6th Std Social Science Term 2 Solution | Lesson.2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

பாடம்.2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் பாட விடைகள்

பாடம்.2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

  1. அங்கங்கள்
  2. திரிபிடகங்கள்
  3. திருக்குறள்
  4. நாலடியார்

விடை : திரிபிடகங்கள்

2. சமணத்தின் முதல் தீர்த்தங்காரர் யார்?

  1. ரிஷபா
  2. பார்சவ
  3. வர்தமான
  4. புத்தர்

விடை : ரிஷபா

3. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

  1. 23
  2. 24
  3. 25
  4. 26

விடை : 24

4. மூன்றாம் பௌத்த சபை எங்கு கட்டப்பட்டது?

  1. ராஜகிரகம்
  2. வைசாலி
  3. பாடலிபுத்திரம்
  4. காஷ்மீர்

விடை : பாடலிபுத்திரம்

5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?

  1. லும்பினி
  2. சாரநாத்
  3. தட்சசீலம்
  4. புத்தகயா

விடை : சாரநாத்

II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கூற்று : ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்து கொள்ள இயலாது.

காரணம் : உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.

  1. கூற்றும் அதன் காரணமும் சரியானவை
  2. கூற்று தவறானது.
  3. கூற்று சரியானது; ஆனால் அதற்கான காரணம் தவறானது.
  4. கூற்று, காரணம் ஆகிய இரண்டு தவறு.

விடை : கூற்றும் அதன் காரணமும் சரியானவை.

2. கூற்று : ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்.

காரணம் : அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.

  1. கூற்றும் அதற்கான காரணமும் சரி
  2. கூற்று தவறு.
  3. கூற்று சரி: ஆனால் அதற்கான காரணம் தவறு.
  4. கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.

விடை : கூற்றும் அதற்கான காரணமும் சரி

3. சரியான விடையைக் கண்டறியவும்.

விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?

1. கல்விக் கூடமாக2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்
3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக4. வழிபாட்டுக் கூடம்
  1. 2 சரி
  2. 1 மற்றும் 3 சரி
  3. 1, 2, 4 ஆகியவை சரி
  4. 1 மற்றும் 4 சரி

விடை : 2 சரி

4. சமணமும் பெளத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்டக் கூற்றுளைக் காரணமாகக் கருதலாமா?

1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதகா இருந்தன

2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்சாதரண மனிதர்களைக் குழப்பமுறச் செய்தன.

மேலேசொல்லப்பட்ட கூற்றில்/கூற்றுகளில், எது/எவை சரியானது/சரியானவை.

  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 மற்றும் 2
  4. 1 மற்றும் 2 ம் இல்லை

விடை : 1 மற்றும் 2

5. சமணம் குறிதத கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

  1. உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் மறுக்கிறது.
  2. உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.
  3. சமணததின அடிப்டைத் தத்துவம் சிலை வழி்பாடாகும்
  4. இறுதித்தீர்பபு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒததுக் கொள்கிறது.

விடை : உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.

6. பொருந்தாததை தேர்வுசெய்.

பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்

விடை : புத்தர்

7. தவறான இணையைக் கண்டுபிடி

  1. அகிம்சை – காயப்டுத்தாமல் இருத்தல்
  2. சத்யா – உண்மை பேசுதல்
  3. அஸ்தேய – திருடாமை
  4. பிரம்மச்சாரியபா – திருமண நிலை

விடை : பிரம்மச்சாரியபா – திருமண நிலை

8. சித்தார்த்த கெளதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத்தவர மற்ற அனைத்தும் சரி.

  1. இந்து மதத்தை நிறுவியவர் அவரே.
  2. அவர் நேபாளத்தில் பிறந்தார்
  3. அவர் நிர்வாணம் அடைந்தார்
  4. அவர் சாக்கியமுனி எனறு அறியபட்டார்

விடை : இந்து மதத்தை நிறுவியவர் அவரே.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மகாவீரரின் கோட்பாடு ________________________ என்று அழைக்கப்படுகிறது.

விடை : திரிரத்தினங்கள்

2.  ____________ என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.

விடை: நிர்வாண நிலை

3. பௌத்தத்தை நிறுவியவர் ____________ ஆவார்.

விடை: கௌதம புத்தர்

4. காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் ____________ என்று அழைக்கப்பட்டது.

வினட: ஜைனக்காஞ்சி

5. ____________ என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்

வினட: ஸ்தூபி

IV. சரியா ? தவறா ?

1. புத்தர் கர்மாவை நம்பினார்.

விடை : சரி

2. புத்தருக்குச் சாதிமுறை மேல் நம்பிக்கை இருந்தது

விடை : தவறு

3. கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்

விடை : சரி

4. விகாரைகள் என்பன கோவில்களாகும்

விடை : தவறு

5. அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார்

விடை : சரி

V. பொருத்துக

1. அங்கங்கள்வர்தமானா
2. மகாவீரர்துறவிகள்
3. புத்தர்பௌத்தக் கோவில்கள்
4. கசத்யாசாக்கியமுனி
5. பிட்சுக்கள்சமண நூல்
விடை : 1- உ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?

  • நன்னம்பிக்கக
  • நல்லறிவு
  • நற்செயல்

2. பௌத்தத்தின் இருபிரிவுகள் எவை?

  • ஹூனாயனம்
  • மகாயானம்.

3. ‘ஜினா’ என்பதின் பாெருள் என்ன?

‘ஜினா’ என்பதன் பாெருள் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.

4. பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பாெதுவான கூறுகளை எழுதுக.

  • மகாவீரர், புத்தர் இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
  • இருந்தபாேதிலும் அவர்கள் அரச குடும்ப உரிமைகளை நிராகரித்து, துறவு வாழ்க்கையைத் தேர்வு செய்தனர்.
  • சமணமும் பௌத்தமும் வேதங்களின் ஆதிக்கத்தை மறுத்தன.
  • மக்கள் பேசிய மொழிகளில் இரு மதங்களும் பாேதிக்கப்பட்டன.

5. பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக.

  • புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக சங்கம் ஒன்றை நிறுவினார். அதில் உறுப்பினர்களாக இருந்த துறவிகள் ‘பிட்சுக்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
  • அவர்கள் மிக எளிய வாழ்க்கையை மேற்காெண்டனர்.

6. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக் குறிப்பிடுக.

கி.பி. (பாெ.ஆ.) ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் என்ற சீனப் பயணி காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.

7. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன?

சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவி கவுந்தியடிகள் ஆவார்.

VII. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

1. பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  1. நல்ல நம்பிக்கை
  2. நல்ல எண்ணம்
  3. நல்ல பேச்சு
  4. நல்ல செயல்
  5. நல்ல வாழ்க்கை
  6. நல்ல முயற்சி
  7. நல்ல அறிவு
  8. நல்ல தியானம்

2. சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?

  • அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது,
  • சத்யா – உண்மையை மட்டுமே பேசுதல்
  • அஸ்தேய – திருடாமை
  • அபரிக்கிரகா – பணம், பாெருள் சாெத்துக்கள் மீது ஆசை காெள்ளலாமல் இருப்பது.
  • பிரம்மச்சரியா – திருமணம் செய்து காெள்ளாமை

3 பௌத்தத்தின் நான்கு பேருண்னமகளை எடுத்துரைக்கவும்.

  1. வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள், நிறைந்தது
  2. ஆசையே துன்பங்களுக்கான காரணம்
  3. ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் பாேக்கி விடலாம்
  4. சரியான பாதையைப் பின்பற்றினால் (எண்வகக வழிகள்) ஆசைகளை வென்று விடலாம்.

4. பௌத்தத்தின் பிரிவுகளான ஹீனயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதவும்.

ஹீனயானம்மகாயானம்
1. புத்தரின் சிலைகளையாே உருவப் படங்களையாே வணங்கமாட்டார்கள்புத்தரின் உருவங்களை வணங்கினர்.
2. மிக எளிமையாக இருப்பர்விரிவான சடங்குகளைப் பின்பற்றினர்.
3. தனிமனிதர்கள் முக்தி அடைவதே தங்களின் நாேக்கம் என்று நம்பினர்.அனைத்து உயிரினங்களும் முக்தி பெறுவதே தங்களின் நாேக்கம் என்று நம்பினர்.
விடை : 1- உ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ

5. சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் செழித்தாேங்கின. ஒவ்வாென்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.

சமணத்திற்கு மிகவும் பிற்பட்டே தமிகத்தில் பௌத்தம் பரவியது. சங்க காலத்திற்குப் பின்னர் இயற்ப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும். மணிமேகலையில் காஞ்சிபுரம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் புகழ் பெற்ற ஒரு பௌத்த மையமாகும்.

பண்டையத் தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை சமணம் என்று குறிப்பிடுகின்றன. அறவாேர் பள்ளியில் சமணத் துறவிகள் வாழ்ந்தாக மணிமேகலையில் குறிப்பு உள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள கீழக்குடியில் கிராமத்தில் சமணர் மலை என்ற ஒரு குன்று உள்ளது.

 

6th Science Book Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்