Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 8.6 – குறியீடு

பாடம் 8.6. குறியீடு

12ஆம் வகுப்பு தமிழ், குறியீடு பாட விடைகள் 2023

கவிதைப்பேழை > 8.6. குறியீடு

இலக்கணத் தேர்ச்சிகொள்…

1. குறியீடுகளைப் பொருத்துக

அ) பெண்1) சமாதானம்
ஆ) புறா2) வீரம்
இ) தராசு3) விளக்கு
ஈ) சிங்கம்4) நீதி
  1. 2, 4, 1, 3
  2. 2, 4, 3, 1
  3. 3, 1, 4, 2
  4. 3, 1, 2, 4

விடை : 3, 1, 4, 2

2) கூற்று : 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
காரணம் : பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தார்கள்.

  1. கூற்று சரி, காரணம் தவறு
  2. கூற்று சரி, காரணம் சரி
  3. கூற்று தவறு, காரணம் தவறு
  4. கூற்று தவறு, காரணம் சரி

விடை : கூற்று சரி, காரணம் சரி

3. சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்

  1. உவமை
  2. உவமேயம்
  3. உத்தி
  4. உள்ளுறை உவமை

விடை : உள்ளுறை உவமை

4) திட்டம் என்னும் தலைப்பில் வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் வரம் எதற்குக் குறியீடாகிறது?

  1. அமுதசுரபி
  2. ஆதிரைப் பருக்கை
  3. திட்டம்
  4. பயனற்ற விளைவு

விடை : திட்டம்

5. மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?

  1. குறியீடு
  2. படிமம்
  3. அங்கதம்
  4. தொன்மம்

விடை : குறியீடு

குறுவினா

1. குறியீட்டு உத்தியில் ஒரு புதுக்கவிதை எழுதுக.

எதிரே
தலைமயிர் தரித்து
கொலு வீற்றிருந்தாள்
உன் நிழல்

(பிரமிள்)

2. வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகளைக் குறிப்பிடுக.

  • வியர்வைக்கு – ஆதிரைப் பருக்கை
  • செழிப்புக்கு – அமுத சுரபி

3. குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக.

  • குறிப்பாக உணர்த்தும் பொருள் சொல் குறியீட்டு உத்தி என்பர்.
  • சுட்டிய பொருளுக்கும் குறியீட்டும்ப பொருளுக்கும் ஏதேனும் ஒரு  தொடர்பு இருத்தல் வேண்டும்.
  • சுட்டும் பொருள் என்பத எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.
  • இத்தொடர்பின் வாயிலாகக் குறியீட்டுப் பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

எகா. தராசு – நீதி

பலவுள் தெரிக

1. Symbol (சிம்பல்) என்பதன் பொருள்

  1. பிரித்தல்
  2. காட்டல்
  3. ஒன்றுசேர்
  4. விட்டு விலகு

விடை : ஒன்றுசேர்

2. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர்.

  1. ஹார்ட்
  2. ஜார்ஜ்
  3. பிரவுன்லி
  4. வில்லியம்

விடை : ஒன்றுசேர்

3. சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்னும் இக்காலத்தில் இலக்கிய உத்தியை ……………. எனலாம்.

  1. புதுக்கவிதை
  2. தொன்மம்
  3. படிமம்
  4. குறியீடு

விடை : குறியீடு

குறுவினா

1. படிமம் என்றால் என்ன?

விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம்.

2. குறியீடு, குறியீட்டியம் சான்றுடன் விளக்குக

  • இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும்.
  • உருவ ஒற்றுமை இருக்கலாம்.
  • அருவமான பண்பு ஒற்றுமை இருக்கலாம்.

சான்று

பெண்ணை – விளக்கு என்பர். குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் என்பர்.

3. குறியீட்டியம் கோட்பாட்டை வளர்த்தவர்கள் யாவர்

பெதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே

4. படிமம் எதன் அடிப்படையில் தோனறும்?

உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் என்பர்.

5. கபிலரின் கலித்தொகை பாடல் வழி குறியீட்டு உத்தியை விளக்குக

  • வேங்கை மரம் பூத்திருக்கிறது.
  • அது புலிபோல் தோற்றமளிக்கிறது.
  • சினம் கொண்ட மதயானை அடிமரத்தை தந்தத்தால் குத்தியது.
  • ஆழப்பதிந்த தந்தம் எடுக்க முடியாமல் முழுங்கியது.
  • இப்படி யானை முழங்கும் நாடை உடையவன். இப்பாடலில் யானை தலைவனுக்குக் குறியீடாக இடம் பெறுகிறது.

