பாடம்.9 சாலைப் பாதுகாப்பு

பாடம்.9 சாலைப் பாதுகாப்பு
சொற்களஞ்சியம்
| பாதசாரிகள் | Pedestrians | persons walking on the road |
| விபத்தால் ஏற்படும் இழப்பு | Fatalities | deaths due to accident |
| குடும்பத்திற்காக சம்பாதிப்பவர் | Breadwinner | one who earns money to support the family |
| மிகவும் கடுமையான | Stringent | severe |
| மோதல் | Collision | crash |
| திருத்தம் | Rectification | correction |
| பாதையில் உள்ள குழிகள் | Potholes | holes in a road surface |
| கட்டாயம் | Mandatory | compulsory |
| கட்டை தூண்கள் | Bollards | short concrete posts used to prevent vehicles on the road |
| இருசக்கர வாகன பின்இருக்கை | Pillion | seat behind in a two wheeler |
சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. சாலைப்பாதுகாப்பு என்பது இவர்களுக்கானது
- வழிப்போக்கர்கள்
- ஓட்டுநர்கள்
- பொதுமக்கள்
- சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்
விடை: சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்
2. சாலை விபத்துகள் ஒரு நாட்டின் ________ பாதிக்கின்றன
- முன்னேற்றத்தை
- வாழ்வை
- பொருளாதாரத்தை
- மேற்கூறிய அனைத்தையும்
விடை : மேற்கூறிய அனைத்தையும்
3. அனுமதி என்பது
- இயக்குவதற்கு அனுமதி
- பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
- ஓட்டுநருக்கு சான்றிதழ்
- வாகனத்தை பதிவு செய்த சான்றிதழ்
விடை: இயக்குவதற்கு அனுமதி
4. ரக்ஷா பாதுகாப்பு
- பாதசாரிகள்
- மோட்டார் வாகன ஓட்டிகள்
- கார் இயக்குபவர்கள்
- பயணிகள்
விடை: கார் இயக்குபவர்கள்
5. இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்
- 1947
- 1990
- 1989
- 2019
விடை: 1989
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. போக்குவரத்தில் மனிதனின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பு _________ ஆகும்.
விடை: சக்கரம்
2. நமது வாழ்க்கைப் பயணத்தில் ________ யைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
விடை: வாகனங்களை
3. சாலைகளில் அதிகமான வாகனங்களால் ________ மற்றும் ________ மாசுபாடும் ஏற்படுகின்றன.
விடை: போக்குவரத்து நெரிசலும் மற்றும் காற்று
4. _______ குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்
விடை: குடும்பத்தலைவன்
5. மருத்துவ உதவியின் அவசர தேவைக்கு ________ எண்ணை அழைக்கலாம்.
விடை: 108
பொருத்துக
| 1. தகவல் குறியீடுகள் | போக்குவரத்து விளக்குகள் |
| 2. வரிக்குதிரை கடப்பு | குறுகிய வளைவு குறியீடு |
| 3. கட்டாயக் குறியீடுகள் | பெட்ரோல் பங்க் குறியீடு |
| 4. எச்சரிக்கைக் குறியீடுகள் | ஓட்டுநர் உரிமம் |
| 5. வாகனம் ஓட்டும் உரிமை | பாதசாரிகள் |
| விடை: 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ | |
பின்வரும் அறிக்கைகளை ஆராய்க.
1. கூற்று : கார் பூலிங் என்பது ஒரே தடத்திலிருந்து பலர் ஒன்றுகூடி ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது.
காரணம் : அது எரிபொருள், நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று சரி, காரணமும் சரி
- கூற்று தவறு, காரணம் சரி
- இரண்டுமே தவறு
விடை: கூற்று சரி, காரணமும் சரி
பொருத்தமில்லாத ஒன்றைக் கண்டுபிடி.
- கார்
- டிரக்
- டெம்போ
- ஏரோப்ளேன்
விடை: ஏரோப்ளேன்
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதைக் கண்டுபிடி.
அ) பள்ளிப் பாடத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்புக் கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும்.
