Tamil Nadu 3rd Standard Tamil Book Back Questions 2023 – 2024 | Samacheer Kalvi Books

3rd Std Tamil Book 1st Term Solution

You can find the solution for the Samacheer Kalvi 3rd Standard Tamil subject’s first term on this page. It has been clearly explained by a Tamil expert.

Table of Content




3rd Standard Tamil Book – Download

பாடம் 1: தமிழ் அமுது

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. நித்திலம் இச்சொல்லின் பொருள் ………………………

  1. பவளம்
  2. முத்து
  3. தங்கம்
  4. வைரம்

விடை: முத்து

2. செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………

  1. செம்மை + தமிழ்
  2. செந் + தமிழ்
  3. செ + தமிழ்
  4. செம் + தமிழ்

விடை: செம்மை + தமிழ்

3. உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………..

  1. உன்னைத் தவிர
  2. உனைத்தவிர
  3. உன்னை தவிர
  4. உனை தவிர

விடை: உன்னைத் தவிர

II. பின்வரும் சொற்களின் பொருள் தருக 

  1. சுரக்கின்ற​ – ஊறுகின்ற
  2. நித்திலம் – முத்து
  3. விரும்புகின்ற – வேண்டுகின்ற
  4. போற்றி – பாதுகாத்து

III. இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?

  1. தோண்டுகின்ற - வேண்டுகின்ற
  2. ன்னைத் – பொன்னோ
  3. காக்க – வைக்

IV. கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.

3rd Standard Tamil Lesson - Tamil Ulagam - கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.

பொ ள் ன் பொ ருபொன்பொருள்
செ ழ் மி த ந்வணங்கு
ண வ கு ங்நித்திலம்
போ றி ற்செந்தமிழ்
தி ம் த் ல நிபோற்றி
உ கி ல் லஉலகில்

3rd Standard Tamil Book – Download

பாடம் 2: கண்ணன் செய்த உதவி

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள் ……………..

  1. சந்திரன்
  2. சூரியன்
  3. விண்மீன்
  4. நெற்கதிர்

விடை: சூரியன்

2. மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..

  1. மகிழ்ச்சி + அடைந்தான்
  2. மகிழ்ச்சி + யடைந்தான்
  3. மகிழ்ச்சியை + அடைந்தான்
  4. மகிழ்ச்சியை + யடைந்தான்

விடை: மகிழ்ச்சி + அடைந்தான்

3. ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..

  1. ஒலி + யெழுப்பி
  2. ஒலி + எழுப்பி
  3. ஒலியை + யெழுப்பி
  4. ஒலியை + எழுப்பி

விடை: ஒலி + எழுப்பி

II. சரியா? தவறா?

1. கண்ணன் பெரியவருக்குச் சாலையைக் கடக்க உதவினான்.சரி
2. கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்து விட்டான்.தவறு
3. பெரியவர் அலைபேசியில் 107ஐ அழைத்தார்.தவறு
4. ஆசிரியரும் மாணவர்களும் கண்ணனைப் பாராட்டினர்சரி

III. அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக

1. ஒலிசத்தம்
2. ஒளிவெளிச்சம்
3. பள்ளிகல்வி கற்கும் இடம்
4. பல்லிஒரு சிறிய உயிரி
5.காலைசூரியன் உதிக்கும் நேரம்
6. காளைஎருது

IV. சரியான சொல்லால் நிரப்பிப் படி

(வலிமை, கத்த, இலைதழைகளைத், நீளமாக, உயரமானது)

  1. ஒட்டகச்சிவிங்கி மிகவும் உயரமானது
  2. அதன் கழுத்து நீளமாக இருக்கும்.
  3. ஒட்டகச்சிவிங்குக்குக் குரல்நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.
  4. ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது.
  5. ஒட்டகச்சிவிங்கி இலைதழைகளைத் தின்னும்.

V. சொல் விளையாட்டு

வாத்தில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

3rd Standard Tamil Lesson - Kannan Seitha Uthavi - வாத்தில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

நகைபுகை
சிரிப்புநடிப்பு
திரிப்புநகைப்பு

பாடம் 3: தனித்திறமை

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள் …………………………………..

  1. தரம்
  2. மரம்
  3. கரம்
  4. வரம்

விடை: தரம்

2. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………………

  1. நண்பர்கள்
  2. எதிரிகள்
  3. அயலவர்கள்
  4. சகோதரர்கள்

விடை: நண்பர்கள்

3. பணி இச்சொல் உணர்த்தும் பொருள் ………………………..

