Tamil Nadu 11th Standard Tamil Book பதிற்றுப்பத்து Solution | Lesson 7.3

பாடம் 7.3 பதிற்றுப்பத்து

11ஆம் வகுப்பு தமிழ், பதிற்றுப்பத்து பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 7.3 பதிற்றுப்பத்து

நூல்வெளி

எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து.

சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது, பாடான் திணையில் அமைந்துள்ளது.

முதல் பத்து பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு பாடலின் பெயர் என்பவை இடம் பெற்றிருக்கினறன.

பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டிருக்கிறது.

பாடல்பகுதிக்குப் பாடலுக்குச் சேரலாதனின் படைவீரர் பகைவர் முன் நிரையபாலரைப் போல் (நகரத்து வீரர்கள்) படை வெள்ளமாக நின்றதால் “நிரைய வெள்ளம்” என்ற தலைப்பு இடப்பட்டுள்ளது.

இரண்டாம் பத்தியின் பாட்டுடைத் தலைவன் “இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்”.

இவனைப் பாடிய  குமட்டூர் கண்ணனார். உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியைும் பரிசாகப் பெற்றார்.

சொல்லும் பொருளும்

  • பதி – நாடு
  • பிழைப்பு – வாழ்தல்
  • நிரையம் – நரகம்
  • ஒரீஇய – நோய் நீங்கிய
  • புரையோர் – சான்றோர்
  • யாணர் – புது வருவாய்
  • மருண்டெனன் – வியப்படைந்தேன்
  • மன்னுயிர் – நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
  • தண்டா – ஓயாத
  • கடுந்துப்பு – மிகுவலிமை
  • ஏமம் – பாதுகாப்பு
  • ஒடியா – குறையா
  • நயந்து – விரும்பிய

இலக்கணக்குறிப்பு

  • ஒரீஇய – சொல்லிசை அளபெடை
  • புகழ்பண்பு – வினைத்தொகை
  • நன்னாடு – பண்புத்தொகை
  • துய்த்தல் – தொழிற்பெயர்
  • மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
  • ஒடியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. மருண்டனென் = மருள் (ண்) + ட் + அன் + என்

  • மருள் – பகுதி
  • “ள்” “ண்” ஆனது விகாரம்
  • அன் – சரியை
  • என் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

2. துய்த்தல் = துய் + த் + தல்

  • தய் – பகுதி
  • த் – சந்தி
  • தல் – தொழில்பெயர் விகுதி

புணர்ச்சி விதிகள்

1. மண்ணுடை = மண் + உடை

  • “தனிக்குறில்முன் ஒற்று உயரிவரின் இரட்டும்” என்ற விதிப்படி “மண்ண் + உடை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “மண்ணுடை” என்றாயிற்று.

2. புறந்தருதல் = புறம் + தருதல்

  • “மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்” என்ற விதிப்படி “புறந்தருதல்” என்றாயிற்று.

பலவுள் தெரிக

கூற்று : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பதத்து புறம் சார்ந்த நூல்
காரணம் : சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்

  1. கூற்று சரி; காரணம் தவறு
  2. இரண்டும் சரி
  3. இரண்டிற்கும் தொடர்பு இல்லை
  4. கூற்று தவறு; காரணம் சரி

விடை : இரண்டும் சரி

குறுவினா

செந்துறைப் பாடாண் பாட்டு – துறை விளக்கம் எழுதுக?

  • பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறவது “பாடாண்” எனப்படும்
  • உலகினுள் இயற்கை வகையால் இயன்ற மக்களைப் பாடுதல் செந்துறையாகும்.
  • இவ்வகையில், அமைந்த பாடல் செந்துறைப் பாடாண்பாட்டுத் துறை ஆகும்.

