4th Standard Tamil Book 1st Term Solution | Samacheer Kalvi Syllabus 2024 – 2025

4th Standard Tamil Book 1st Term Solution

On this page, we have listed 4th Standard Tamil Book 1st Term Book Back Questions with Answers. We have given 4th Std Tamil Book answers lesson-wise.

Tamil is a very important subject for those who studied in Tamil Nadu. Hence, here we provide easy-to-access 4th class Tamil textbook solutions, organized in a chapter-wise, question-wise manner so that they can easily find out what they’re looking for.

Table of Content

>>> Check Also – 2nd Term Solution

Solutions for Class 4 Tamil 2024 – 2025

Lesson-1: அன்னைத் தமிழே!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. அன்னை + தமிழே என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________

  1. அன்னந்தமிழே
  2. அன்னைத்தமிழே
  3. அன்னத்தமிழே
  4. அன்னைதமிழே

விடை : ஆ) அன்னைத்தமிழே

2. பிறப்பெடுத்தேன் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. பிறப் + பெடுத்தேன்
  2. பிறப்பு + எடுத்தேன்
  3. பிறப் + எடுத்தேன்
  4. பிறப்ப + எடுத்தேன்

விடை : ஆ) பிறப்பு + எடுத்தேன்

3. மறந்துன்னை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. மறந்து + துன்னை
  2. மறந் + துன்னை
  3. மறந்து + உன்னை
  4. மறந் + உன்னை

விடை : இ) மறந்து + உன்னை

4. சிறப்படைந்தேன் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. சிறப்பு + அடைந்தேன்
  2. சிறப் + அடைந்தேன்
  3. சிற + படைந்தேன்
  4. சிறப்ப + அடைந்தேன்

விடை : அ) சிறப்பு + அடைந்தேன்

5. என்னில் என்ற சொல்லின் பொருள் ____________________

  1. உனக்குள்
  2. நமக்குள்
  3. உலகுக்குள்
  4. எனக்குள்

விடை : ஈ) எனக்குள்

வினாக்களுக்கு விடையளி

1. சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?

சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் அன்னைத்தமிழ் ஆவாள்.

2. எதைச் சொல்ல முடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்?

சொல்லால் உனது புகழை சொல்லமுடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்

3. இப்பாடலின் ஆசிரியர் அன்னைத் தமிழை எவ்விதம் புகழ்கிறார்?

  1. என் அன்னை போன்றவள்
  2. என் உயிரில் கலந்தவள்
  3. என்னை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், என் உடன் சேர்ந்து வளர்பவள்
  4. சொல்லைக் கொண்டு விளையாடுவதற்குச் சொலல்லிக் கொடுத்தவள்
  5. அதே சொல்லினால் உனது புகழை கூற முடியவில்லை

இப்பாடலில் இடம் ­பெற்றுள்ள ஒரே எழுத்தில் ­தொடங்கும் சொற்களை எடுத்து எழுதுக.

  • ன்னை – ன்னில்
  • ன்னை – லகில்
  • சொல்லில் – சொல்லித் – சொல்ல
  • ளர்ப்பவளே – ளர்பவளே

இப்பாடலில் இடம் ­பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

  • வளர்ப்பவளே – வளர்பவளே
  • கலந்தவளே – தந்தவளே
  • ன்னை – என்னை – உன்னை

பாடலை நிறைவு செய்வோம்

பட்டாம் பூச்சி பறந்து வா
பறக்கும் பூவாய் பறந்து வா
பட்டுமேனி ஓவியம்
பார்க்க பார்க்க ஓடிவா
தொட்டு தொட்டு பார்க்கவா
தோழனாக இருக்க வா

சொல் உருவாக்கலாமா?

4th Standard Tamil Back Answer - Annaithamilae - சொல் உருவாக்கலாமா?

1. குழந்தை2. அன்னை
3. கவியசர்4. தமிழ் மொழி
4. அரசர்6. தந்தை
அறிந்து கொள்வோம்

தமிழ்ச்செல்வி, தமிழரசன்… என்பன போலத் தமிழ்மொழியை மட்டுமே பெயராகப் பயன்படுத்த முடியும்.

 Lesson-2: பனைமரச் சிறப்பு

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

வல்லமை என்ற சொல்லின் பொருள் ____________________

  1. வலிமை
  2. எளிமை
  3. இனிமை
  4. புதுமை

விடை : அ) வலிமை

2. உயர என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________________

  1. மேலே
  2. நிறைய
  3. தாழ
  4. அதிகம்

விடை : இ) தாழ

3. விழுந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________________

  1. நடந்து
  2. பறந்து
  3. எழுந்து
  4. நின்று

விடை : இ) எழுந்து

4. கரையோரம் இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ____________________

  1. கரை + ஓரம்
  2. கரை + யோரம்
  3. கரைய + ஓரம்
  4. கர + ஓரம்

விடை : அ) கரை + ஓரம்

5. அங்கெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. அங் + கெல்லாம்
  2. அங்கு + எல்லாம்
  3. அங்கு + கெல்லாம்
  4. அங்கெ + ல்லாம்

விடை : ஆ) அங்கு + எல்லாம்

வினாக்களுக்கு விடையளி

1. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?

