Tamil Nadu 6th Standard Tamil Book Term 2 வளரும் வணிகம் Solution | Lesson 3.3

பாடம் 3.3 வளரும் வணிகம்

Samacheer Kalvi Solutions for Class 6 Tamil Term 2 Chapter 3 வளரும் வணிகம் Lesson are available here.

These solutions are prepared by our experts to provide a proper understanding of this lesson.

After you have studied the lesson, you must be looking for answers to its questions. Here you can get complete Solutions for 6th Standard Term II Tamil.

கூடித் தொழில் செய் > 3.3 வளரும் வணிகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பாெருள் வாங்குபவர்_______

  1. நுகர்வோர்
  2. தொழிலாளி
  3. முதலீட்டாளர்
  4. நெசவாளி

விடை: நுகர்வோர்

2. வணிகம் + சாத்து என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. வணிகசாத்து
  2.  வணிகம்சாத்து
  3. வணிகச்சாத்து
  4. வணிகத்துசாத்து

விடை: வணிகச்சாத்து

3. பண்டம் + மாற்று என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. பண்டமாற்று
  2. பண்டம்மாற்று
  3. பண்மாற்று
  4. பண்டுமாற்று

விடை: பண்டமாற்று

4. வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. வண்ணம்+படங்கள்
  2. வண்ணப்+படங்கள்
  3. வண்ண+படங்கள்
  4. வண்ணமான+படங்கள்

விடை: வண்ணம்+படங்கள்

5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. விரி + வடைந்த
  2. விரி + அடைந்த
  3. விரிவு + அடைந்த
  4. விரிவ் + அடைந்த

விடை: விரிவு + அடைந்த

II. சொற்களை சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. வணிகம் 

  • ஒரு பொருளை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்

2. ஏற்றுமதி

  • ஒரு நாட்டில் தேவைகளுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் ஏற்றுமதி செய்யப்படுகின்றன

3. சில்லறை

  • சில்லறை கொள்முதல் செய்வது சிறுவணிகம் ஆகும்

4. கப்பல்

  • ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது.

III. குறு வினா

1. வணிகம் என்றால் என்ன?

மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தனக்குத் தேவையான சில பொருள்களை பிறரிடமிருந்து வாங்குவான்.

தன்னிடம் உள்ள சில பொருள்களை பிறருக்கு தருவான். இவ்வாறு ஒரு பொருளை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும்  வணிகம் ஆகும்.

2. பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டு தருக?

நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களை பிறருக்க கொடுத்து, தனக்கு தேவையான பொருள்களை பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகமுறை ஆகும்.

எ.கா.

  • நெல்லை கொடுத்து அதற்குப் பதிலாக உப்பை பெறுதல்
  • ஆட்டின் பாலைக் கொடுத்து தானியத்தை பெறுதல்

3. சிறுவணிகப் பொருட்கள் யாவை?

சிறு முதலீட்டல் பொருட்களை வாங்கி வந்து வீதிகளில் வைத்து விற்பனை செய்வதும்; தலையில் சுமந்து சென்று விற்பதும்; தரைக்கடை அமைத்து விற்பதும்; தள்ளுவண்டியின் மூலம் விற்பதும்; போன்ற முறைகளில் விறகும் பொருட்கள் சிறுவணிகப் பொருட்கள் ஆகும்

IV. சிறு வினா

1. சிறுவணிகம், பெருவணிகம் வேறுபடுத்துக

சிறு வணிகம்பெரு வணிகம்
சிறு முதலீட்டில் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வதுபெரு முதலீட்டில் அதிக அளவு பொருட்களை வாங்கி விற்பனை செய்வது
வீதியில் கொண்டு சென்று விற்பதுபெரிய அளவில் கடைகள் அமைத்து விற்பது
சில்லறை கொள்முதல் செய்வதுமொத்தமாக கொள்முதல் செய்வது
பெருவணிகர்களிடம் பொருட்களை வாங்குவார்கள்உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பொருட்களை வாங்குவார்கள்
சிறு லாபம் கிடைக்கும்பெரு லாபம் கிடைக்கும்
நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வது அதிகம்நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வது குறைவு

2. பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?

  • பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவைகளை பிறநாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர்
  • பழங்காலத்தில் சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன

V. ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச் சொல்லை எழுதுக

(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)

ஆங்கிலச் சொல்தமிழ்ச்சொல்
கரன்சிநோட்பணத்தாள்
பேங்க்வங்கி
செக்காசோலை
டிமாண்ட் டிராப்ட்வரவோலை
டிஜிட்டல்மின்னணு மயம்
டெபிட் கார்டுபற்று அட்டை
கிரெடிட் கார்டுகடன் அட்டை
ஆன்லைன் ஷாப்பிங்இணையத்தள வணிகம்
ஈ-காமர்ஸ்மின்னணு வணிகம்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழ்நாட்டின் தலைசிறந்த காப்பிய கால துறைமுகம் _________

விடை : பூம்புகார்

2. அரேபியாவில் இருந்து வாங்கப்பட்டவை _________

விடை : குதிரைகள்

3. நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என வணிகரைப் பாராட்டும் நூல் _________

விடை : பட்டினப்பாலை

4. பொருட்களை விற்பவர் _________. பொருட்களை வாங்குபவர் _________

விடை : வணிகர், நுகர்வோர்

5. கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு _________ உதவுகிறது

விடை : இணையவழி வணிகம்

6. பெருந்தொகையை முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில் திரட்டி விற்பனை செய்வது ______

விடை : பெருவணிகம்

7. வணிகத்தை _________, ________ என்றும் பிரிக்கலாம்

விடை : தனிநபர் வணிகம், நிறுவனம் வணிகம்

8. வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்கு செல்லும் குழுவினை ________ என்பர்

விடை : வணிகச்சாத்து

9. நெல்லை கொடுத்து அதற்கு பதிலாக _______ பெற்றனர்

விடை : உப்பைப்

10. ஆட்டின் பாலை கொடுத்து _______பெற்றன

விடை : தானியத்தை

II. சிறு வினா

1. துறைமுக நகரங்கள் எப்பெயரில் குறிக்கப்பட்டன?

  • பட்டினம்
  • பாக்கம்

2. வணிகத்தை எவ்வாறு பிரிக்கலாம்? அவற்றை விளக்குக

வணிகத்தை இருவகையாக பிரிக்கலாம்

  1. தனிநபர் வணிகம்
  2. நிறுவன வணிகம்

தனிநபர் வணிகம் :-

தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் எனப்படும்

நிறுவன வணிகம் :-

ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது நிறுவன வணிகம் ஆகும்

3. வணிகச்சாத்து என்பது பற்றி எழுதுக.

வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை சுற்றி  வெளியூர்களுக்குச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகச்சாத்து என்பர்

4. வணிகம் உயர்ந்தாக எப்படி கூற முடியும்?

வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது. பணத்தை பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இப்போது மின்னணுப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வருங்காலத்தில் வணிகத்தில் இன்னும் பல புதுமைகள் வரக்கூடும்.

5. வாணிகத்தில் நடுநிலை பற்றி விளக்குக.

வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். எனவே வணிகரை

“நடுவு நின்ற நன்னெஞ்சினோர்”

என்று பட்டினப்பாலை பாராட்டுகிறது.

6. பண்டமாற்று வணிகம் பற்றி தமிழ் நூல்கள் கூறுவன யாவை?

தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி
……….
உமணர் போகலும்

நற்றிணை – 183

பாலொடு வந்து கூழொடு பெயரும் ……

குறுந்தொகை – 23

பொன்னொடு வந்து கறியொடு பெயரும் ……

அகநானூறு – 149

 

சில பயனுள்ள பக்கங்கள்