சிறுவினா

சேரநாடு, செல்வவளம் மிக்கது என்ற கூற்றிற்குரிய காரணங்களை குறிப்பிடுக

  • நெடுஞ்சேரலாதன், தன் நாட்டையும், மக்களையும் கண்போல் பாதுகாத்தான்.
  • மக்கள். பசியும் பிணியும் அறியாது, வேற்று நாட்டுக்கும் செல்ல விரும்பாமல் சுற்றம் சூழ வாழ்ந்தனர்
  • புதுவருவாய்ப் பெருக்கமும், ஈந்து உவக்கும் இன்பமும் உடையவன் சேரலாதன்
  • இக்காரணங்களால், சேரநாடு செல்வவளம் மிக்கதாக விளங்கியது

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • கடுந்துப்பு, நல்லிசை – பண்புத்தொகை
  • பிழைப்பு – தொழிற்பெயர்
  • தண்டா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • இகழந்து, கண்டு, நல்கி – வினையெச்சங்கள்
  • புரைவயின் புரைவயின் – அடுக்குத்தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. நல்கி = நல்கு + இ

  • நல் – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2. எய்தி = எய்து + இ

  • எய்து – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

3. தருதல் = தா (தரு) + தல்

  • தா – பகுதி
  • தரு என்றானது விகாரம்
  • தல் – தொழிற்பெயர் விகுதி

புணர்ச்சி விதிகள்

1. நன்னாடு = நன்மை + நாடு

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + நாடு” என்றாயிற்று.
  • “னலமுன் றன ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “நன்னாடு” என்றாயிற்று.

2. நல்லிசை = நன்மை + இசை

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + இசை” என்றாயிற்று.
  • “முன்நின்ற மெய்திரிதல்” என்ற விதிப்படி “நல் + இசை” என்றாயிற்று.
  • “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “நல்ல் + இசை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நல்லிசை” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. “பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி” – இத்தொடரில் “வாழ்தல்” என்னும் பொருளுடைய சொல் ………………..

  1. எய்தி
  2. துய்த்தல்
  3. பிழைப்பு
  4. பதி

விடை : பிழைப்பு

2. இமயத்தில் வில் பொறித்தவன் ………………..

  1. நெடுஞ்சேரலாதன்
  2. உதியன் சேரலாதன்
  3. கரிகாலன்
  4. செங்குட்டுவன்

விடை : நெடுஞ்சேரலாதன்

3. கடம்பர்களை வென்றவன் ……………….

  1. உதியன் சேரலாதன்
  2. கரிகாலன்
  3. செங்குட்டுவன்
  4. நெடுஞ்சேரலாதன்

விடை : நெடுஞ்சேரலாதன்

4. பதிற்றுப்பத்துள் இரண்டாம் பதத்தை பாடியவர் ……………….

  1. கபிலர்
  2. குமட்டூர்க் கண்ணனார்
  3. பரணர்
  4. ஒளவையார்

விடை : குமட்டூர்க் கண்ணனார்

5. “நிரைய வெள்ளம்” என்னும் தொடரின் பொருள் ……………….

  1. வானுலக வீரர்கள்
  2. நரகத்து வீரர்கள்
  3. வெற்றி பெற்றோர்
  4. கவசமானோர்

விடை : நரகத்து வீரர்கள்

6. கைக்கிளைக்குப் புறனாக அமையும் திணை ……………….

  1. பாடாண்திணை
  2. வெட்சித்திணை
  3. பெருந்திணை
  4. வாகைத்திணை

விடை : பாடாண்திணை

7. வண்ணம் என்பது ……………….

  1. செய்யுள் வேறுபாடு
  2. துள்ளல் ஓசை
  3. சந்த வேறுபாடு
  4. புலமை வேறுபாடு

விடை : சந்த வேறுபாடு

8. பாடப்படும் ஆண்மகனின் ஒழகலாறுகளைக் கூறும் திணை ……………….