  • நுங்கு
  • பனங்கிழங்கு
  • பனம்பழம்
  • பதநீர்
  • கற்கண்டு
  • கருப்பட்டி

2. சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் எவ்வாறு உதவுகிறது?

  • பனங்காய் வண்டி
  • பொம்மைகள்
  • பனை ஓலைக் காற்றாடி
  • பனை ஓலை விசிறி

3. பனைமரத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?

  • மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை இதனை உணர்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதை தவிர்க்க வேண்டும்.
  • பனைமரத்தினைப் பற்றிய பல அரிய செய்திகளை அறிந்து கொண்டு, பனையின் சிறப்பினை நமது நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும்.
  • பனங்கொட்டைகளை சேகரித்து ஆறு, குளம், குட்டை பேன்றவற்றின் கரையோரங்களில் விதைகளை ஊன்றி பாதுகாக்கலாம்.

4. பனைமரத்தின் பயன்களாக நீ கருதுவனவற்றை உம் சொந்த நடையில் எழுதுக.

  • நுங்கும், பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன.
  • பனை ஓலைகள் கூடைகள் முடையவும், கைவினைப் பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகின்றன.
  • பனஞ்சாறு பதநீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன்தருகிறது.
  • பனைமரம் புயலைத் தாங்கும் வலிமை பெற்றது.
  • பனைமரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது.
  • நிலத்தடி நீர்மட்டம் உயரக் காரணமாக அமைகிறது.
  • பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள், ஆகியவற்றைச் செய்து பல்வேறு விளையாட்டுகளை விளையாடலாம்.
  • பறவைகளுக்கு வாழிடமாகவும் விளங்குகிறது.

கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

  1. சாலையோரம் = சாலை + ஓரம்
  2. குருத்தோலை = குருத்து + ஓலை

உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் மரத்தாலான பொருள்களைப் பட்டியலிடுக

கதவுநாற்காலி
முக்காலிமேசை
மரக்கரண்டிமரக்கட்டில்
ஊஞ்சல்மரப்பாவை
மண்வெட்டிஅரிவாள்மனை
களைகொத்திபம்பரம்

சொற்களுக்கு உரிய படங்களைப் பொருத்துக

4th Standard Tamil Back Answer - Panaimara Sirappu - சொற்களுக்கு உரிய படங்களைப் பொருத்துக

ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டுபிடித்து வட்டமிடுக

1. நிலவு – மதி, ஆதவன், திங்கள், கதிரவன், சந்திரன், பரிதி.

விடை : மதி, திங்கள், சந்திரன்

2. அம்மா – சேய், அன்னை, குழந்தை, தாய், மழலை, மாதா.

விடை : அன்னை, தாய், மாதா

3. மகுடம் – அரசன், மணிமுடி, தலை, கிரீடம், அணிகலன், அரசி.

விடை : மணிமுடி, கிரீடம், அணிகலன்

4. திரள் – கூட்டம், கடை, வீதி, நெருக்கம், மக்கள், கும்பல், நெரிசல்

விடை : கூட்டம், நெருக்கம், கும்பல்

இலக்கணம் – பால்

கீழ்க்காணும் சொற்களை வகைப்படுத்துக

அவள், சென்றனர், படித்தான், வந்தது, பறந்தன, ஓடினர், எழுதினான், விளையாடினர், குயவன், நாட்டிய மங்கை, மேய்ந்தன, வகுப்பறை, கற்கள், ஆசிரியர், மாணவர்கள், வீடு, பெற்றோர், தங்கை, அண்ணன், மரங்கள், செடி, மலர், பூக்கள்

ஆண்பால்பெண்பால்பலர்பால்
படித்தான்அவள்சென்றனர்
எழுதினான்நாட்டிய மங்கைஓடினர்
குயவன்தங்கைவிளையாடினர்
ஆசிரியர்பெற்றோர்
அண்ணன்
ஒன்றன்பால்பலவின்பால்
வந்ததுபறந்தன
வகுப்பறைமேய்ந்தன
வீடுகற்கள்
செடிமரங்கள்
மலர்பூக்கள்

பொருத்துக

4th Standard Tamil Book 1st Term Solution - Panaimara Sirappu - பொருத்துக

1. அவன்ஆடினாள்
2. அவள்ஓடியது
3. அவர்கள்வரைந்தான்
4. அதுபாடினார்கள்
5. அவைபறந்தன
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ, 5 – உ

 Lesson-3: ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

வினாக்களுக்கு விடையளி 

1. விஜயநகர அரசின் அவைப்புலவர் யார்?

தெனாலிராமன்

2. விஜயவர்த்தன அரசர் எப்படிப்பட்ட குருவியைக் கொண்டு வரும்படி கேட்டார்?

  • விஜயவர்த்தனர் தெனாலிராமனிடம், ‘எனக்குக் காலையில் தங்க மஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலும் உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரவேண்டும்’ என்றார்.
  • மேலும் அது சிலசமயம் மூன்று கால்களாலும், சில சமயம் இரண்டு கால்களாலும் நடக்க வேண்டும், பிறகு ஏழு இறக்கைகளைக் கொண்டு வானில் பறக்ககூடிய குருவியைக் கொண்டு வரும்படி கேட்டார்

3. குருவி கூறியதாக தெனாலிராமன் அரசவையில் சொன்னது என்ன?

