Tamil Nadu 6th Standard Tamil Book Term 1 துன்பம் வெல்லும் கல்வி Solution | Lesson 3.2

பாடம் 3.2 துன்பம் வெல்லும் கல்வி

Samacheer Kalvi Solutions for Class 6 Tamil Term 1 Chapter 3.2 துன்பம் வெல்லும் கல்வி Lesson are available here.

கல்வி > 3.2 துன்பம் வெல்லும் கல்வி

எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.

மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

சொல்லும் பொருளும்

  1. தூற்றும் படி – இகழும் படி
  2. மூத்தோர் – பெரியோர்
  3. மேதைகள் – அறிஞர்கள்
  4. மாற்றார் – மற்றவர்
  5. நெறி – வழி
  6. வற்றாமல் – அழியாமல்

மோனை

  • ட்டில் – ன் படித்தோம்
  • நாட்டின் – ல்லவர்

இயைபு

  • இருந்துவிடாதே – மறந்துவிடாதே
  • வாழக்கூடாது – சேரக்கூடாது

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது.

  1. போற்றும்படி
  2. தூற்றும்படி
  3. பார்க்கும்படி
  4. வியக்கும்படி

விடை : தூற்றும்படி

2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும்.

  1. இளையோர்
  2. ஊரார்
  3. மூத்தோர்
  4. வழிப்போக்கர்

விடை : மூத்தோர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

  1. கையில் + பொருள்
  2. கைப் + பொருள்
  3. கை + பொருள்
  4. கைப்பு + பொருள்

விடை : கை+பொருள்

4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. மானம்இல்லா
  2. மானமில்லா
  3. மானமல்லா
  4. மானம்மில்லா

விடை : மானமில்லா

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனமாற்றம்

விடை : மனிதன் தீயவழியிலிருந்து நல்வழிக்கு மனமாற்றம்  அடைய வேண்டும்.

2. ஏட்டுக்கல்வி

விடை : மாணவர்கள் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அனுபவ கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும்

3. நல்லவர்கள்

விடை : இந்த உலகில் நல்லவர்கள் என்று யாரும் கிடையாது

4. சோம்பல்

விடை : சோம்பல் மனித வாழ்க்கைக்கு எதிரி

குறுவினா

1. நாம் யாருடன் சேரக்கூடாது?

நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது

2. எதை நம்பி வாழக்கூடாது?

மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது

3. இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள் எது?

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின் படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமைகளையும் பெறலாம்

கூடுதல் வினாக்கள் 

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. துன்பத்தை வெல்ல ________ வேண்டும்

விடை : கல்வி

2. நெறி என்னும் சொல் தரும் பொருள் ________

விடை : வழி

3. மானமில்லா ________ சேரக்கூடாது

விடை : கோழையுடன்

4. ________ என்னும் சிறப்பினை பெற்றவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

விடை : மக்கள் கவிஞர்

5. திரையிசைப் பாடல்களில் ________ உயர்வைப் போற்றினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

விடை : உழைப்பாளிகளின்

6. துன்பத்தை நீக்கும் ________ கற்க வேண்டும்

விடை : கல்வியினைக்

7. வானைத்தொடும் அளவுக்கு ________ வளர்த்துக் கொள்ள வேண்டும்.

விடை : அறிவை

பிரித்து எழுதுக

  1. குணமிருந்தால் = குணம் + இருந்தால்
  2. கைப்பொருள் = கை + பொருள்

துன்பம் வெல்லும் கல்வி பாடலிலுள்ள மோனைச் சொற்களை எழுதுக

மேனைச் சொற்கள்
டந்துவிடாதே – ல்லவர்கள்
மாற்றார் – மானமில்லா
ம்பு – ளர்ச்சி
வெற்றிமேல் – வெற்றிவர
ல்வி – ற்றிட

துன்பம் வெல்லும் கல்வி பாடலிலுள்ள எதுகைச் சொற்களை எழுதுக

எதுகைச் சொற்கள்
வெற்றிமேல் – வெற்றிவர
பெற்ற – வற்றாமல்
ண்ணில் – வேண்டும்
கொல்லும் – கல்வி
மீ – மா

V. சிறுவினா

1. நாம் யார் தூற்றும்படி வாழக் கூடாது என பட்டுக்கோட்டையார் கூறுகின்றனார்?

நாம் நல்வர்கள் தூற்றும்படி வாழக்கூடாது என பட்டுக்கோட்டையார் கூறுகின்றனார்

2. நாம் எதனை மறக்கக் கூடாது?

நூல்களை கற்றதன் பயனை மறந்து விடக் கூடாது.

3. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார்?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

4. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் சிறப்பு பெயர் யாது?

மக்கள் கவிஞர்

 

சில பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment