பாடம் 1.1. மூதுரை
கண்ணெனத் தகும் > 1.1. மூதுரை
மூதுரையின் ஆசிரியர் ஒளவையார். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன. |
I. சொல்லும் பொருளும்
- மசற – குறைஇல்லாமல்
- சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
- தேசம் – நாடு
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர்கள் நூல்களை _______க் கற்க வேண்டும்.
- மேலோட்டமாக
- மாசற
- மாசுற
- மயக்கமுற
விடை : மாசற
2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- இடம் + மெல்லாம்
- இடம் + எல்லாம்
- இட + எல்லாம்
- இட + மெல்லாம்
விடை : இடம் + எல்லாம்
3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- மாச + அற
- மாசு + அற
- மாச + உற
- மாசு + உற
விடை : மாசு + அற
4. குற்றம் + இல்லாதவர் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- குற்றமில்லாதவர்
- குற்றம்இல்லாதவர்
- குற்றமல்லாதவர்
- குற்றம் அல்லாதவர்
விடை : குற்றமில்லாதவர்
5. சிறப்பு + உடையார் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- சிறப்புஉடையார்
- சிறப்புடையார்
- சிறப்படையார்
- சிறப்பிடையார்
விடை : சிறப்புடையார்
III. குறுவினா
கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
மன்னனையும், குறையில்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனை விடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவருக்கு சென்ற இடெமல்லாம் சிறப்பு |
IV. சிறுவினா
கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
அறிவியல், பொறியியல், பொருளியல் முதலியவற்றை வளர்ந்தோங்கச் செய்வது கல்வியே. கல்வியால் மனிதன் விண்ணையும் மண்ணையும் அளக்க அறிநது கொண்டான். இன்றைய உலகில் அறிவியலின் கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பெருகிய வண்ணமாக உள்ளன. ஒருவனுக்குள் புதைந்து கிடைக்கும் அறியாமையைத் தோண்டி எடுப்பதே கல்வியாகும். உள்ளத்தை அறிவான் நிலப்பி ஒழுக்கத்தை வளர்த்திட, மனிதனாக வாழந்திட நூல்களைக் கற்பதே கல்வியாகும். |
V. சிந்தனை வினா
கல்லாதவர்க்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக
|
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ஆத்திச்சூடி நூலின் ஆசிரியர் ________
- பூங்குன்றனார்
- ஓளவையார்
- கண்ணகனார்
- பிசிராந்தையர்
விடை : ஒளவையார்
2. மன்னன் என்ற சொல்லுக்கும் தமிழில் வழங்கும் வேறு பெயர்கள் ________
- அறிஞன்
- சான்றோன்
- கோ
- பெரியன்
விடை : கோ
3. மூதுரையில் ________ பாடல்கள் உள்ளன
- 31
- 32
- 71
- 72
விடை : 31
4. மன்னனை விடக் ________ சிறந்தவர்
- அறிஞரே
- சான்றோரே
- கற்றவரே
- பெரியவரே
விடை : கற்றவரே
5. இடம் + எல்லாம் = ________
- இடஎல்லாம்
- இடமெலாம்
- இடம்மெல்லாம்
- இடமெல்லாம்
விடை : இடமெல்லாம்
II. இப்பாடலில் உள்ள எதுகை, மோனைச்சொற்களை எடுத்து எழுதுக
எதுகைச் சொற்கள் | மோனைச் சொற்கள் |
மன்னனும் – மன்னனின் | மன்னனும் – மன்னனின் |
கற்றோன் – கற்றோனும் | கற்றோன் – கற்றோனும் |
சிறப்புடையான் – சிறப்பில்லை | சிறப்புடையான் – சிறப்பில்லை |
கற்றோன் – கற்றோருக்கு | கற்றோன் – கற்றோருக்கு |
மன்னற்குத் – தன்தேசம் |
III. குறுவினா
1. “மூதுரை” என்னும் சொல்லின் பொருள் யாது?
“மூதுரை” என்னும் சொல்லின் பொருள் “மூத்தோர் கூறும் அறிவுரை” என்பதாகும்
2. ஒளவையார் – குறிப்பு வரைக
- மூதுரையின் ஆசிரியர் ஒளவையார் ஆவார்
- இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி என்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
3. மூதுரை – நூற்குறிப்பு வரைக
|