  • காலைப் பொழுதாகவும் இருக்கக்கூடாது, நடுப்பகல் பொழுதாகவும் இருக்கக்கூடாது, மாலைப்பொழுதாகவும் இருக்கக்கூடாது, வெளிச்சமாகவும் இருக்கக்கூடாது, இருளாகவும் இருக்கக் கூடாது
  • அந்த நேரத்தில் நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து திரும்ப வந்துவிடுவேன் என்றது என்றார்

குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடி! மணிமகுடம் சூட்டிக்கொள்

1. மணக்கும் எழுத்து.

விடை : பூ

2. அரசரும், அமைச்சர்களும் கூடும் இடம்.

விடை : அரசவை

3. நிலவும், விண்மீன்களும் வானில் தெரியும் நேரம்.

விடை : இரவு

4. நவரசங்களில் ஆச்சரியத்தைக் குறிக்கும்.

விடை : வியப்பு

5. சிக்கலைத் தீர்க்க உதவும் குணம்.

விடை : சாந்தம்

சொல்லின் இடையில் ஓர் எழுத்தைச் சேர்த்துப் புதிய செல்லை உருவாக்குக.

(எ. கா) கதை –  கவிதை

1. படு – _________

விடை : பட்டு

2. குவி – _________

விடை : குழவி

3. பகு – _________

விடை : படகு

4. வசை – _________

விடை : வலசை

5. பாவை – _________

விடை : பார்வை

6. எது – _________

விடை : எழுது

7. அவை – _________

விடை : அவ்வை

8. ஆம் – _________

விடை : ஆரம், ஆழம்

9. கவி – _________

விடை : கல்வி

அறிந்து கொள்வோம்

தெனாலிராமன் அரசர் கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த விகடகவி ஆவார். விகடகவி என்றால் நகைச்சுவையாகப் பேசுேவரைக் குறிக்கும். தெனாலிராமன் சிரிக்க வைத்து சிந்தனையைத் தூண்டும் வகையில் பேசுவார்.

Lesson-4: முளைப்பாரி பாடல்

பொருள் தருக

4th Standard Tamil Book 1st Term Solution - Mulaipari Padal - பொருள் தருக

1. முளைப்பாரி = _________

விடை : முளையிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மண்பாண்டம்

2. தையலர் = _________

விடை : பெண்கள்

3. ஓலைக்கொட்டான் = _________

விடை : ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை

4. மாட்டாந்தொழு = _________

விடை : மாடு கட்டும் இடம்

5. ஆட்டாந்தொழு = _________

விடை : ஆடு கட்டும் இடம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. இரண்டெடுத்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. இரண் + டெடுத்து
  2. இரண்டு + எடுத்து
  3. இரண்டெ + டுத்து
  4. இரண்டெ + எடுத்து

விடை :இரண்டு + எடுத்து

2. பொங்கலிட்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. பொங்கல் + இட்டு
  2. பொங்கல் + லிட்டு
  3. பொங்க + இட்டு
  4. பொங் + கலிட்டு

விடை பொங்கல் + இட்டு

3. மணி + பயறு என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _________

  1. மணிபயறு
  2. மணபயறு
  3. மணப்பயறு
  4. மணிப்பயறு

விடை: மணிப்பயறு

4. செவ்வாய் + கிழமை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. செவ்வாய்கிழமை
  2. செவ்வாய்க்கிழமை
  3. செவ்வாகிழமை
  4. செவ்வாக்கிழமை

விடை: செவ்வாய்க்கிழமை

5. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

  1. சோளத்தட்டு = சோளம் + தட்டு
  2. மாட்டெரு = மாடு + எரு

இப்பாடலில் ஒரே சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வருவதைக் கண்டறிந்து எழுதுக -அடுக்குத்தொடர்.

  • கணுக்கணுவா
  • சுளைசுளையா

இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

  • நாளையிலே – கிழமையில
  • ஊறவச்சி – முறிச்சிவச்சி
  • கம்மந்தட்டை – சோளத்தட்டை
  • மாட்டாந்தொழு – ஆட்டாந்தொழு

முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.

  • லைக்கொட்டான் டும்பிள்ளை
  • வாங்கியாந்த – வாளியிலே
  • ம்மந்தட்டை – ணுக்கணுவா
  • மாட்டாந்தொழு – மாட்டெருவு
  • ட்டாந்தொழு – ட்டெருவு

மேகத்திலுள்ள பேச்சு வழக்குச் சொற்களைக் குடையிலுள்ள எழுத்து வழக்குச் சொற்களுடன் இணைத்துக் காட்டுக.

4th Standard Tamil Book 1st Term Solution - Mulaipari Padal - மேகத்திலுள்ள பேச்சு வழக்குச் சொற்களைக் குடையிலுள்ள எழுத்து வழக்குச் சொற்களுடன் இணைத்துக் காட்டுக.