  1. வாழை
  2. வேளை
  3. வேலை
  4. வாளை

விடை: வேலை

4. படைத்தளபதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….

  1. படைத் + தளபதி
  2. படை + தளபதி
  3. படையின் + தளபதி
  4. படைத்த + தளபதி

விடை: படை + தளபதி

5. எதை + பார்த்தாலும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………..

  1. எதைபார்த்தாலும்
  2. எதபார்த்தாலும்
  3. எதைப்பார்த்தாலும்
  4. எதைபார்தாலும்

விடை: எதைப்பார்த்தாலும்

II. புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக

1. பதுங்கிச் செல்வேன். பாய்ந்து இரையைப் பிடிப்பேன், நான் யார்?

விடை: புலி

2. இரவில் விழித்தும் பகலில் தூங்கியும் வாழ்வேன், என் கண்களை எல்லாத்திசையிலும் திருப்புவேன், நான் யார்?

விடை : ஆந்தை

3. என் காதுகள் நீண்டிருக்கும் வேகமாக ஓடுவேன், கேரட் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் யார்?

விடை: முயல்

III. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக

1. காட்டில்விலங்குகள்நடந்ததுகூட்டம்

விடை: விலங்குகள் கூட்டம் காட்டில் நடந்தது

2. இரவுக்காவல்நீங்கள்தாம்அமைச்சர்ஆந்தையாரே

விடை: ஆந்தையாரே நீங்கள்தாம் இரவுக்காவல் அமைச்சர்

3. முயல்ஓடும்வேகமாகஅதி

விடை: முயல் அதி வேகமாக ஓடும்

4. கூடாதுயாரையும்போடக்எடைகுறைவாக

விடை: யாரையும் குறைவாக எடை போடக் கூடாது

IV. எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?

விலங்குகள்பணிகள்
3rd Standard Tamil Lesson - Thanithirami - எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?சிங்கம் – படைத்தளபதி
ஆந்தை – இரவுக்காவல்
எச்சரிக்கைப் பணி
சமையல் வேலை
கழுதை – பொருள்களைச் சேகரிக்கும் வேலை

V. பெயர் எது? செயல் எது?

பெயர்செயல்
குழலி பாடம் படித்தாள்குழலி, பாடம்படித்தாள்
அமுதன் பந்து விளையாடினான்அமுதன், பந்துவிளையாடினான்
மரம் செழித்து வளர்ந்ததுமரம்செழித்து, வளர்ந்தது

பாடம் 4: கல்யாணமாம் கல்யாணம்!

I. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

  • கல்யாணமாம் – கொண்டாட்டமாம்
  • ஊர்கோலமாம் – நாட்டியமாம்
  • பின்பாட்டாம் – சாப்பாடாம்

II. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….

  1. பூலோக + மெல்லாம்
  2. பூலோகம் + மெல்லாம்
  3. பூலோகம் + எல்லாம்
  4. பூலோக + எல்லாம்

விடை : பூலோகம் + எல்லாம்

2. கல்யாணத்தில் நாட்டியமாடுபவர் …………………..

  1. பூனை
  2. ஒட்டகச்சிவிங்கி
  3. யானை
  4. குரங்கு

விடை : ஒட்டகச்சிவிங்கி

3. பாலை + எல்லாம் இதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………..

  1. பாலையெல்லாம்
  2. பாலைஎல்லாம்
  3. பாலைல்லாம்
  4. பாலெல்லாம்

விடை : பாலையெல்லாம்

III. கோப்பைகளை அவற்றின் சரியான தட்டுகளோடு பொருத்துக

கோப்பைகள்தட்டுகள்
காணோமாம்காணவில்லையாம்
வாங்கி வச்சவாங்கிவைத்த
பூனையபூனையை
வாறோம்வருகிறோம்

 

பாடம் 5: மாணவர்கள் நினைத்தால்

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. முயற்சி இச்சொல்லின் பொருள் …………………………………..

  1. ஆக்கம்
  2. ஊக்கம்
  3. இயக்கம்
  4. பக்கம்

விடை : ஊக்கம்

2. ஆன்றோர் இச்சொல்லின் பொருள் …………………………

  1. பெற்றோர்
  2. உற்றோர்
  3. சுற்றோர்
  4. பெரியோர்

விடை : பெரியோர்

3. வைத்திருந்தனர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………….