6. குறியீடு என்பது ஒரு புதிய வடிவம் அன்று – விளக்குக

  • சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்றும் இலக்கிய உத்திதான் குறியீடு.
  • உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாத, மறைக்க வேண்டுபவை. அதனால் குறிப்பாக உணர்த்தப் பயன்பட்டது.
  • குறியீடு என்பது அகம், புறம் என எல்லா வகைக் கவிதையிலும் குறிப்பாக உணர்த்தப் பயனப்டும் இலக்கிய உத்தியாகும்.

7. வியர்வை கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டுச் செய்தி யாது?

  • ஆதிரையிட்ட பருக்கையினால் அமுத  சுரபி பாத்திரத்தில் உணவு வளர்வது போல உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது.
  • வியர்வைக்கு – பருக்கை
  • செழிப்புக்கு – அமுதசுரபி குறியீடாக அமைகிறது.

8. திட்டம் கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டுச் செய்தி யாது?

  • திட்டங்கள் தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல் எதிராகப் போய்விடுகிறது.
  • வரம் – திட்டத்திற்கும்
  • சாபம் – பயனற்ற விளைவுக்கும் குறியீடாக அமைகிறது.
  • வரங்கள், சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்கே?

மொழியை ஆள்வோம்…

சான்றோர் சித்திரம்

வ.சுப. மாணிக்கம்

பர்மாவில் ரங்கூன் நகரில் உள்ள ஒரு கடையில் அடிப்பையனாகப் (உதவியாள்) பணியாற்றினான் ஒரு சிறுவன். அவனிடம், கடை முதலாளி ஒரு பெயரைக் குறிப்பிட்டு, அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால், ‘முதலாளி இல்லை’ என்று சொல்லுமாறு வற்புறுத்தினார். அந்தச் சிறுவனோ, “நீங்கள் வெளியிலிருந்தால் அவ்வாறு கூறலாம். இல்லாதபோது எப்படிப் பொய் சொல்வது? சொல்ல மாட்டேன்” என்று பிடிவாதமாகக் கூறினார். அவர், வ.சுப. மாணிக்கம்.

தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப. மாணிக்கம். ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறை சாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர். அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார். திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ’தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் ஆற்றல் மிக்கவரான இவர் தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர். தமிழுக்குப் புதிய சொல்லாக்கங்களையும் உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர். ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையான அவருக்குத் தமிழக அரசு அவருடைய மறைவிற்குப் பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்புச் செய்தது.

அவருடைய தமிழ்த்திறத்துக்கு ஒரு பதம்.

“ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்”

வினாக்கள்

1. தமிழின் இதயம் என அறிஞர்களால் போற்றப்பட்டவர் யார்?

2. வ.சு.ப. மாணிகத்தின் பணிகள் பற்றி கூறுக.

3. வ.சுப. மாணிகத்திற்கு என்ன விருது வழங்கப்பட்டது.

4. பிரித்து எழுதுக ;  பேராய்வாளர்

5. புணர்ச்சி விதி தருக ; தமிழாய்வு

விடைகள்

1. தமிழின் இதயம் – வ.சு.ப. மாணிக்கம்

2.

  • அண்ணாமலைப் பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவர்
  • அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ம்றும் முதல்வர்
  • மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்

3. திருவள்ளுவர் விருது

4. பேராய்வளார் =  பெருமை + ஆய்வாளர்

5. தமிழாய்வு = தமிழ் + ஆய்வு

“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தமிழாய்வு”  என்றாயிற்று

தமிழாக்கம் தருக.

I make sure I have the basic good habits which include respecting my elders, greeting people when I meet them, wishing them well when departing etc. Other than this, observing the law, serving the poor and downtrodden, helping the sick and needy, giving shelter to the homeless, assisting someone with a physically challenged etc. are also other good habits of mine. To lead on a peaceful life, I develop other good habits, writing, listening to music, dancing, singing etc. are other such habits which fulfill the needs of my soul.

தமிழாக்கம்

நான் பெரியவர்களை மதிப்பது, பிறரைச் சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது, அவர்கள் புறப்பபடும் சமயத்தில் நன்றி செலுத்துவது போன்ற நல்ல பழக்கங்கள் என்னிடம் இருப்பதை உறுதியாகச் சொல்வேன். இது தவிர, சட்டத்தைக் கவனித்தல், ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு சேவை புரிதல், நோயளிகளுக்குத தேவையான உதவிகளைச் செய்தல், வீடற்றவர்ககுத் தங்குமிடம் அமைத்து தருதல், மாற்றுத்திறாளிகளுக்கு இயன்ற உதவி செயதல் போன்ற மற்ற சில நல்ல பழக்கங்களும் என்னிடம் உள்ளது. ஒரு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள நான் நல்ல பழகங்களை வளர்த்தக் கொள்கிறேன், பாடல் கேட்கிறேன், நடனம் ஆடுகிறேன், எழுதுகிறேன், இசையை ரசிக்கிறேன். இது போன்ற பழக்கங்களால் என் ஆன்மாவின் தேவைகள் பூர்த்தியாகின்றன.

கதையைப் படித்துப் பொருளுணர்ந்து நிகழ்வை உரையாடலாக மாற்றுக.

”எனக்கு சில்க் சட்டை இருக்கே ! உனக்கு இருக்கா !” என்று கெட்டிக்காரத்தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின்மேல் ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டும் கண்ணை இலேசாக மூடிக்கொண்டும் யோசனை செய்தாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்ற பிள்ளைகள். அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ‘ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்தியதேச சரித்திர’ப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருஷம் இந்தியதேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன் னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் ‘படப்போட்டி’யை ஆரம்பித்து விட்டார்கள்.

-’ராஜா வந்திருக்கிறார்’, கு. அழகிரிசாமி

உரையாடல்

ராமசாமி : என்னிடம் சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா?

செல்லையா : …. விழித்தான்

ராமசாமி : உன்னிடம் இருக்கா?

தம்பையா : …. ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்

ராமசாமி : உனக்கு இருக்கா?

மங்கம்மாள் : …. மூக்கின் மேல் விரல் வைத்தாள். கண்ணை லேசாக மூடிக்கொண்டாள்.

ராமசாமி : ஏன் மூன்று பேரும் பதில் சொல்லவில்லை என் கேள்விக்கு?

மூவரும் : …. பதில் இல்லை

(மற்ற பிள்ளைகள் ராமசாமியின் கேள்விக்கு மூவரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தனர். அன்று பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் ஒரு போட்டி வந்தது)

ராமசாமி : என்னிடம் இந்திய தேசிய சரித்திரப் புத்தகம் உள்ளது, உன்னிடம் உள்ளதா?

செல்லையா : என்னிடம் சிவிக்ஸ் புத்தகம் உள்ளது.

ராமசாமி : சரி பரவாயில்லை, போட்டியை ஆரம்பிக்கலாமா?

செல்லையா : சரி

(இருவரும் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டுகிறார்கள். இடையிடையே வரைபடம் உள்ளதா, படம் உள்ளதா என்ற போட்டி விரைவாக நடந்தது. ஆளுக்கு ஒரு பக்கம் பக்கமாகப் புரட்டி போட்டித் தொடர்ந்தது)

ராமசாமி : கடைசிப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்து உன்னிடம் இன்னும் எத்தனைப் பக்கம் இருக்கிறது என்றான்.

செல்லையா : இன்னும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது. உன்னிடம் எத்தனைப் பக்கம் உள்ளது.

ராமசாமி : இது தான் எனது கடைசிப் பக்கம்.

உரை எழுதுவோம்

உங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வர இருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும் விதமாக ஒரு பக்க அளவில் வரவேற்புரை ஒன்றை எழுதுக.

வரவேற்புரை

நமது பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை இருகம் கூப்பி மன மகிழ்வோடு வரவேற்கிறேன்.

முயற்சி செய்து வெற்றி கிடைத்தால் விடாமுயற்சி என்று பாராடுவார்கள். முயற்சி செய்து வெற்றி கிடைக்காவிட்டால் வீண் முயற்சி என்பார்கள். இதுதான் உலகம். ஆனால், நமது அழைப்பிற்கு இசைவு தந்து நம் முன்னே ஒரு வெற்றிக்கு எடுத்துக்காட்டாக அமர்ந்திருக்கும் ஆட்சியாளர் ஒரு அறிவாளர். குறிக்கோள் இல்லாத வாழக்கை துடுப்பில்லாத சவாரி செய்வது போலாகும்.

ஒவ்வொரு மாணவரும் ஏதேனும் ஒன்றைச் சாதித்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளோடு தான் படிக்க வேண்டம். நமது மாவட்ட ஆட்சியரும் பள்ளியிலே பயிலகின்றபோது தான் எதிர்காலத்தில் ஆடசியராக ஆக வேண்டும் என்று உறுதியோடிருந்தவர்.

“முயற்சி திருவினையாக்கும்”என்பதற்கிணங்க அவருடைய முயற்சி பலித்துவிட்டது. இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றும் என்பார்கள். லட்சியத்தை அலட்சியப் படுத்தக் கூடாது. நேற்று செய்தித்தாளிலே நமது மாவடட்ட ஆட்சியர் பேட்டிக் கொடுத்திருந்தார். அதிலே தான் படித்த பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவிற்குப் போவதாகக் கூறியிருந்தார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயென நமது பள்ளியே மகிழ்ந்து போது.

வெற்றி பெறுவதற்கு முன் உலகை நீ அறிவாய், வெற்றி பெற்ற பிறகு உலகம் உன்னை அறியும் என்பதுபோல, நமது ஆட்சியரும் உலகம் அறிநத உயர்ந்த மனிதராகப் காணப்டுகிறார். தான் படித்த பள்ளிக்கு வருகை புரிந்தும், பள்ளியால்  தனக்குப் பெருமை என்று கூறும் ஆட்சியருமடை பேச்சும் நம்மையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிடச் செய்கிறது.

“ஞாலம் கருதினும் கைகூடும்” என்னும் வள்ளுவனின் வாக்கிற்கு இலக்கணமாக நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை மீண்டும் மீண்டும் வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்.

விடைக்கேற்ற வினா அமைத்தல்.

1. குடும்பம் என்ற சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் இடம் பெற்றுள்ளது.

  • குடும்பம் என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

2. நடுவண் அரசு 2005ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.

  • நடுவண் அரசு எந்த ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது?

3. சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன.

  • சாலைகளில் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்க உதவுவது எது?

4. 1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.

  • தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் எந்த ஆண்டு, எவ்விடத்தில் அமைக்கப்பட்டது?

5. “யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்“ என்கிறார் கிரியோர்சன்.

  • ஆவணப்படம் எதனை வெளிப்படுத்துகிறது என கிரியோர்சன் குறிப்பிடுகிறார்?

மொழியோடு விளையாடு…

இலக்கிய நயம் பாராட்டுக.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்.

தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.

கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.

– திரிகூட ராசப்பக் கவிராயர்

திரண்ட கருத்து

ஆண்குரங்குகள் பல வகையான பழங்களை பறித்து பெண் குரங்களுக்கு கொடுக்கின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களை தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் கண்களால் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் சித்தர்கள் மூலைகைகளை வளர்க்கின்றன. மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன.  இதனால் சூரியனின்  குதிரையும் தேர்சச்சக்கரமு் வழுக்கி விழுகின்றன. இததகைய சிறப்புகள் உடையது என்று குற்த்தி தன் மலையை விளக்குகிறாள்.

தொடை நயம்

தொடையற்ற பாக்கள் நடையற்று போகும்

என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு போன்ற நயங்கள் அமைந்துள்ளன.

மோனை

குயவனக்கு பானை, செய்யுளுக்கு மோனை

முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்

சான்று : கானவர்கள் – மன சித்தர், கூனலிளம் – குற்றாலம்

எதுகை

மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது

சான்று : வாரங்கள் – காவர்கள் – தேருவித் – கூலிளம்

இயைபு

இறுதி எழுத்தோ ஒசையோ ஒன்றி வருவது இயைபு

சான்று : கொஞ்சும் – யொழுகும் – வழுகும்

அணி நயம்

கண்ணுக்கு மை அழகு, செய்யுளுக்கு அணி அழகு

அணி என்பதற்கு அழகு என்பது பொருள்  செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி என்பர்

இப்பாடலில் உயற்வ நவிற்சி அணி அமைந்துள்ளது. பாடலின் பொருளை மிகவும் உயர்த்திக் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்

சான்று : மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கற்பனை நயம்

கற்பனை கவிஞனுக்கு கை வந்த கலை

என்பதற்கு ஏற்ப கவிஞர் தன் கற்பனை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

சான்று : தேனருவித் திரையெழும்பி வானின் வழியொழுகும்.

