Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 4.4 – புறநானூறு

பாடம் 4.4. புறநானூறு

12ஆம் வகுப்பு தமிழ், புறநானூறு பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 4.4. புறநானூறு

சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தபோது ஒளவையார் பாடிய பாடல் நமக்குப் பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பாடல் இடம்பெற்றுள்ள புறநானூறு, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

இது புறப்பொருள் பற்றியது;

புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.

தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஒளவை அவருக்காகத் தூது சென்றவர்;

அரசவைப் புலவராக இருந்து அரும்பணியாற்றியவர்;

இவர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

சொல்லும் பொருளும்

  • வாயிலோயே – வாயில் காப்போனே
  • வள்ளியோர் – வள்ளல்கள்
  • வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
  • வித்தி – விதைத்து
  • உள்ளியது – நினைத்தது
  • உரன் – வலிமை
  • வறுந்தலை – வெறுமையான இடம்
  • காவினெம் – கட்டிக்கொள்ளுதல்
  • கலன் – யாழ்
  • கலப்பை – கருவிகளை வைக்கும் பை
  • மழு – கோடரி

இலக்கணக் குறிப்பு

  • வயங்குமாெழி – வினைத்தாெகை
  • அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • அறிவும் புகழும் – எண்ணும்மை
  • சிறாஅர் – இசைநிறை அள்பெடை

புணர்ச்சி விதி

எத்திசை = எ + திசை

  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “எத்திசை” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை இத்தொடரில் கலன் உணர்த்தும் பொருள்

  1. போர்க்கருவி
  2. தச்சுக்கருவி
  3. இசைக்கருவி
  4. வேளாண் கருவி

விடை : இசைக்கருவி

குறுவினா

1. ‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?

  • கலைத்தொழில் செய்வோருக்கு சோறு தட்டாது கிட்டும்.
  • கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

சிறுவினா

1. வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக. 

திணை விளக்கம்

பாடண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

சான்று விளக்கம்

  • வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடலில், “பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! என்ற வரி இடம் பெற்றுள்ளது.
  • அதாவது தன்னை நாடிவரும் பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத அரண்மனை அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை
  • தன்னை நாடிவரும் புலவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வாரிவழங்கும் நல்ல உள்ளம் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
  • பரிசிலர் வரும்போது வாயிலை அடைக்காத குணம் உடையவன் என்றதால் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை புலனாகிறது.

பொருத்தம்

தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியன் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • கொல்தச்சர் – வினைத்தாெகை
  • வாயிலோயே – அண்மைவிளி
  • உடையோர் – வினையாலணையும் பெயர்

உறுப்பிலக்கணம்

அறியலன் =  அறி + ய் + அல் + அன்

  • அறி – பகுதி
  • ய் – உடம்பெடுமெய்
  • அல் – எதிர்மறை இடைநிலை
  • அன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி

காவினெம் = காவு + இன் + எம்

  • காவு – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • எம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதி

அத்திசை = அ + திசை

  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “அத்திசை” என்றாயிற்று

இப்பரிசில் = இ + பரிசில்

  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “இப்பரிசில்” என்றாயிற்று.

காட்டகத்து = காடு + அத்து

  • நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் ஒற்று இரட்டும்” என்ற விதிப்படி “காட்டு + அத்து” என்றாயிற்று.
  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “காட்ட் + அத்து” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “காட்டகத்து” என்றாயிற்று

பலவுள் தெரிக.

1.வள்ளியோர் செவிமுதல்” இத்தொடரில், “வள்ளியோர்” என்பது ………….

  1. வலிமையுடையோர்
  2. வள்ளல்கள்
  3. வாயிற்காவலர்
  4. பரிசிலர்

விடை : வள்ளல்கள்

2. பரிசிலர் வள்ளேயார் செவி முதல் விதைத்து …………….

  1. வயங்குமொழி
  2. உள்ளியது
  3. பரிசல் வாழ்க்கை
  4. வரிசை

விடை : வயங்குமொழி

3. வயங்குமொழி விதைத்த இடம் …………..

  1. உரனுடை உள்ளம்
  2. உள்ளயிது
  3. பரிசிலர்க்கு
  4. வள்ளியோர் செவி

விடை : வள்ளியோர் செவி

4. பரிசில் வாழ்க்கை மேற்கொண்டோர் ………….