  1. பாடாண்
  2. கரந்தை
  3. வஞ்சி
  4. பொதுவியில்

விடை : சந்த வேறுபாடு

9. பொருத்துக

1. சான்றோர்அ. யானர்
2. புது வருவாய்ஆ. கடுந்துப்பு
3. மிகு வலிமைஇ. மருண்டனென்
4. வியப்படைந்தேன்ஈ. புரையோர்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறுவினா

1. வண்ணம், ஒழுகு வண்ணம் – விளக்குக

“வண்ணம்” என்பது சந்த (ஓசை நய) வேறுபாடாகும்

“ஒழுகு வண்ணம்” என்பது ஒழுகிய (நெகிழ்ந்த) ஓசையால் சொல்லுதலாகும்.

2. தூக்கு, செந்தூக்கு விளக்குக

“தூக்கு” என்பது, செய்யுள் அடி அளவை வரையறை செய்வதாகும்.

“செந்தூக்கு” என்பது வஞ்சிப் பாவின் இறுதி அடி போன்றோ, ஆசிரியப்பா அடியின் இறுதி போன்றோ அமைவதாகும்.

3. திருவள்ளுவர், சிறந்த நாடு குறித்துக் கூறும் செய்தி யாது?

மிகு பசியும், தீராநோயும் பெரும்பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

4. சேரலாதன் எச்சிறப்புகளைக் குமட்டூர்க் கண்ணனார் புகழ்ந்து பாடியுள்ளார்?

சேரலாதனின் நாடுகாத்தல் சிறப்பையும், கொடைச்சிறப்பையும் குமட்டுக் கண்ணனார் புகழ்ந்து பாடியுள்ளார்.

5. சேரலாதனைக் குறித்து நீ அறிந்தன யாவை?

  • உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் நெடுஞ்சேரலாதன்
  • இமயம் வரை படை நடத்தி வெற்றி பெற்றவன்.
  • கடம்பர்களை வென்று, தன் வீரர்களுகக்கு கவசமாக விளங்கியவன்.
  • தமிழின் சிறப்பை உலகரியச் செய்தவன்.

6. பாடான் திணை விளக்குக

  • பாடு + ஆண் + திணை = பாடாண்திணை
  • பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறவது
  • அதாவது ஒரு சிறந்த தலைவனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலிய பண்புகளை ஆராய்ந்து கூறவதாகும். கைக்கிளைத் திணைக்குப் பாடான் திணை புறனாகும்.

7. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியவர் யார்? பெற்ற பரிசில்கள் யாவை?

  • இமயவரம்பன் நெடுஞச்சேரலாதனைப் பாடியவர் குமட்டூர் கண்ணனார்.
  • அதற்காக உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசில்களாகப் பெற்றார்.

9. சேரநாட்டு மக்கள் புலம் பெயர்ந்ததில்லை – ஏன்?

  • செல்வவளம் மிக்கது சேரநாடு
  • அச் சேரநாட்டு மக்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன் கண்போலப் பாதுகாத்தான்.
  • எனவே, சேர நாட்டு மக்கள் புலம் பெயர்ந்ததில்லை
  • வேற்று நாடு சென்று குடியேறுவதையும் விரும்பியதில்லை

10. பதிற்றுப்பத்துக் குறித்துக் குறிப்பெழுதுக

  • எட்டுத்தொகை நூல்களுள், புறபொருள் குறித்த நூல் பதிற்றுப்பத்து.
  • இது, சேர மன்னர்கள் பத்துபேரின் சிறப்புகளை எடுத்தியம்புகிறது.
  • புறப்பொருள்களுள், “பாடான் திணை” குறித்தமைந்த நூல்.
  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் ஆகியன இடம் பெற்றிருக்கும்.
  • பாடலில் இடம்பெறும் சிறந்த சொற்றொடர், அப்பாடலுக்குத் தலைப்பாக இடப்பட்டிருக்கும்.
  • இத்தொகை நூலுள், முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை

 

சில பயனுள்ள பக்கங்கள்