  1. வைத்து + யிருந்தனர்
  2. வைத் + இருந்தனர்
  3. வைத்து + இருந்தனர்
  4. வைத் + திருந்தனர்

விடை : வைத்து + இருந்தனர்

4. வீதியெங்கும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………………

  1. வீதி + எங்கும்
  2. வீதி + யெங்கும்
  3. வீதியெ + ங்கும்
  4. வீதி + அங்கும்

விடை : வீதி + எங்கும்

5. நெகிழி + அற்ற என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………………

  1. நெகிழிஅற்ற
  2. நெகிழியற்ற
  3. நெகிழ்அற்ற
  4. நெகிழ்யற்ற

விடை : நெகிழியற்ற

6. பாதிப்பு + அடைகிறது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………….

  1. பாதிப்அடைகிறது
  2. பாதிப்புஅடைகிறது
  3. பாதிப்படைகிறது
  4. பாதிபடைகிறது

விடை : பாதிப்படைகிறது

II. பொருத்தமான சொல்லை எடுத்து நிரப்புக

1. நெகிழியற்ற ____________ உருவாக்குவோம். (உலகை / உளகை)

விடை : உலகை

2. நெகிழியை ஒழிப்போம் ____________ காப்போம். (மன்வளம் / மண்வளம்)

விடை : மண்வளம்

3. மேரி ____________ குதித்து ஓடிவந்தாள். (மகிள்வோடு / மகிழ்வோடு)

விடை : மகிழ்வோடு

4. எறும்பு ____________ கல்லும் தேயும். (ஊரக் / ஊறக்)

விடை : ஊரக்

5. துணிப்பை என்பது ____________ (எளிதானது / எலிதானது)

விடை : எளிதானது

III. இணைந்து செய்வோம்

நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக எளிதில் மட்கும் பொருள்களாக எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பட்டியலிடுக.

  • துணிப்பை
  • காகிதப்பை
  • சணல்பை
  • இலை
  • தட்டு

IV. சொற்களை இனம்கண்டு அதற்குரிய பெட்டிக்குக் கீழே எழுதுக.

கண்ணாடித்துண்டுநெகிழிப்பை
காகிதத்தாள்சணல்பை
பீங்கான் தட்டுஇலை

மட்காத குப்பைப் பெட்டி

  • கண்ணாடித்துண்டு,
  • நெகிழிப்பை,
  • பீங்கான் தட்டு

மட்கும் குப்பைப் பெட்டி

  • காகிதத்தாள்,
  • சணல்பை
  • இலை

V. ஒருமை, பன்மை அறிவோமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது பன்மை.
ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை.

ஒருமைச் சொல்லுக்கு உரிய பன்மைச் சொல்லை எழுதுவோமா!!!

பந்துபந்துகள்
ஆமைஆமைகள்
முயல்முயல்கள்
பூனைபூனைகள்
பூபூக்கள்
விழாவிழாக்கள்
பசுபசுக்கள்
வினாவினாக்கள்
படம்படங்கள்
மரம்மரங்கள்
சிங்கம்சிங்கங்கள்
காகம்காகங்கள்
பல்பற்கள்
கல்கற்கள்
சொல்சொற்கள்
புல்புற்கள்
முள்முட்கள்
தாள்தாட்கள்
ஆள்ஆட்கள்
பொருள்பொருட்கள்

பாடம் 6: துணிந்தவர் வெற்றி கொள்வர்

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….

  1. வகுப்பு + அரை
  2. வகுப்பு + அறை
  3. வகு + அறை
  4. வகுப் + அறை

விடை : வகுப்பு + அறை

2. இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள் ……………………….

  1. மகிழ்ச்சி
  2. மதிப்பு
  3. அவமதிப்பு
  4. உயர்வு

விடை : அவமதிப்பு

3. பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் ……………………………

  1. சிறிய
  2. நிறைய
  3. அதிகம்
  4. எளிய

விடை : சிறிய

4. வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல் ………………………

  1. சாதனை
  2. மகிழ்ச்சி
  3. நன்மை
  4. தோல்வி

விடை : தோல்வி

5. மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

  1. மண் + பிளந்து
  2. மண்ணைப் + பிளந்து
  3. மண்ணை + பிளந்து
  4. மன் + பிளந்து

விடை : மண்ணை + பிளந்து

II. பாடப் பொருளை வரிசைப்படுத்துவோமா?

1. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர்.

2. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்.

3. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.

4. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.

5. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.

விடை:-

1. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.
2. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.
3. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர்.
4. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.
5. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்

III. பழத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கலாமா?

3rd Standard Tamil Lesson - Thuninthavar Vetri Kolvar - பழத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கலாமா?

ஆசிரியர்பெயர்
சிரிசரி
சட்டிஆடி
அடிஅதிசயம்
ஆதிஆசி
பெட்டி

IV. பொருத்தமான எதிர்ச்சொல் சாவியைக் கொண்டு பூட்டைத் திறப்போமா?

  1. சிலர் x பலர்
  2. முடியாது x முடியும்
  3. கடினமாக x எளிதாக
  4. விலகினர் x சேர்ந்தனர்
  5. பொய் x உண்மை

V. மாணவர்களுக்கு வேண்டிய குணங்களை எழுதுக

  1. துணிச்சல்
  2. மகிழ்ச்சி
  3. சுறுசுறுப்பு
  4. தன்னம்பிக்கை

பாடம் 7: சான்றோர் மொழி

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் ………………………

  1. பாடுதல்
  2. வரைதல்
  3. சொல்லுதல்
  4. எழுதுதல்

விடை : சொல்லுதல்

2. ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள் …………………..

  1. கொடுத்தல்
  2. எடுத்தல்
  3. தடுத்தல்
  4. வாங்குதல்

விடை : கொடுத்தல்

3. மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் ………………………………..

  1. அறிவிலாதார்
  2. அறிந்தோரை
  3. கற்றோரை
  4. அறிவில்மேம்பட்டவர்

விடை : அறிவிலாதார்

4. இரவாது என்ற சொல் குறிக்கும் பொருள் ………………………………

  1. பிறரிடம் கேட்டுப் பெறாது
  2. பிறரிடம் கேட்டுப் பெறுவது
  3. பிறருக்கு கொடுக்காது
  4. பிறரிடம் கொடுப்பது

விடை : பிறரிடம் கேட்டுப் பெறாது

5. சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் ………………………

  1. தேடுதல்
  2. பிரிதல்
  3. இணைதல்
  4. களைதல்

விடை : இணைதல்

II. பொருள்பட எழுதிப் படித்து மகிழ்க

1. என க்குஇனி ப்புபி டிக்கும்

எனக்கு இனிப்பு பிடிக்கும்

2. உழை ப்புஉ யர்வுத ரும்

உழைப்பு உயர்வு தரும்

3. மர ம் வள ர்ப்போ ம்ம ழைபெ றுவோம்

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

4. சுத் தம்சு கம்த ரும்

சுத்தம் சுகம் தரும்

5. இனி யதமி ழில்பே சுங்

இனிய தமிழில் பேசுங்க

பாடம் 8 : நூலகம்

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. நூல் இச்சொல் உணர்த்தும் பொருள் …………………….

  1. புத்தகம்
  2. கட்டகம்
  3. ஒட்டகம்
  4. கோல்

விடை : புத்தகம்

2. அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள் …………………………

  1. அறிவில் சிறந்தவர்
  2. கவிதை எழுதுபவர்
  3. பாடல் பாடுபவர்
  4. மருத்துவம் பார்ப்பவர்

விடை : அறிவில் சிறந்தவர்

3. தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………….

  1. தேன் + அருவி
  2. தே + னருவி
  3. தே + அருவி
  4. தேனி + அருவி

விடை : தேன் + அருவி

4. புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………………

  1. புதுமை + உணர்ச்சி
  2. புத்து + உணர்ச்சி
  3. புதிய + உணர்ச்சி
  4. புது + உணர்ச்சி

விடை : புதுமை + உணர்ச்சி

5. அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………………..

  1. உள்ளே
  2. தனியே
  3. புறம்
  4. சிறப்பு

விடை : புறம்

6. தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………………..

