பாடம்.1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

பாடம்.1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
சொற்களஞ்சியம்
| வரலாற்றுப் பதிவாளர் | chronicler | a person who writes accounts of important historical events |
| விரோதம், பகைமை | animosity | hostility, antagonism |
| பயணக்குறிப்புகள் | travelogue | a book or illustrated account of the places visited and experiences encountered by a traveller |
| நினைவாக | commemoration | in remembrance of |
| விரிவாக | elaborately | in detail |
| தூபிகள் | minarets | a tall tower, typically part of a mosque |
| களஞ்சியங்கள் | repositories | the places, buildings where materials are stored or kept |
| உருவப்படங்கள் | portraits | pictures, images in drawing or painting |
| தொகுப்பு | compendium | a collection of detailed information about a particular subject, especially in a book |
| சான்றுகளுடன் நிரூபித்தல் | substantiate | to prove with evidence |
சரியான விடையைத் தேர்ந்தெடு எழுதுக
1. _________ என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.
- காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
- பயணக்குறிப்புகள்
- நாணயங்கள்
- பொறிப்புகள்
விடை : பொறிப்புகள்
2. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் _________ ஆகும்.
- வேளாண்வகை
- சாலபோகம்
- பிரம்மதேயம்
- தேவதானம்
விடை : தேவதானம்
3. _________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
- சோழர்
- பாண்டியர்
- ராஜபுத்திரர்
- விஜயநகர அரசர்கள்
விடை : சோழர்
4. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் _________ ஆகும்.
- அயினி அக்பரி
- தாஜ் – உல் – மா -அசிர்
- தசுக்-இ-ஜாஹாங்கீரி
- தாரிக் – இ – பெரிஷ்டா
விடை : தாஜ் – உல் – மா -அசிர்
5. அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் _________ ஆவார்.
- மார்க்கோபோலோ
- அல் -பரூனி
- டோமிங்கோ பயஸ்
- இபன் பதூதா
விடை : இபன் பதூதா
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.
விடை : உத்திரமேரூர்
2. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் _________ ஆவார்.
விடை : முகமது காேரி
3. ஒரு _________ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.
விடை : ஜிட்டல்
4. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் ___________ ஆவார்.
விடை : மின்கஜ் உஸ் சிராஜ்
5. கி.பி.1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி _________ ஆவார்.
விடை : நிகாேலாே காேண்டி
பொருத்துக:
| 1. கஜுராகோ | ஒடிசா |
| 2. கொனாரக் | ஹம்பி |
| 3. தில்வாரா | மத்தியப்பிரதேசம் |
| 4. விருப்பாக்சா | ராஜஸ்தான |
| Ans : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ | |
சரியா? தவறா?
1. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.
விடை : சரி
2. நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.
விடை : தவறு
3. தாமிரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.
விடை : சரி
4. டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி.1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.
விடை : தவறு
கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.
கூற்று : முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம் : இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
- கூற்று தவறு, காரணம் சரி.
- கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
விடை : காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
தவறான இணையைக் கண்டறியவும்:
- மதுரா விஜயம் – கங்காதேவி
- அபுல் பாசல் – அயினி அக்பர்
- இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்
- அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்
விடை : இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்
பொருந்தாததைக் கண்டுபிடி:
பொறிப்புகள், பயணக்குறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள்.
விடை : பயணக்குறிப்புகள்
ஒரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்
1. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
நாதமுனி
2. ‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?
வாழ்க்கை நினைவுகள்
3. ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?
தசுக்-இ-ஜாஹாங்கீர்
4. வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.
- முதல் நிலைச் சான்றுகள்
- இரண்டாம் நிலைச் சான்றுகள்
5. இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கோட்டைகளையும் பட்டியலிடவும்.
மசூதிகள்
- குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி
- மோத்- கி-மசூதி
- ஜமா மசூதி
- பதேப்பூர் சிக்ரி தர்கா
மசூதிகள்
- ஆக்ரா கோட்டை
- சித்தூர் கோட்டை,
- குவாலியர் கோட்டை
- டெல்லி செங்கோட்டை
- தௌலதாபாத் (ஔரங்காபாத்), பிரோஷ் ஷா கொத்தளம்
6. இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.
- மார்க்கோபோலோ
- அல்பருனி
- இயன் பதூதா
- நிகோலோ கோண்டி
- டோமிங்கோ பயஸ்
கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்
1. டெல்லி சுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
- டெல்லி சுல்தான்கள் பலவகையான நாணயங்களை வெளியிட்டனர்.
- தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களை வெளியிட்டனர்.
- ஜிட்டல் எனப்படும் செம்பு நாணயங்களும், டங்கா எனப்படும் வெள்ளி நாணயங்களும் வெளியிடப்பட்டன.
- நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள படங்களும், உருவங்களும், அரசர்களுடைய பெயர்கள், பட்டங்கள் அவர்களின் உருவப்படங்கள், நிகழ்வுகள், இடங்களின் பெயர்கள் சின்னங்கள் ஆகி யவற்றை நமக்கு உணர்த்துகின்றன.
- அரசர்களின் இராணுவப் படையெடுப்புகள், பிரதேச விரிவாக்கம், வணிகத் தொடர்பு மற்றும் சமய நம்பிக்கை ஆகியவையும் நாணயங்களில் இடம் பெற்றுள்ளன.
- நாணயங்களில் உள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்து விளக்குகின்றது.
- அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள் நாட்டின் பொருளாதார வளத்தை எடுத்துக்காட்டுகிறது.
- அதேபோன்று முகமது பின்துக்ளக்கின் செப்பு நாணயங்கள் நாட்டின் நலிவு நிலையைக் காட்டுகின்றன.
கட்டக வினாக்கள்
| ________ பேரரசர் ஒளரங்கசீப்பின் அரசவை அறிஞர் ஆவார். விடை: காஃபி கான் | திருவாலங்காடு செப்பேடுகள் ________ காலத்தைச் சேர்ந்ததாகும். விடை: முதலாம் இராஜேந்திர சோழன் |
| ________ என்பது கல்விக் கூடங்களைப் பராமரிப்பதற்கான நிலமாகும். விடை: சாலபோகம் | பெரியபுராணத்தைத் தொகுத்தவர் ________ ஆவார். விடை: சேக்கிழார் |
| ________ ஓர் அரேபியச் சொல். இதன் பொருள் வரலாறு என்பதாகும். விடை: தாரிக் | முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கே அமைந்திருந்த ________க்கு மாற்றினார். விடை: தேவகிரி |
சில பயனுள்ள பக்கங்கள்