1. ஒசந்தஉயர்ந்த
2. செவ்வாசெவ்வாய்
3. வாங்கியாந்தவாங்கி வந்த
4. ஊறவச்சிஊறவைத்து
5. முறிச்சிமுறித்து
6. மொளபோட்டமுளைக்க வைத்த
அறிந்து கொள்வோம்
  • நெல்
  • கோதுமை
  • பாசிப்பயறு
  • துவரை
  • மொச்சை
  • எள்
  • கொள்ளு
  • உளுந்து
  • கடலை

Lesson-5: பண்படுத்தும் பழமொழிகள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. அமுதவாணன் தன் தாத்தாவுடன் சென்ற இடம் _________

  1. கடைத்தெரு
  2. பக்கத்து ஊர்
  3. வாரச்சந்தை
  4. திருவிழா

விடை : வாரச்சந்தை

2. யானைக்கொரு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. யானை + கொரு
  2. யானை + ஒரு
  3. யானைக்கு + ஒரு
  4. யானைக் + கொரு

விடை : யானைக்கு + ஒரு

3. பழச்சாறு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. பழம் + சாறு
  2. பழச் + சாறு
  3. பழ + ச்சா று
  4. பழ + சாறு

விடை : பழம் + சாறு

4. நாய் _________

  1. குரைக்கும்
  2. குறைக்கும்
  3. குலைக்கும்
  4. கொலைக்கும்

விடை : குரைக்கும்

5. ஆசி இச்சொல்லின் பொருள் _________

  1. புகழ்ந்து
  2. மகிழ்ந்து
  3. இகழ்ந்து
  4. வாழ்த்து

விடை : வாழ்த்து

6. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக

  1. வாரம் + சந்தை = வாரச்சந்தை
  2. பழைமை + மொழி = பழமொழி

வினாக்களுக்கு விடையளிக்க.

1. அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?

அமுதவாணன் யானையிடம் ஆசி வாங்கினான்.

2. ஆநெய், பூ நெய் ஆகியன எவற்றைக் குறிக்கின்றன?

  • ஆநெய் – பசுவின் நெய்
  • பூ நெய் – பூவில் ஊ|றும் தேன்

3. “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” இப் பழமொழியின் பொருளைச் சொந்த நடையில் கூறுக.

  • அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பது தான் சரியான வாக்கியம்.
  • கற்கும்போது புரியாமல் எதையும் மனப்பாடம் செய்யாமல் கற்கும்போதே தெளிவாகப் புரிந்து கற்க வேண்டும்.

பழமொழியை நிறைவு செய்க

4th Standard Tamil Book 1st Term Solution - Panpaduthum Pazhamozhigal - பழமொழியை நிறைவு செய்க

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்

4th Standard Tamil Book 1st Term Solution - Panpaduthum Pazhamozhigal - பழமொழியை நிறைவு செய்க

குரைக்கின்ற நாய் கடிக்காது

4th Standard Tamil Book 1st Term Solution - Panpaduthum Pazhamozhigal - பழமொழியை நிறைவு செய்க

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

4th Standard Tamil Book 1st Term Solution - Panpaduthum Pazhamozhigal - பழமொழியை நிறைவு செய்க

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்

4th Standard Tamil Book 1st Term Solution - Panpaduthum Pazhamozhigal - பழமொழியை நிறைவு செய்க

ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்

படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்வு செய்க.

4th Standard Tamil Book 1st Term Solution - Panpaduthum Pazhamozhigal - படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்வு செய்க.

  1. சிறுதுளி பெருவெள்ளம்.
  2. யானைக்கும் அடி சறுக்கும்.
  3. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

விடை : காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

முதலெழுத்து மாற்றினால் வேறுசொல்

1.

 படிக்க நீயும்விரும்பு
பாறையை உடைப்பதுரும்பு
சுவைத்தால் இனிக்கும்ரும்பு
பூ மலரும் முன்புரும்பு

2.

கையின் மறுபெயர்விரம்
வயலுக்கு இடுவதுரம்
பூக்களைத் தொடுத்தால்ரம்
புன்னை என்பதுரம்

3.

நீர் இறைத்திடுவதுற்றம்
புயலோ இயற்கைசீற்றம்
தவறு இழைப்பதுகுற்றம்
வீட்டின் உள்ளேதேற்றம்

இணைத்து மகிழ்வோம்

4th Standard Tamil Book 1st Term Solution - Panpaduthum Pazhamozhigal - இணைத்து மகிழ்வோம்

  1. Talk less work more  – குறைவாகப் பேசு அதிகம் வேலை செய்
  2. No pain no gain – உழைப்பின்றி ஊதியமில்லை
  3. Good council has no price – நல்ல அறிவுரை விலை மதிப்பற்றது
  4. Haste makes waste – பதறாத காரியம் சிதறாது
  5. All that glitters is not gold – மின்னுவதெல்லாம் பொன்னல்ல
அறிந்து கொள்வோம்
முன்னோர்கள் தங்கள் அனுபவத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கக் கூறிய மொழிகளே முதுமொழிகள் அல்லது பழமொழிகள் ஆகும்.

Lesson-6: முயல் அரசன்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

  1. பல்லாண்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
  1. பல் + லாண்டு
  2. பல் + ஆண்டு
  3. பல + ஆண்டு
  4. பல + யாண்டு

விடை : பல + ஆண்டு

2. செயலாக்கம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. செய + லாக்கம்
  2. செயல் + ஆக்கம்
  3. செயலா + ஆக்கம்
  4. செயல் + லாக்கம்

விடை : செயல் + ஆக்கம்

3. இப்போது+ எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. இப்போதெல்லாம்
  2. இப்போது எல்லாம்
  3. இப்போல்லாம்
  4. இப்போயெல்லாம்

விடை : இப்போதெல்லாம்

4. பேசி + இருந்தால் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________

  1. பேசியிருந்தால்
  2. பேசியிரு
  3. பேசிஇருந்தால்
  4. பேசவிருந்தால்

விடை : பேசியிருந்தால்

5. வந்து + இருந்தது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக் கும் சொல் __________

  1. வந்துஇருந்தது
  2. வந்திஇருந்தது
  3. வந்திருந்தது
  4. வந்தியிருந்தது

விடை : வந்திருந்தது

வினாக்களுக்கு விடையளி

1. முயலின் கவலைக்குக் காரணம் என்ன?

