Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 1.2 – தமிழ்மொழியின் நடை அழகியல்

பாடம் 1.2. தமிழ்மொழியின் நடை அழகியல்

12ஆம் வகுப்பு தமிழ், தமிழ்மொழியின் நடை அழகியல் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 1.2. தமிழ்மொழியின் நடை அழகியல்

நூல்வெளி

தி.சு.நடராசன் எழுதிய ‘தமிழ் அழகியல்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு.நடராசன் குறிப்பிடத்தக்கவர்.

திறனாய்வாளராகப் பரவலாக அறியப்படும் இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

பலவுள் தெரிக

1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

  1. யாப்பருங்கலக்காரிகை
  2. தண்டியலங்காரம்
  3. தொல்காப்பியம்
  4. நன்னூல்

விடை : தொல்காப்பியம்

2. கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

  1. கருத்து 1 சரி
  2. கருத்து 2 சரி
  3. இரண்டு கருத்தும் சரி
  4. கருத்து 1 சரி, 2 தவறு

விடை : இரண்டு கருத்தும் சரி

3. பொருத்துக

அ) தமிழ் அழகியல்1) பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ2) தி.சு. நடராசன்
இ) கிடை3) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி4) கி. ராஜநாராயணன்
  1. 4, 3, 2, 1
  2. 1, 4, 2, 3
  3. 2, 4, 1, 3
  4. 2, 3, 4, 1

விடை : 2, 3, 4, 1

குறுவினா

1. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

  • ‘நடைபெற்றியலும்’ (கிளவியாக்கம், 26) என்றும் ‘நடைநவின்றொழுகும்’ (செய். 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
  • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்
  • மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.

2. “படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக”– இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.

ஓசை நயமிக்க சொற்கள்

படாஅம் ஈத்த, கெடாஅ நல்லிசை, கடாஅ யானை, நல்லிசை

ஓசை நயமிக்க சொற்கள்

  • படாஅம், கெடாஅ, கடாஅ – செய்யுளிசையளபெடைகள்
  • ஈத்த – பெயரெச்சம்
  • நல்லிசை – பண்புத்தொகை

3. விடியல், வனப்பு –1. சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் –விளக்குக. இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.

பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கம் கதிரவனின் தோற்றம் வனப்பை எடுத்துரைக்கும்.

சிறுவினா

1. சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் –விளக்குக.

  • எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.
  • சங்கப்பாடல்களில் ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
  • இதனையே அந்தப் பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்தடு தானை மூவிருங்கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

  • உயிர் ஒலிகள் குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக விளங்கியதை உணர்த்தும்.

சான்று

“படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை கடாஅ யானைக்” – இவ்வரிகள் ஒலிக்கோலத்தின் பண்பை உணர்த்துகிறது.

நெடுவினா

கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

கவிதையின் நடையைக் கட்டமைப்பன

பாட்டு அல்லது நடைஅழகியியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் முக்கியமானவை

கவிதை – நடையியல்

மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும் அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்துசக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது . கவிதையின் இயங்காற்றல் தான் நடை.  நடைபெற்றியலும்’ (கிளவியாக்கம், 26) என்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஒலிக்கோலங்கள்

எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந் து கலைவடிவம் கொள்கின்றன. இதனையே அந்தப் பனுவலின் – பாடலின் – ஒலிப்பின்னல் என்கிறோம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக

இதில் பல உயிர் ஒலிகள் வருகையும் திரும்பவரல் தன்மையும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன.இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு.

சொற்புலம்

சொல் வளம் என்பது, ஒரு பொருள் குறித்து வரும் பல சொல்லாய்ப் பல பொருள் குறித்துவரும் ஒரு சொல்லாய் வருதலும் பல துறைகளுக்கும் பல சூழல்களுக்கும் பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும் உணர்வும் தெளிவும் கொண்டதாய் வருதலும் என்று செழிப்பான தளத்தில் சொல், விளைச்சல் கண்டிருப்பதைக் குறிப்பது ஆகும். சங்க இலக்கியத்தில் இது மலர்ந்தும் கனிந்தும் கிடக்கிறது

முல்லைக்கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன. சொல்வளம் என்பது, தனிச் சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்;

தொடரியல் போக்குகள்

ஒலிக்கோலமும் சொற் புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் நடந்தும் ஏறியிறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயஙகுகின்றன.

தாெடர்மைப்பு

தாெடர்மைப்பு என்பது, எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவதே மரபு. ஆனால் சங்கப் பாடல்கள் பலவற்றில் இது பிறழ்ந்துவருகிறது.

சான்று ; பேரெயின் முறவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவு சடங்கு பாடல்

“இடுகவொன்றோ, சுடுகவொன்றோ
படுவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே

இதன் இறுதி அடி பிறழ்வோடு அமைந்துள்ளது. ஏனைய 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வொர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடு முடிகின்றன. இப்படி 18 பண்புகளை  வரிசைபடுத்திய பிறகு, தொகுத்துச் சொல்லுவது போல (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போ – புதைத்தால் புதை, சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது.

