Tamil Nadu 6th Standard Tamil Book Term 1 கனவு பலித்தது Solution | Lesson 1.4

பாடம் 1.4 கனவு பலித்தது

In the 6th Standard Tamil book answers that we are looking at in order. Today we are going to see the answers of the Kanavu Palithathu (கனவு பலித்தது) lesson.

If you do not see the answers to the first two lessons that we have already posted, See the link below.

தமிழ்த்தேன் > கனவு பலித்தது

வினாக்கள்

1. இன்சுவையின் எண்ணம் நிறைவேறக் காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

இன்சுவையின் எண்ணம் நிறைவேறக் காரணங்களாக இருந்தவை, அவளின் விடாமுயற்சியும், அவளுடைய அத்தையின் உற்சாக முயற்சியும் தான். இன்சுவை முயற்சியில் தளர்ந்து இருந்தபோது அவளுடைய அத்தையின் உற்சாகமான வார்த்தையும் ஆறுதலும் அவளுக்கு உத்வேகத்தைத் தந்தது.

2. அத்தையின் கடிதக் கருத்துக்களைச் சுருக்கி எழுதுக

முன்னுரை

அத்தை இன்சுவைக்கு எழுதிய கடித்தத்தின் சுருக்கத்தை நோக்குவோம்.

மொழி தடையில்லை

தமிழில் படித்தால் சாதிக்க முடியாது என்பது தவறான எண்ணம். சாதனைக்கு மொழி தடையே இல்லை. நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் தமிழர்கள், தமிழி இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்னறன.

அறிவியல் சிந்தனைகள்

தொல்காப்பியர் தன் நூலில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்து இவ்வுலகம் என்றும், உலக உயிர்களை ஒரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ளதையும் காணலாம்.

கடல் நீர் ஆவியாகி மேகமாவும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். இதனை முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை போன்ற இலங்கியங்களில் காண முடிகிறது.

திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்பதை ஒளவையார் தனது பாடலில் கூறியுள்ளார்.

வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியைப் பதிற்றுப்பத்து நூலில் கூறுகிறது. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியை நற்றிணை நூல் கூறுகிறது. இதன் வழி இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம் பெற்றுள்ளது.

முடிவுரை

சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்; நூலகம் செல்; நூல் வாசி; தொடர்ந்து முயற்சி செய்; நீ வெல்வாய்!

3. கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கதைக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதனை விளக்குக

இன்சுவை சிறு வயது முதலே தான் ஓர் அறிவியல் ஆய்வளாராக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதற்காக பல முயற்சிகளையும் எடுக்கின்றாள். ஆனால் அவளுடைய முயற்சிகளுக்குப் பல முட்டுக்கட்டைகள் விழுகின்றன. அதனால் சோர்ந்து போன அவள் தன் அத்தைக்குக் கடிதம் எழுதுகிறாள். தன அத்தையின் கனிவான பேச்சும் உற்சாகமான வார்த்தைகளும் இன்சுவைக்கு உத்வேகத்தை அளிக்கின்றது. அத்தையின் உற்சாகத்தினால் தான் தொடர்ந்து தனது கனவை நனவாக்க பல வழிகளில் முயல்கின்றாள். இறுதியாக தான் ஓர் அறிவியல் ஆய்வாளராக ஆக வேண்டும் என்று எண்ணிய கனவு பலித்தது. ஆகவே கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கதைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.

கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1.ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி
என்ற வரிகளின் ஆசிரியர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. ஒளவையார்
  4. தொல்காப்பியர்

விடை : ஒளவையார்

2. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
என்ற வரிகளை எழுதியவர்

  1. தொல்காப்பியர்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. ஒளவையார்

விடை : தொல்காப்பியர்

3. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர் _______

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. ஒளவையார்
  4. தொல்காப்பியர்

விடை : தொல்காப்பியர்

4. கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி…. என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  1. பதிற்றுப்பத்து
  2. கார் நாற்பது
  3. நற்றிணை
  4. தொல்காப்பியம்

விடை : கார் நாற்பது

5. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியை பற்றி கூறும் நூல்

  1. பதிற்றுப்பத்து
  2. கார் நாற்பது
  3. நற்றிணை
  4. தொல்காப்பியம்

விடை : நற்றிணை

6. போர்களத்தில் _______புண்படுவது இயல்பு 

  1. கழுத்தில்
  2. மார்பில்
  3. காலில்
  4. தலையில்

விடை : மார்பில்

7. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் _______

  1. கலீலியோ
  2. தாமஸ் ஆல்வா எடிசன்
  3. நியூட்டன்
  4. சார்லஸ் பாபேஜ்

விடை : கலீலியோ

8. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியானது இடம் பெற்றுள்ள நூல்.

  1. பதிற்றுப்பத்து
  2. கார் நாற்பது
  3. நற்றிணை
  4. தொல்காப்பியம்

விடை : பதிற்றுப்பத்து

10. திருவள்ளுவமாலை என்ற நூலை எழுதியவர் _______

  1. திருவள்ளூவர்
  2. திருவள்ளுவ முனுசாமி
  3. இராபி. சேதுபிள்ளை
  4. கபிலர்

விடை : கபிலர்

II. குறுவினா

1. எவையெல்லாம் கலந்தது உலகம் என தொல்காப்பியர் கூறுகிறார்?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.

2. கடல் நீர் ஆவியாதல் பற்றி குறிப்பிடும் நூல்கள் யாவை?

கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும்.

பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

3. ஒவையார் திரவப்பொருள்களை அளவை சுருக்க முடியாது என்பதை பற்ற பாடியுள்ள பாடலினை கூறுக

திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தினை

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி

என்ற பாடலின் மூலம் ஔவையார் கூறியுள்ளார்.

4. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பற்றி பதிற்றுப்பத்து நூலில் இடம் பெற்றுள்ள கருத்தினை கூறுக?

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.

பதிற்றுப்பத்து

5. சுறாமீன் தாக்கிய செய்தியும் பற்றி நற்றிணை கூறும் செய்தி யாது?

சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி பற்றி நற்றிணை கூறுகிறது.

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்

6. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் கபிலர் எழுதிய பாடலினை எழுதுக.

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்

– திருவள்ளுவமாலை

7. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்களை எழுதுக

  • மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல்கலாம்
  • இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
  • இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை. சிவன்.

சில பயனுள்ள பக்கங்கள்