  • புலி தம் முன்னோரைத் தன் பசிக்கு இரையாக்கியது.
  • அதேபோல் என்றாவது ஒரு நாள் நம்மையும் கொன்று தின்று விடுமோ என்பது தான் முயிலின் கவலைக்குக் காரணம் ஆகும்.

2. விலங்குகளின் கூட்டத்தில் என்ன எடுக்கப்பட்டதாக முயல் கூறியது?

  • நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக் கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன என்று முயல் புலியிடம் கூறியது.

3. முயல், தான் அரசன் என்பதை புலியை என்ன செய்யக் கூறியது?

முயல், தான் அரசன் என்பதை மெய்பிக்க புலியிடம் உன் முதுகில் என்னை ஏற்றிக்கொண்டு போகச் சொன்னது

4. புலியை மன்னித்து விட்டுவிட முயல் கூறிய என்ன?

  • புலியை மன்னித்து விட்டுவிட நீ இந்தக் காட்டிலேயே இருக்கக்கூடாது. எங்காவது ஓடிப்போய்விடு! என்ற நிபந்தனையை போட்டது.

5. விலங்குகள் உண்மையில் எதைக் கண்டு அஞ்சின?

விலங்குகள் உண்மையில் புலியைக் கண்டு அஞ்சின.

எதிர்ச்சொல்லால் சொற்றொடரை நிறைவுசெய்க

(பழைய, கவலை, மெதுவாக, தொடக்கம், தாழ்ந்த, பொய்)

4th Std Tamil Term 1 - Lesson முயல் அரசன்

1. பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர், பெய்யாவிட்டால் _______________ அடைவர்.

விடை : கவலை

2. எப்பொழுதும் உண்மை பேசவேண்டும்,                        பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.

விடை : பொய்

3. தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின்                       

விடை : தொடக்கம்

4. கணினி மூலம் கல்வி கற்பது புதியமுறை . கரும்ப லகை மூலம் கல்விகற்றது                    முறை

விடை : பழைய

5. பிறருக்குக் கொடுத்து உதவுவது உயர்ந்த குணம். பிறர் பொருளைத் திருடுவது           குணம்

விடை : தாழ்ந்த

6. மருத்துவமனைகளில் சத்தமாகப் பேசாமல்                       பேச வேண்டும்.

விடை : மெதுவாக

சரி, தவறு எனச் சரியான குறியிடுக

1. புலி, முயலின் மூதாதையரைக் கொன்று தின்றுவிட்டது.

விடை : சரி

2. முயல் புலிக்குக் கரும்பு கொடுத்தது.

விடை : தவறு

3. விலங்குகளின் கூட்டம் நடந்த போது புலி தூங்கிக் கொண்டிருந்தது.

விடை : தவறு

4. முயல் புலியிடம் காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் தன்னைக் கண்டு அஞ்சுவதாகக் கூறியது.

விடை : சரி

5. முயல் புலியைக் காட்டிலிருந்து ஆட்சி செய்ய. வேண்டும் எனக் கூறியது.

விடை : தவறு

சக்கரம் காட்டும் ஈரெழுத்துச் சொற்கள் என்ன என்பதை கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடிக்க.

1. உலகம் என்பதன் வேறு சொல் _________

விடை : பார்

2. திருவிழா என்றாலே இது இருக்கும் _________

விடை : தேர்

3. மக்கள் சேர்ந்து வாழுமிடம் _________

விடை : ஊர்

4. இது இல்லாமல் உயிர்கள் இல்லை _________

விடை : நீர்

5. நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால் _________

விடை : மோர்

6. மரம், செடி கொடி மண்ணில் ஊன்றி நிற்க உதவும் _________

விடை : வேர்

7. மன்னர்கள் தம் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த அண்டை நாடுகளோடு செய்வது _________

விடை : போர்

8. பூத்தொடுக்க உதவுவது _________

விடை : நார்

எது முன்னே? எது பின்னே? அகர வரிசைப்படுத்துக.

(பௌத்தம், பெட்டி, போர்வை, படை, பூமி, பிண்ணாக்கு பீர்க்கு, புத்தகம், பைந்தமிழ், பொத்தான்.)

4th Standard Tamil Book 1st Term Solution - muyal arasan - எது முன்னே? எது பின்னே? அகர வரிசைப்படுத்துக.

விடை :  படை, பிண்ணாக்கு, பீர்க்கு, புத்தகம், பூமி, பெட்டி, பைந்தமிழ், பொத்தான். போர்வை,  பௌத்தம்

காலியிடங்களைக் கூடையில் உள்ள சொற்களைக் கொண்டு நிரப்புக

4th Standard Tamil Book 1st Term Solution - muyal arasan - காலியிடங்களைக் கூடையில் உள்ள சொற்களைக் கொண்டு நிரப்புக

(நெல், பால், அகழ், பள்ளி, மகிழ்ச்சி, வள்ளி, மல்லி, அகல், வாள், நாள், யாழ்)

1. பல்லினை மெல்லத் தொடு

விடை : பல்லி, நெல், பால், அல்லி, சொல், அகல்

2. நாவினை உள்ளே ள்ளு

விடை : வாள், தோள், நாள், பள்ளி, வள்ளி, வெள்ளி

3. நாவினைச் சுற்றி முக்கு

விடை : அகழ், வாழ், தமிழ், புகழ், யாழ், மகிழ்ச்சி

 

Lesson-7: வெற்றி வேற்கை

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. தெண்ணீர் இச்சொல்லின் பொருள் _________

  1. கலங்கிய நீர்
  2. இளநீர்
  3. தெளிந்த நீர்
  4. வெந்நீர்

விடை : தெளிந்த நீர்

2. ஆல் இச்சொல்லின் பொருள் _________

  1. வேலமரம்
  2. ஆலமரம்
  3. அரசமரம்
  4. வேப்ப மரம்

விடை : ஆலமரம்

3. கயம் இச்சொல்லின் பொருள் _________

  1. நீர்நிலை
  2. பயம்
  3. வானிலை
  4. பருவநிலை

விடை : நீர்நிலை

4. புரவி இச்சொல்லின் பொருள் _________

  1. யானை
  2. பூனை
  3. ஆள்
  4. குதிரை

விடை : குதிரை

5. பெரும்படை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. பெருமை + படை
  2. பெரும் + படை
  3. பெரு + படை
  4. பெரிய + படை

விடை : பெருமை + படை

6. நிழல் + ஆகும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. நிழல்ஆகும்
  2. நிழலாகும்
  3. நிழல்லாகும்
  4. நிழலாஆகும்

விடை : நிழலாகும்

வினாக்களுக்கு விடையளி.

1. ஆலமரத்தின் விதை எவ்வாறு இருக்கும் என்று அதிவீரராமபாண்டியர் குறிப்பிடுகிறார்?

ஆலமரத்திலுள்ள சிறு பழத்தின் ஒரு விதையானது, தெளிந்த நீருள்ள குளத்தின் சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதென அதிவீரராமபாண்டியர் குறிப்பிடுகிறார்.

2. ஆலமரத்தின் நிழலில் தங்கும் படைகள் யாவை?

  • யானைப்படை
  • தேர்ப்படை
  • குதிரைப் படை
  • காலாட்படை

3. இப்பாடலின் பொருள் எதனுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது?

இப்பாடலின் பொருள் பிறருக்கு செய்யும் உதவியுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.

பொருத்தமான நிறுத்தக்குறி இடுக.

  1. ஆகா! என்ன சுகம் தெரியுமா?
  2. என்னைக் கட்டிப் போடுகிறார்கள்.
  3. ஆகா! இது என்ன பிரமாதம்?
  4. நான் என்ன வேலை செய்ய வேண்டும்?
  5. காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி, கத்தரி, புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.

சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி

1. வயலில் மேய்வதுஆடு
    அழகாய் நடனம்ஆடு
2. மாதத்தின் மறுபெயர்திங்கள்
    நிலவைக் குறிப்பதுதிங்கள்
3. வகுப்பில் பாடம்படி
    மாடி செல்ல உதவும்படி
4. வளைந்து ஓடுவதுஆறு
    6 – இந்த எண்ணின் பெயர்ஆறு
5. பூக்களைத் தொடுத்தால்மாலை
    அந்தி சாயும் பொழுதுமாலை
6. சோற்றின் மறுபெயர்அன்னம்
  அழகிய பறவைஅன்னம்

கூடையில் இருக்கும் சொற்களுள் முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து முதல் பழத்தில எழுதுக. இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து இரண்டாம் பழத்தில் எழுதுக.

சிறுபழம்ண்ணீர்
சிறுமீன்ண்ணம்
சிலந்திநுண்ணியதே
சிந்தனைண்ணம்
சிலைகிண்ணம்
ட்டுயானை
ம்பிபூனை
வளைபானை
ண்ணீர்
லை
அறிந்து கொள்வோம்
மீன்களில் 22, 000 வகையான மீன்கள் உள்ளன. இவற்றுள் மிகச் சிறியது கோபி வகையைச் சார்ந்தது. இதன் நீளம் 13 மில்லி மீட்டர், மிகப் பெரிய மீன் திமிங்கலச் சுறா. இதன் நீளம் 18 மீட்டர்.

Lesson-8: விடியும் வேளை

சரியான பலூன்களை எடுத்துப் பொருத்துக.

4th Standard Tamil Book 1st Term Solution - Vidiyum Velai - சரியான பலூன்களை எடுத்துப் பொருத்துக.

(தாமதப்படுத்துதல், முதிர்ந்த இலை, இளம் இலை, வேலை, நேரம், மெதுவாக, மூட்டை, தயார் செய்தல், பக்க அடுப்பு)

  1. வேளை – நேரம்
  2. பொதி – மூட்டை
  3. ஆயத்தப்படுத்துதல் – தயார் செய்தல்
  4. துளிர் – இளம் இலை
  5. கொடியடுப்பு – பக்க அடுப்பு

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. சாலையெங்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________

  1. சாலை + யெங்கும்
  2. சாலை + எங்கும்
  3. சால + எங்கும்
  4. சால + யெங்கும்

விடை : சாலை + எங்கும்

2. சுண்டியிழுக்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. சுண்டி + யிழுக்கும்
  2. சுண் + டியிழுக்கும்
  3. சுண்டு + இழுக்கும்
  4. சுண்டி + இழுக்கும்

விடை : சுண்டி + இழுக்கும்

3. ஓடி + ஆடி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________________

  1. ஓடிஆடி
  2. ஓடியோடி
  3. ஓடியாடி
  4. ஒடியடி

விடை : ஓடியாடி

4. காலை + பொழுது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________

  1. காலைபொழுது
  2. கால்பொழுது
  3. காலைப்பொழுது
  4. காலப் பொழுது

விடை : காலைப்பொழுது

5. வரகு + அரிசி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. வரகரிசி
  2. வரகுஅரிசி
  3. வரக்கரிசி
  4. வரகுகரிசி

விடை : வரகரிசி

6. உணவு + அளிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. உணவுஅளிக்க
  2. உணவளிக்க
  3. உணவுவளிக்க
  4. உணவ்வளிக்க

விடை : உணவளிக்க

வினாக்களுக்கு விடையளி

1. அழகிய மலைக்கிராமத்தின் பெயர் என்ன?

மன்னவனூர்

2. கிராமத்தில் உனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளை எழுதுக.

  • மழைபெய்து ஓய்ந்திருந்தது, சாலையில் எங்கும் தண்ணீர் நிறைந்திருந்தது.
  • மரங்கள் நனைந்து கிளைகள் இலைகள் முழுக்க நீர்த்திவலைகள் தெரிந்தன பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள்.

3. பிள்ளைகள் காலை உணவாக என்ன உண்டார்கள்?

பிள்ளைகள் காலை உணவாக, வரகரிசிச் சோறும் பருப்புக் கடையலும் பிரண்டை துவையலும் சாப்பிட்டனர்.

பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக

எ.கா: பச்சைப்பசேல் என்ற வயல்வெளி

  • கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென வரகரிசிச்சோறு கொதித்துக் கொண்டிருந்தது.
  • வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயல்
  • சிலுசிலுப்பான காற்ற கூடவே எழுந்தது

புதிய சொற்களை உருவாக்கலாமா?

4th Std Tamil Term 1 - Lesson விடியும் வேளை

1.நகம்2. முகம்
3. கனம்4. ஊனம்
5. கறி6. ஊக்கம்
7. கன்னம்8. நன்றி

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

சிறு தானிய உணவுகளே நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு பல உணவு வகைகளை மண் பானைகளில் தயாரித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்தபிறகுதான் அடுத்த வேளை உணவை உண்ணவேண்டும். இதைத் தான் நம் முன்னோர்” பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.

சிறு தானிய உணவுகளை உண்போம்!
ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்!

4th Standard Tamil Book 1st Term Solution - Vidiyum Velai - பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

1. எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?

சிறு தானிய உணவுகளே நமக்கு ஏற்புடையது

2. சிறு தானியங்களுள் ஏதேனும் நான்கினை எழுதுக.

குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி

3. துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது, ஏன்?

துரித உணவுகளைச் சாப்பிடுவதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது

அறிந்து கொள்வோம்
இரண்டு சொற்கள் ஒரே கருத்தினை வலுப்படுத்துவது நேரிணை

எ.கா: சீரும் சிறப்புமாக, ஓங்கி உயர்ந்த

இரண்டு எதிர்ச்சொற்கள்
கருத்தினை  எதிரெதிர் வலுப்படுத்துவது எதிரிணைஎ.கா: இரவு பகல், மேடு பள்ளம்

Lesson-9: கரிகாலன் கட்டிய கல்லணை

சரியான பழத்தைத் தேர்ந்தெடுக்க

4th Standard Tamil Book 1st Term Solution - karikalan kattiya kallanai - சரியான பழத்தைத் தேர்ந்தெடுக்க

1. “துயரம்” இச்சொல் குறிக்கும் பொருள் _____ (மகிழ்ச்சி/துன்பம்)

விடை : துன்பம்

2. “வியத்தகு” இச்சொல் குறிக்கும் பொருள் _____ (மகிழ்வூட்டும்/ஆச்சரியம் தரும்)

விடை : ஆச்சரியம் தரும்

3. “முறியடித்து” இச்சொல் குறிக்கும் பொருள் _____ (தகர்த்து/பயந்து)

விடை : தகர்த்து

4. “சூழ்ச்சி” இச்சொல் குறிக்கும் பொருள் _____ (துன்பம்/தந்திரம்)

விடை : தந்திரம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. பெருவெள்ளம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____ 

  1. பெருமை + வெள்ளம்
  2. பெரு + வெள்ளம்
  3. பெரு + வுள்ளம்
  4. பெரிய + வெள்ளம்

விடை : பெருமை + வெள்ளம்

2. தங்கியிருந்த இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. தங்கி + இருந்த
  2. தங்கி + யிருந்த
  3. தங்கியி + ருந்த
  4. தங்கு + இருந்த

விடை : தங்கி + இருந்த

3. அமைந்துள்ளது இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. அமைந் + துள்ளது
  2. அமைந்து + உள்ளது
  3. அமைந்து + ள்ளது
  4. அமைந் + உள்ளது

விடை : அமைந்து + உள்ளது

4. அரசு + ஆட்சி என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல் ________

  1. அரசஆட்சி
  2. அரசாட்சி
  3. அரசுசாட்சி
  4. அரசுஆட்சி

விடை : அரசாட்சி

5. நீர் + பாசனம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

  1. நீர்பாசனம்
  2. நீர்ப்பாசனம்
  3. நீரப்பசனம்
  4. நீரபாசனம்

விடை : நீர்ப்பாசனம்

பந்தை அதன் எதிர்ச்சொல் கூடையில் போடலாமா?

4th Standard Tamil Book 1st Term Solution - Vidiyum Velai - பந்தை அதன் எதிர்ச்சொல் கூடையில் போடலாமா?

  1. தொலைவில் x அருகில்
  2. எதிரிகள் x நண்பர்கள்
  3. பழைமை x புதுமை
  4. அடித்தளம் x மேல்தளம்
  5. பெரிய x சிறிய

சரியானதை எடுத்து எழுது

1. கல்லணை அமைந்துள்ள மாவட்டம் ________ (திருச்சி/ தஞ்சாவூர் )

விடை : தஞ்சாவூர்

2. தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு ________ (வைகை / கொள்ளிடம்)

விடை : கொள்ளிடம்

3. கல்லணையைக் கட்டிய அரசன் ________ (கரிகாலன் / இராசராசன்)

விடை : கரிகாலன்

4. கல்லணை ________ தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகத்திகழ்கிறது (பழந்தமிழர் / இன்றைய)

விடை : பழந்தமிழர்

வினாவிற்கு ஏற்ற விடையளிக்க.

1. கரிகாலனின் இயற்பெயர் என்ன?

வளவன்

2. கரிகாலன் என்று பெயர் வரக் காரணம் என்ன?

  • கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.
  • இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.

3. கரிகாலன் கல்லணையைக் கட்ட காரணம் யாது?

  • காவிரியில் அடிக்கடி வருகின்ற பெருவெள்ள நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும்.
  • மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்காலும், கோடைக்காலத்தில் நீர் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு கல்லணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகாலன்.

4. கல்லணையின் சிறப்பாக நீ நினைப்பதை எழுதுக.

  • கல்லணை பயன்பாட்டிலுள்ள மிகப் பழைமையான ஒரே அணை.
  • இதுவே உலகின் மிகப் பழைமையான நீர்ப்பாசனத்திட்டமாகும்.
  • மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளார்கள்.
  • இது பழந்தமிழரின் கட்டுமானத் திறனுக்குச் சான்றாகும்.
  • இது இன்று வரை வியத்தகு சாதனையாக உள்ளது.

ஓர் எழுத்தைக் கண்டுபிடி, நான்கு சொல்லைப் பெறலாம்

4th Standard Tamil Book 1st Term Solution - Vidiyum Velai - karikalan kattiya kallanai - ஓர் எழுத்தைக் கண்டுபிடி, நான்கு சொல்லைப் பெறலாம்

ம்நீம்
ரம்ம்
னம்காம்
ருந்துவிக்கு
குவி
குளம்மாவிலை
பழகுவிகுதி
தொகுதிவிறகு
குடம்கருவி
அறிந்து கொள்வோம்
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய அணைகள்

  • கல்லணை
  • மேட்டூர் அணை
  • வைகை அணை
  • சாத்தனூர் அணை
  • பவானி சாகர் அணை

அகர முதலி

  • அண்டை நாடு – பக்கத்து நாடு
  • அண்ணல் – கருணை உடையவர்
  • ஆசி – வாழ்த்து
  • ஆட்டாந்தொழு – ஆடு கட்டும் இடம்
  • ஆல் – ஆலமரம்
  • ஆவி – உயிர்
  • ஆயத்தப்படுத்துதல் – தயார் செய்தல்
  • இலகுவான – எளிமையான
  • எண்ணும் – நினைக்கும்
  • என்னில் – எனக்குள்
  • ஓலைக்கொட்டான் – ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை
  • கனிந்து – பழுத்து
  • முறியடித்து – தகர்த்து
  • கொடியடுப்பு – பக்க அடுப்பு
  • சூழ்ச்சி – தந்திரம்
  • சேதாரம் – வீணாதல்
  • துயரம் – துன்பம்
  • துளிர் – இளம் இலை
  • தையலர் – பெண்கள்
  • தொலைவு – தூரம்
  • மன்னர் – அரசர்
  • மாட்டாந்தொழு – மாடுகட்டும் இடம்
  • முளைப்பாரி – நவதானியங்கள் முளைத்துச் சிறிது வளர்ந்து நிறைந்துள்ள மண்பாண்டம்
  • பொதி – மூட்டை
  • வல்லமை – வலிமை
  • வியப்பு – ஆச்சரியம்
  • விரைவில் – வேகமாக
  • வெட்டவெளி – திறந்த வெளி
  • வேளை – நேரம்

4th Std Tamil Term-2 Solution – More Details

Useful Links