குறுக்கெழுத்துப் புதிர்

 12ஆம் வகுப்பு தமிழ், குறியீடு பாட விடைகள் 2021 - 2022

இடமிருந்து வலம்

1. மயிலையார் கட்டுரை எழுதிய இதழ்களில் ஒன்று (5)

  • குடியரசு

4. தகடூர் மன்னன் பெயரின் பின்பகுதி (3)

  • அஞ்சி

8. ஓய்மா நாட்டு மன்னன் பெயரின் முதல் மூன்றெழுத்து (3)

  • நல்லி

9. பொதினி மலையின் வேறுபெயர் (4)

  • மலைநாடு

16. பொதினி மலை இவ்வாறும் அழைக்கப்படும் (4)

  • வளமலை நாடு

14. சாந்தாதத் கதையின் பின்பாதிப் பெயர் (2)

  • மழை

வலமிருந்து இடம்

2. பறம்பு மலையின் இன்றைய பெயர் (5)

  • பிரான் மலை

4. தகடூரை ஆட்சி செய்தவன் (4)

  • அதிகமான்

5. காரியின் நாடு எவ்வாறு மருவி உள்ளது (3)

  • மலாடு

12. போந்தியு பிலாத்து என்பவரின் பதவி (4)

  • ஆளுநர்

21. செய்யுளின் பெயர்களில் ஒன்று (3)

  • பாடல்

மேலிருந்து கீழ்

3. வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதி (5)

  • கொல்லி மலை

6. முகம் கவிதை ஆசிரியரின் முன்பாதிப் பெயர் (4)

  • சுகந்தி

1. தமிழுக்குத் தலை கொடுத்தவன் (4)

  • குமணன்

10. இரட்சணிய யாத்திரிகத்தின் மூலநூல் ஆசிரியர் பெயர் (6)

  • ஜான் பனியன்

15. நீர்நிலையின் பெயர் (3)

  • கடல்

17. வண்டின் வேறு பெயர் (4)

  • வாகனம்

18. இயேசு பிரானை இவ்வாறும் அழைப்பர் (5)

  • இறைமகன்

கீழிருந்து மேல்

7. நள்ளியின் நாட்டுக்கு இன்று வழங்கும் பெயர் (3)

  • ஊட்டி

8. மயிலையார் ஆய்வு செய்த பல்லவ மன்னன் பற்றிய நூல் (7)

  • நந்திவர்மன்

13. முகம் கவிதையின் ஆசிரியர் பிறந்த ஊர் (5)

  • ஆலாந்துறை

11. ஆற்றுப்படை நூல் ஒன்றின் முன்பாதிப் பெயர் (4)

  • சிறுபாணா

19. உலகம் என்பதன் வேறு பெயர் (3)

  • ஞாலம்

20. நூல்களை வாங்கும் ஆற்றல் —————- இல்லை என்று சொல்வதற்கில்லை (6)

  • மனிதர்க்கு

 

நிற்க அதற்குத் தக…

படிப்போம் பயன்படுத்துவோம் (அலுவலகப் பொருள்கள்)

  • Stamp pad – மை பொதி
  • Stapler – கம்பி தைப்புக் கருவி
  • Folder – மடிப்புத்தாள்
  • File – கோப்பு
  • Rubber Stamp – இழுவை முத்திரை
  • Eraser – அழிப்பான்

அறிவை விரிவு செய்

  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
  • மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி கே. சாலமன்
  • எழு பெருவள்ளல்கள் – கி.வ. ஜகந்நாதன்
  • இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே. சுந்தரராசன்
  • இயேசு காவியம் – கண்ணதாசன்
  • கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்
  • பால்வீதி – அப்துல் ரகுமான்
  • வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு. ராமநாதன்

 

சில பயனுள்ள பக்கங்கள்