  1. வள்ளியோர்
  2. உரனுடை உள்த்தர்
  3. வாயிலோன்
  4. பரிசிலர்

விடை : பரிசிலர்

5. இவ்வுலகில் இன்னும் மாய்ந்த விடாதோர் ……………

  1. வள்ளியோர்
  2. அறிவும் புகழும் உடையோர்
  3. வாயிலோன்
  4. பரிசிலர்

விடை : அறிவும் புகழும் உடையோர்

6. கற்றோரது “செம்மாப்பு” என்பதில் “செம்மாப்பு” – பொருள்

  1. பெருமை
  2. புகழ்
  3. வெற்றி
  4. இறுமாப்பு

விடை : இறுமாப்பு

7. புறநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்

  1. புறம், புறப்பொருள்
  2. நானூறு, புறப்பாட்டு
  3. புறம், புறப்பாட்டு
  4. நானூறு, புறப்பொருள்

விடை : இறுமாப்பு

8. “வயங்குமொழி வித்திதாம்” – “வித்தி” என்பதன் பொருள்

  1. விதைத்து
  2. விதி
  3. விதை
  4. புத்தி

விடை : விதைத்து

9. ஒளவையார் அகநானூற்றில் பாடியுள்ள பாடல்கள்

  1. 3
  2. 4
  3. 5
  4. 6

விடை : 5

10. புறநானூற்றில் பயின்று வரும் பா

  1. குறள் வெண்பா
  2. சிந்தியல் வெண்பா
  3. கலிவிருத்தம்
  4. நேரிசை ஆசிரியப்பா

விடை : நேரிசை ஆசிரியப்பா

11. பொருத்துக

1. உரன்அ. கோடரி
2. கலன்ஆ. கருவிகளை வைக்கும் பை
3. கலப்பைஇ. யாழ்
4. மழுஈ. வலிமை
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

12. பொருத்துக

1. பரிசிலர்அ. காடு
2. கல்விஆ. மரங்கள்
3. திசைஇ. சிறுவன்
4. உணவுஈ. கோடாரி
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

13. பொருத்துக

1. வயங்குமொழிஎண்ணும்மை
2. அடையாஇசைநிறை அளபெடை
3. அறிவும் புகழும்வினைத்தொகை
4. சிறாஅர்ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

14. அதியமானின் அரசவைப் புலவர்

  1. பானர்
  2. கபிலர்
  3. ஒளவையார்
  4. ஒக்கூர் மசாத்தியார்

விடை : ஒளவையார்

சிறுவினா

1. புறநானூற்றுப் பாடல்களால் அறியப்படுபவை யாவை?

தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை

2. ஒளவையார் பாடியதாக நமக்கு கிடைத்துள்ள சங்க இலக்கிய பாடல்கள் எத்தனை?

அகநானூறு4 பாடல்கள்
குறுந்தொகை15 பாடல்கள்
நற்றிணை7 பாடல்கள்
புறநானூறு33 பாடல்கள்

3. பாடான் திணை என்றால் என்ன?

  • பாடான் திணை =  பாடு + ஆண் + திணை
  • பாடண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.
  • ஆண்மகனது ஒழுக்கலாற்றைக் கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.

4. கல்வி கற்றோரின் சிறப்பு என்ன?

  • கல்வி கற்றோர் எந்த நிலையிலும் சிறந்தே இருப்பர்.
  • தாமும் எந்நிலை வந்தாலும் கலங்க மாட்டார்கள்.
  • அறிவால் உலகையே சொந்தமாக்கி கொள்வர்.
  • எங்கு சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.

5. கற்றவர்க்கு எங்கு சென்றாலும் உணவு கிடைக்கும் என்பதற்கு ஒளவையார் கூறும் உவமை யாது?

  • மரம் வெட்டுமு் தச்சர் பெற்ற சிறுவர்கள் தங்கள் மழுவோடு (கோடாரி) காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு மரம் கிடைக்காமல் போகுமா? என்பதே உவமை
  • பரிசிலிருக்கு சிறுவரும், கல்விக்கு கோடாரியும், போகும் திசைக்குக் காடும், உணவிற்குக் காட்டில் உள்ள மரங்களும் உவமைகளாகும்.

