைக்கூடம் என்னும் கவிதை இடம்பெற்ற நூல் ___________

  1. சுடுபூக்கள்
  2. மறுபயணம்
  3. வாசனைப்புல்
  4. கொடிவிளக்கு

விடை : கொடிவிளக்கு

3. பிள்ளைக்கூடம் என்னும் கவிதையை எழுதியவர் ___________ 

  1. இரா.மீனாட்சி
  2. சு.வில்வரத்தினம்
  3. மீ.ராசேந்திரன்
  4. இரா.மீனாட்சி

விடை : இரா.மீனாட்சி

VI. குறுவினா

1. இரா.மீனாட்சியின் கவிதைத் தொகுப்புகள் யாவை?

  • நெருஞ்சி
  • சுடுபூக்கள்
  • தீபாவளிப்பகல்
  • மறுபயணம்
  • வாசனைப்புல்
  • உதயநகரிலிருந்து
  • கொடிவிளக்கு

2. பிள்ளைகள் எவற்றினைப்போல் நடக்க, இசைக்க, பறக்க வேண்டு என பிள்ளைக்கூடக் கவிதை கூறிகிறது?

  • பிள்ளைகள் காலையில் மயிலுடன் நடக்கவேண்டும்
  • மாமரக் குயிலுடன் கூவி இசைக்க வேண்டம்
  • வண்ணத்துப்பூச்சிகளுடன் பறக்கவேண்டுமெனப் பிள்ளைக்கூடக்கவிதை கூறுகிறது.

3. இரா. மீனாட்சி குறித்துக் குறிப்பெழுதுக

  • புதுச்சேரியில் “ஆரோவில்” என்னும் இடத்தில் இரா.மீனாட்சி வாழ்கிறார்.
  • ஆசிரியர் பணியிலும், கிராம மேம்பாட்டிலும் ஈடுபட்டள்ளார்.
  • இவர் 1970-ல் இருந்து எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.

சில பயனுள்ள பக்கங்கள்