  1. தேன்இருக்கும்
  2. தேனிருக்கும்
  3. தேனிறுக்கும்
  4. தேனிஇருக்கும்

விடை : தேனிருக்கும்

II. சொற்களை உருவாக்குவோமா?

எ.கா : வரிக்குதிரைவரி, குதிரை, குதி, திரை, வரை

  • பனிப்புயல் = பனி, புயல், புல், பனிப்பு, பல்
  • திருநெல்வேலி = நெல், வேலி, திரு, வேல், நெல்லி, தில்லி

III. எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக

3rd Standard Tamil Lesson - Noolagam - எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக

1. கூ க் ட ளி ம் ப ள்பள்ளிக்கூடம்
2. நூ க தி ல ம் னநூலகதினம்
3. ள் ழ ந் கு தை ககுழந்தைகள்
4. ம வ ன மை லிமனவலிமை
5. பு து ர் த் ச் ண சிபுத்துணர்ச்சி

IV. பொருத்தமான சொல்லால் நிரப்புக

தீஇல்லாமல் சமைக்க முடியாது
மண்இல்லாமல் செடி வளராது
சக்கரம்இல்லாமல் வண்டி ஓடாது

பாடம் 9: மாட்டு வண்டியிலே

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..

  1. தண் + ணீர்
  2. தண் + நீர்
  3. தண்மை + நீர்
  4. தன் + நீர்

விடை : தண்மை + நீர்

2. மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………….

  1. உயரே
  2. நடுவே
  3. கீழே
  4. உச்சியிலே

விடை : கீழே

3. வயல் + வெளிகள் – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………..

  1. வயல்வெளிகள்
  2. வயவெளிகள்
  3. வயற்வெளிகள்
  4. வயல்வளிகள்

விடை : வயல்வெளிகள்

4. கதை + என்ன – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………………

  1. கதைஎன்ன
  2. கதையன்ன
  3. கதையென்ன
  4. கதயென்ன

விடை : கதையென்ன

5. வெயில் இச்சொல்லின் எதிர்ச் சொல் ……………………………

  1. நிழல்
  2. பகல்
  3. வெப்பம்
  4. இருள்

விடை : நிழல்

II. இணைக்கலாமா?

1. அச்சாணிபச்சை நிறம்.
2. பசுமைநெற்பயிரின் உலர்ந்த தாள்
3. வைக்கோல்வண்டிச்சக்கரம் உருண்டு செல்ல உதவும் ஆணி
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

III. சொல் கோபுரம் அமைப்போம்

1. இதனைக் ’கரம்’ என்றும் கூறலாம்

விடை : கை

2. பசு கொடுக்கும் பானம்

விடை : பால்

3. ஆறுகள் சென்று சேருமிடம்

விடை : கடல்

4. வண்டியில் சக்கரம் கழன்று விழாமல் பாதுகாப்பது

விடை : அச்சாணி

5. பாலைவனக்கப்பல்

விடை : ஒட்டகம்

IV. பொருத்தமான படங்களை மரத்திலிருந்து பறித்துப் பொருத்தலாமா!

1. எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன?

விடை : குடை

2. அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ?

விடை : வாழைப்பூ

3. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?

விடை : புத்தகம்

4. அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன?

விடை : கோலம்

5. என்னோடு இருக்கும் சிறுமணி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும் அது என்ன?

விடை : கண்

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன?

விடை : பட்டாசு

7. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன?

விடை : நெல்

8. ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன?

விடை : சூரியன்

அகர முதலி

  1. அறிஞர் – அறிவில் சிறந்தவர்
  2. ஆன்றோர் – பெரியோர்
  3. இரவாது – பிறரிடம் கேட்டுப் பெறாது
  4. ஈதல் – கொடுத்தல்
  5. உரைத்தல் – சொல்லுதல்
  6. ஒலி – சத்தம்
  7. ஒளி – வெளிச்சம்
  8. கதிரவன் – சூரியன்
  9. களிப்பு – மகிழ்ச்சி
  10. காலை – சூரியன் உதிக்கும் நேரம்
  11. காளை – எருது
  12. கூட்டம் – கும்பல்
  13. சேகரித்தல் – ஒன்று திரட்டுதல்
  14. சேர்த்தல் – இணைத்தல்
  15. தகுதி – தரம்
  16. தெளிவாக – விளக்கமாக
  17. நித்திலம் – முத்து
  18. நூல் – புத்தகம்
  19. நேர்மை – உண்மை
  20. பகைவர்கள் – எதிரிகள்
  21. பணி – வேலை
  22. பல்லி – ஒரு சிறிய உயிரி
  23. பள்ளி – கல்வி கற்கும் இடம்
  24. மிக்காரை – உயர்ந்தோரை
  25. முயற்சி – ஊக்கம்

Related Links

Last Updated: 4th January 2024