இறுதியாக

நடையியல் என்பது வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய நடை அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம். மேலும் சங்க இலக்கியம் அதனுடைய தனித்துவ மிக்க சமூக – பண்பட்டுத் தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாக கொண்டு விட்டது. எனவே, கவிதைகளை கட்டமைக்கும் அழகியல் கூறுகள் சங்க இலக்கியத்தில் பரவிக் காணப்படுகின்றன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. செய்யுளை ஓர் உள்ளமைப்பாக கூறும் நூல்

  1. நன்னூல்
  2. தொல்காப்பியம்
  3. திருக்குறள்
  4. சிலப்பதிகாரம்

விடை : தொல்காப்பியம்

2. காளைகளில் பல இனங்களை காட்டும் நூல்

  1. முல்லைக்கலி
  2. தொல்காப்பியம்
  3. திருக்குறள்
  4. சிலப்பதிகாரம்

விடை : அக்கினி சாட்சி

3. தமிழ்மொழியின் நடை அழகியல் என்னும் கட்டுரையின் ஆசிரியர்

  1. ஒளவை நடசராசன்
  2. பாலசுப்பிரமணியம்
  3. பாரதியார்
  4. தி.சு. நடசராசன்

விடை : தி.சு. நடசராசன்

4. அழகு எனபது ………………… செய்தி

  1. மனிதரின்
  2. காதலரின்
  3. பேரண்டத்தின்
  4. கடவுளரின்

விடை : பேரண்டத்தின்

5. சங்கப்பாடல்களில், தொடரியில் பிறழ்வு பெரிது காணப்படுவது

  1. பாடலின் முதலில்
  2. பாடலின் நடுவில்
  3. பாடலின் இறுதியில்
  4. பாடலின் மூவிடத்தும்

விடை : பாடலின் இறுதியில்

6. ஒரு பொருளை குறித்து வரும்  பலசொல், பல பொருள் குறித்து வரும் ஒருசொல் ………………… எனப்படும்

  1. சொற்புலம்
  2. ஒலிக்கோலம்
  3. சொற்றொடர் நிலை
  4. சொற்பொருள் தொடர்நிலை

விடை : சொற்புலம்

குறுவினா

1. இலக்கியம் எவற்றைத தனக்குரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டியுள்ளது?

பேசுபவன், கேட்பவன் ஆகியோருடைய தனிப்பட்ட சூழல்கள், பேசும்போதும் கேட்கும் போதுமான தனிச்சூழல்கள் ஆகியன மட்டுமல்லாது வரலாறு முழுக்க மொழி, மனித நாக்குகளின் ஈரம் பட்டுக் கிடக்கிறது. அதனையே இலக்கியம், தனக்குரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டியிருக்கிறது.

2. மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?

உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை.

3. முத்தமிழ் ஈன்று தந்த வள்ளல்கள் யாவர்?

அறம், பொருள், இன்பமாகவோ அல்லது வேறு ஏதோ ஓர் உயர்ந்த குறிக்கோளை உணர்த்துவனவாக தமிழ் இலக்கியத்தின் பயன்கள் இருக்க வேண்டும்

4. பாடலின் தளத்தை ஏர் நடத்தி பண்படுத்திப் போகின்றவை எவை?

ஒலிக்கோலம், சொற்புலம், சொற்றொடர் நிலை

5. இலக்கியத்தனம் என்பது யாது?

  • இலக்கியம் என்ற மொழிசார்கலை, மொழியின் தனித்துவமான பண்புகளை இயன்ற மட்டும் தனிக்குரியதாக்கி கொள்கிறது.
  • இலக்கியத்திற்கு ஒரு சிறப்புத்தன்மையைத் தந்து விடுகிறது. இத்தகைய தன்மைதான் கவித்தனம் அல்லது இலக்கியத்தனம் என்று பேசப்படுகிறது.

6. சொல்லில் புதைந்து கிடப்பன யாவை?

  • சொல்லில்தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடக்கின்றன;
  • கலையும் பண்பாடும் வரலாறும் அரசியலும் பொதிந்து கிடக்கின்றன.

7. தொடரியல் வடிவம் செய்யும் பணிகள் யாவை?

ஒலிக்கோலமும் சொற் புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது.

8. தி.சு. நடராசன் குறிப்பு வரைக

  • திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழம் ஆகியவற்றில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

9. சங்கப் பாடல்கள் பலவற்றுள் அமைந்துள்ள மறுதலைத் தொடரியல் போக்குச் சாற்று தந்து விளக்குக.

தமிழ் மொழியில் உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு உள்ளிட்ட இயல்பு வழக்கில் தாெடர்மைப்பு என்பது, எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவதே மரபு. ஆனால் சங்கப் பாடல்கள் பலவற்றில் இது பிறழ்ந்துவருகிறது. இதனைக் கவிதை மறுதலைத் தொடர் என்பர்

சிறப்பாக முடியும் பாடல்களில் இறுதியில் தான் இந்த தொடரியில் பிறழ்வு நிலை பெரிதும் காணப்படுகிறது.

சான்று ; பேரெயின் முறவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவு சடங்கு பாடல்

“இடுகவொன்றோ, சுடுகவொன்றோ
படுவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே! ( புறம் : 239 )

என்ற இப்பாடலில் இடம் பெற்றுள்ள இறுதி அடி ஓர் எளிமையான தொடரியல் பிறழ்வோடு அமைந்திருக்கிறது.

“தொடியடைய தோள் மணந்தனன்” எனத் தொடங்கும் இப்பாடலில்  தொடர்ந்து வரும் 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வொர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடு முடிகின்றன. இப்படி 18 பண்புகளை  வரிசைபடுத்திய பிறகு, தொகுத்துச் சொல்லுவது போல (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போ – புதைத்தால் புதை, சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது. இது சங்கப் பாடலின் மறுதலைத் தொடரியல் போக்குத் தகுந்த சான்றாகும்

சில பயனுள்ள பக்கங்கள்