Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 4.3 – இடையீடு

பாடம் 4.3. இடையீடு

12ஆம் வகுப்பு தமிழ், இடையீடு பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 4.3. இடையீடு

இடையீடு கவிதை, சி. மணியின் (சி. பழனிச்சாமி) ‘இதுவரை’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இக்கவிதை குறியீடுகளைக்கொண்டு அமைந்தது.

அதனால் பன்முகப் பொருள் கொண்டது.

இக்கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.

1959ஆம் ஆண்டுமுதல் ‘எழுத்து’ இதழில் இவரின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.

இவர் ‘நடை’ என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.

இவர் படைத்த இலக்கணம் பற்றிய ‘யாப்பும் கவிதையும்’ என்னும் நூலும், ‘வரும் போகும்’, ‘ஒளிச்சேர்க்கை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

ஆங்கிலப் பேராசிரியரான இவர் ‘தாவோ தே ஜிங்’ எனும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இவர் புதுக் கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்;

இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்;

விளக்கு விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்;

வே. மாலி, செல்வம் என்ற புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

சிறுவினா

இடையீடு – எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?

இடையீடு என்ற கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம் எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன் குறியீடாக குறிப்பிடுகிறது.

குறுவினா

“மூன்றான காலம் போல் ஒன்று” -எவை? ஏன்? விளக்குக.

மூன்றான காலம் போல் ஒன்று” – என்பது எண்ணம், வெளியீடு, கேட்டல்

எண்ணம்,

நம் மனதில் உள்ளவையே எண்ணம்

வெளியீடு

நம் மனதில் எண்ணியதை வெளியிடுவது வெளியீடு

கேட்டல்

  • நாம் வெளியிட்டதை கருத்து வேறுபாடின்றி கேட்பது கேட்டல்
  • எண்ணம் மொழியாக உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தி கேட்கிறவர்கள் சொல்லுகின்ற கருத்துகளைப் புரிதல். இவற்றில் மாற்றமடையலாம்.
  • எப்படி மூன்று காலம் ஒரே நேரத்தில் கூற முடியாதோ அப்படியே இந்த மூன்றும் ஒன்றாக வருவதில்லை.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. கவிஞர் சி. மணியின் கவிதைகள் 1959-ம் ஆண்டு முதல் ……….. .இதழில் வெளிவந்தது?

  1. விளக்கு
  2. நடை
  3. எழுத்து
  4. ஒளிச்சேர்க்கை

விடை : கல்வி

2. கவிஞர் சி. மணி நடத்தி வந்த சிற்றிதழ் ………….

  1. நடை
  2. விளக்கு
  3. யாப்பும் கவிதையும்
  4. ஒளிச்சேர்க்கை

விடை : விளக்கு

3. கவிஞர் சி. மணி வெளியிட்ட கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்கவை

  1. நடை
  2. விளக்கு
  3. யாப்பும் கவிதையும்
  4. ஒளிச்சேர்க்கை

விடை : ஒளிச்சேர்க்கை

4. கவிஞர் சி. மணி மொழியெர்த்த சீன  மெய்யில் நூல்

  1. தாவோ ஜி ஜிங்
  2. தாவோ லி ஜிங்
  3. தாவோ ஜிங்
  4. தாவோ ஸி ஜிங்

விடை : தாவோ ஜிங்

சிறுவினா

1. கல்வி எவற்றையெல்லாம் நமக்கு வழங்கிறது?

  • சாதிக்குமும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையும் தருகிறது.
  • நமக்குத துணை நின்று காக்கும் அறிவையும் வழங்கிகிறது.

2. கற்பித்தல், கற்றல் இரண்டிற்கும் இடையே நிகழும்விளைவுகள் யாவை?

  • கற்பித்தல், கற்றல் இரண்டிற்கும் இடையே இடையீடுகள் நேர்வது உண்டு.
  • எதிர்பாராத நல்ல விளைவிகளும் கிடைப்பது உண்டு.

3. கனியின் சுவை எதைப் பொறுத்தது?

  • கனியின் சுவை என்பது கனியைப் பொறுத்தது அல்ல.
  • மாறாக அதைச் சுவைப்பவரின் பசியையும், சுவையின் முடிச்சையும் சாந்ததாகும்.

4. கவிஞர் சி.மணி பெற்றுள்ள விருதுகளைக் கூறுக.

  • விளக்கு இலக்கிய விருது
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது
  • ஆசான் கவிதை
  • கவிஞர் சிற்பி விருது

5. “மனம்புழுங்கம் பலவுண்டு” என்று கவிஞர் சி.மணி எதனைக் குறிப்பிடுகிறார்?

கணக்கிலடங்கா மாற்றங்களும் இலக்கைத் தவறிய ஏமாற்றங்களும் மனம் வருந்த செய்வதற்கென்று பற்பலவும் இருப்பதாகச் சி.மணி குறிப்பிடுகிறார்.

சிறுவினா

1. குதிரை வைரயக் குதிரையே
   வராது; கழுவதயும் வரலாம்.
   இரணடும் கலக்கலாம – இடம் சுட்டி பொருள் விளக்குக

இடம் :

இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் “இதுவரை” என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள “இடையீடு” என்ற கவிதையில் இம் பெற்றுள்ளது.

பொருள் :

நாம் செல்ல விரும்பிய எல்லாமே சொல்லில் வருவதில்லை. நாம் எண்ணும் எண்ணம் எல்லாவற்றையுமே சொல்லில் கொண்டு வர முடிவதில்லை.

விளக்கம் :

நாம் ஒன்றை நினைத்துப் பேச அது புரிந்து கொள்ளும் விதத்தில் வேறோன்றாகிவிடும் நிகழ்வுகள் பல நேரங்களில் நடைபெற்றிருக்கும். எவ்வாறெனில் ஓவியன் குதிரை வரைய நினைத் வரையும் போது அது பார்ப்பதற்கு குதிரைபோல இல்லாமல் கழுதையைப் போலக் காட்சியளிக்கலம். பல நேரங்களில் இரண்டும் கலந்து கூட தோற்றமளிக்கலாம். அது போன்றுதான் நாம் எண்ணுகின்ற எண்ணம் வெளிவரும்போது புரிந்து கொள்ளும் விதத்தில் நம் எண்ணம் அப்படியே புரிந்து கொள்ளப்படலாம் அல்லது மாற்றுக் கருத்தையும் பெறலாம்.

2. எலிக்குப் பாெறிவைத்தால்
   விரலும் விழுவதுண்டு.
   நீர்தேடி அலையும்பாேது
   இளநீரும் கிடைக்கும் – இடம் சுட்டி பொருள் விளக்குக

இடம் :

இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் “இதுவரை” என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள “இடையீடு” என்ற கவிதையில் இம் பெற்றுள்ளது.

பொருள் :

நாம் செல்ல விரும்பிய எல்லாமே சொல்லில் வருவதில்லை. நாம் எண்ணும் எண்ணம் எல்லாவற்றையுமே சொல்லில் கொண்டு வர முடிவதில்லை.

விளக்கம் :

ஒரு செயலைச் செய்கின்றபொழுது அச்செயலுக்கு மாற்றாக வேறு செயல் நடந்துத் துன்புறுத்தலாம். நாம் சிற குறிக்கோளுடன் செல்லும்பொழுதுக எதிர்பாராத விதமாக பெரிய குறிக்கோளும் நடக்ககலாம், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தலாம். ஆகவே இடையீடுகள் எப்போதும் நம்மிடம் வந்து போகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்