சிறுவினா

1. புறநானூறு – குறிப்பு வரைக

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
  • புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது.
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
  • சங்ககால மக்களின் வாழ்க்கையை அறிவதற்கு கருவூலமாகத் திகழ்கிறது.
  • தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

2. “எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே” என்ற ஒளவையாரின் செம்மாப்பு கருத்தின் உண்மையை ஆராய்க

  • கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்.
  • கற்றோரின் சொல்லைக் கேட்டு அவர்களுக்கு வாரி வாரி வழங்கினர் பண்டையத் தமிழ் மன்னர்கள்.
  • நல்ல கருத்துக்களை கூறி அரசின் நிர்வாகத்தையும், அரசாட்சியன் நடைமுறையையும் சீர்படுத்தும் பணியைக் கற்றறிந்த புலவர்கள் மேற்கொண்டன.
  • அத்தகைய கற்றறிந்தோரை அரசர்கள் மிகவும் கெளரவித்துப் பரிசுகள் பலவும் வழங்கினர்.
  • பரிசு தர காலதாமதம் ஆனதால் ஒளவையார் வாயில் காவலனிடம் உன் அரசன் ஒருவனை மட்டுமே நம்பி இந்த உலகம் உள்ளது என்று அவன் நினைத்துள்ளானோ?
  • மரம் வெட்டும் தச்சனின் மகன் கோடாரியுடன் காட்டிற்குச் சென்றால அவர்கள் வெட்ட காட்டில் ஏதாவது ஒரு மரம் கிடைக்காமல் போய்விடுமா?
  • அதுபோலவே, கற்றவர்கள் எத்திசை செல்லினும் அத்திசையில் உணவு கிடைக்கும்.
  • கற்றவர்களுக்கு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் புகழ் உண்டாகும்.
  • கல்விக்கு அத்தகைய சிறப்புண்டு என்பதை அறிந்தால் ஒளவையார் செம்பாப்புடன் வாயிற்காவலனிடம் “எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே என்று வாயிற்காவலனிடம் கூறினார்.

3. அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
    வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்
    காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; – இடம் சுட்டி பொருள் விளக்குக

இடம் :

இப்பாடல்அடிகளானது அதியமான் நெடுமான்அஞ்சி பரிசில் தராமல் நீட்டித்தபோது ஒளவையார் பாடியதாகும். இது புற நானூற்றில் 206-ம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :

இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை. இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை. அதனால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம். யாழ் முதலிய இசைக் கருவிகளையும் பைகளில் இட்டுக் கட்டிக் கொண்டோம்.

விளக்கம் :

அறிவு சார்ந்த கருத்துகளை எடுத்துக்கூறி அதியமான் நெடுமான் அஞ்சியடம் பரிசு பெய சென்றார் ஒளவையார். அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் தாழ்த்தியதால் கோபமடைந்த ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சி மட்டும் தான் இந்த உலகில் இருக்கிறானா, இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை. இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை உன் மன்னன் பரிசு தரவில்லை என்றால் என்ன? கலைத் தொழில் வல்ல எங்களுக்கு எங்கு சென்றாலும் உணவு கிடைக்கும். எனவே எங்கள் இசைக்கருவிகளைத் தோளில் எடுத்துவிட்டோம் இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக்கட்டி விட்டோம் என்று கூறுமிடத்தில் இடம் பெற்றுள்ளது.

4. பாடாண் திணை சான்றுடன் விளக்குக

திணை விளக்கம்:

பாடான் திணை =  பாடு + ஆண் + திணை. பாடண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும். ஆண்மகனது ஒழுக்கலாற்றைக் கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.

சான்று:

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்……

என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்

பொருத்தம்:

தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மைளை வெளிப்படுவதால் இப்பாடல் பாடான் திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

5. பரிசில் துறை சான்றுடன் விளக்குக

திணை விளக்கம்

பரிசு வேண்டி வாயிலில் நிற்பது.

சான்று:

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்……

என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்

பொருத்தம்:

தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மைளை வெளிப்படுவதால் இப்பாடல் பாடான் திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

 

சில பயனுள்ள பக்கங்கள்