ஆ) சாலைகளில் மண் குவிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
இ) குழந்தைப்பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்.
விடை: அ மற்றும் இ
ஓரிரு வாக்கியங்களில் விடையளி.
1. வாகனம் இயக்கும்போது ஏற்படக்கூடிய கவனச்சிதறல்கள் எவை?
- ஓட்டுநர் வாகனத்தை இயக்கும்போது, வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபடுவதால், கவனச்சிதறல் ஏற்படுகிறது.
- வாகனம் இயக்கும்போது, கைப்பேசியில் பேசுவதோ, அதில் குறுஞ்செய்தி அனுப்புவதோ, மற்ற பல செயல்களில் ஈடுபடுவதோ கவனச்சிதறலுக்கு வழிவகுக்கிறது.
2. பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவதற்கு இரண்டு பாதுகாப்பு முறைகளைக் கூறு.
- இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது தலைக்கவசம் பயன்படுத்துதல்
- நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது சீட் பெல்ட் பயன்படுத்துதல்
3. இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏன்?
- இரவு நேரத்தில் வாகனம் இயக்கும்போது அதிகமான கவனம் தேவைப்படுகிறது.
- கட்டுப்படுத்த முடியாத தூக்கம், அதிக தூரம் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் சோர்வு மற்றும் சாலையில் குறைந்த வெளிச்சம் ஆகியவையே கோரமான சாலை விபத்துகளுக்குக் காரணமாகின்றன.
4. ஒரு வாகனத்தை இயக்குவதற்குரிய உரிமம் எப்போது ஒருவருக்குக் கிடைக்கும்?
- ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான பயிற்சியும் அதற்கான தேர்வுகளில தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
- இந்திய சட்டப்படி, ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெற வயது 18
5. பொதுமக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட ஊடகம் என்ன செய்ய வேண்டும்?
- சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வெகுஜன ஊடகங்களும் பத்திரிகைகளும் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
- குறிப்பாக, அவை தடுப்புச் செய்திகளைப் பரப்புவதோடு பாதுகாப்பான நடத்தைகளை ஊக்குவிக்கவும், மக்களின் அறிவையும் பிரச்சினையின் ஈர்ப்பு பற்றிய புரிதலையும் அதிகரிக்கலாம் மற்றும் பாதுகாப்பான சாலைகள் மற்றும் அமைப்புகளுக்காக வாதிடலாம்.
விரிவான விடையளி.
1. ஓர் இந்தியன் வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான ஆவணங்கள் எவை?
- ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான பயிற்சியும் அதற்கான தேர்வுகளில தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
- வாகன இயக்குபவர்கள், எப்போதும் தம்முடைய ஒட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், காப்பிட்டுச் சான்றிதழ், வாகனவரி கட்டியதற்கான சான்றிதழ், அனமதி மற்றம் தகுதித் சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
2. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சாலைப்பாதுகாப்பு விதிகளை எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம்?
- சாலை பாதுகாப்பு கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
- ஒரு குழந்தையின் பெற்றோர் போக்குவரத்து விதிகளை மீறினால், குழந்தையும் எதிர்காலத்தில் இதைப் பின்பற்றுவார். எனவே பாதுகாப்பு விதிகளையும் விதிகளையும் கடைப்பிடிப்பதில் மூப்பர்கள் அவர்களுக்கு ஒரு முன்மாதிரி வைக்க வேண்டும்.
- சாலை பாதுகாப்பு கல்வி குழந்தை பருவத்திலிருந்தே வழங்கப்பட வேண்டும்.
இது பள்ளி பாடத்திட்டம், பாடத்திட்டங்கள், உரை புத்தகம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு சாலை பாதுகாப்பு தொடர்பான போட்டியில் சேர்க்கப்பட வேண்டும். - இந்த கருப்பொருளில் கோஷங்கள், கட்டுரைகள் மற்றும் ஓவியங்கள் எழுதுதல் போன்ற நடவடிக்கைகள் வலுவூட்டலுக்காக நடத்தப்பட வேண்டும்.
சில பயனுள்ள பக்கங்கள்