8th Std Science Solution in Tamil | Lesson.21 பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை

பாடம்.21 பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை

8th-Std-Science-Book-Back-Answers in Tamil Lesson-21

பாடம்.21 பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. மண்ணில் விதைகளை இடும் செயல் முறையின் பெயர் _______

  1. உழுதல்
  2. விதைத்தல்
  3. பயிர்ப்பெருக்கம்
  4. பயிர்ச் சுழற்சி

விடை : விதைத்தல்

2. மண் மேற்பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை _______

  1. நீர் பாசனம்
  2. பரப்பு நீர் பாசனம்
  3. தெளிப்பு நீர் பாசனம்
  4. சொட்டு நீர் பாசனம்

விடை : தெளிப்பு நீர் பாசனம்

3. பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளையும் சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள்

  1. உயிரி-பூச்சிக் காெல்லிகள்
  2. உயிரி உரங்கள்
  3. மண்புழுக்கள்
  4. வேம்பு இலைகள்

விடை : உயிரி-பூச்சிக் காெல்லிகள்

4. திறன்மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு எதில் பயன்படுவது இல்லை?

  1. விதை நேர்த்தி செய்தல்
  2. இலைத் தெளிப்பு
  3. மண் நேர்த்தி செய்தல்
  4. உயிரி- காென்றுண்ணிகள்

விடை : விதை நேர்த்தி செய்தல்

5. பின்வருவனற்றுள் பஞ்காவ்யாவில் இல்லாதது எது?

  1. பசுவின் சாணம்
  2. பசுவின் சிறுநீர்
  3. தயிர்
  4. சர்க்கரை

விடை : சர்க்கரை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ஓர் இடத்தில் வளரக்கூடிய பயிர்களை பயிர்களைப் பிடுங்கி வேறொரு வளரிடத்தில் நடவு செய்யும் முறை _______ ஆகும்.

விடை : பயிர் நடவு செய்தல்

2. விரும்பாத இடத்தில் வளரும் தாவரத்தின் பெயர் _______

விடை : களை

3. களைகளை காெல்லுவதற்கு அல்லது அதன் வளர்ச்சியை தடுப்பதற்கு பயன்படும் வேதிப் பொருளின் பெயர் _______

விடை : களைக்கொல்லி

4. _______ விதைகள் தனது தனித்துவப் பண்புகளை அதன் வழித் தாேன்றலுக்கு கடத்துகின்றன.

விடை : பாரம்பரிய

5. _________ மையங்கள் ICAR மற்றும் விவசாயிகளுக்கிடையேயான இறுதி இணைப்பாகச் செயல்படுகின்றன.

விடை : KVK (க்ரிஷி விஞ்ஞான கேந்திரா)

6. அதிக விளைச்சலைத் தரக்கூடிய பெரும்பயிர் வகைகள் _________ ஆல் உருவாக்கப்ட்டுள்ளன.

விடை : இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)

III.பொருத்துக.

1. உயிரி-பூச்சிக் காெல்லிகள்வேப்பிலைகள்
2. உயிரி- காென்றுண்ணிகள்பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
3. உயிரி-உரங்கள்வெள்ளை ஈக்களை கட்டுப்படுகிறது
4. உயிரி-சுட்டிக் காட்டிகள்மண் வளத்தை மேம்படுத்தல்
5. உயிரி–பூச்சி விரட்டிகள்சூழ்நிலையின் தரம்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ, 5 – அ

IV. குறுகிய விடையளி

1. உழுதல் – வரையறு.

விவசாயப் பயிர்களின் வேர்ப்பகுதிகளில் ஊட்டப் பொருள்கள் கிடைப்பதற்கு மண்ணை மேல்கீழாக மாற்றி மற்றும் தளர்வடையச் செய்யும் முறை உழுதல் எனப்படும்.

2. விதைத்தலின் வகைகளைப் பட்டியலிடுக.

  • கைகளால் விதைத்தல் – எளிமையான சிக்கனமான முறையாகும்
  • உழுசால் விதைத்தல் – இரும்பு கலப்பை பொருத்திய டிராக்டரினால் உழவு செய்யப்படுகிறது.
  • ஊன்றுதல் – நீண்டு வரிப்பள்ளத்தில், குழயில் அல்லது துளையில் விதைத்தல்

3. இலைப்பரப்பில் தெளித்தல் என்றால் என்ன?

இலையில் தெளிப்பு எனப்படுவது திரவ நிலை உரங்களை இலைகளில் நேரடியாக செலுத்தி தாவரங்களுக்கு ஊட்டமளிக்கும் நுட்பம் ஆகும்

4. கிரிஷ் விஞ்ஞான கேந்திரா பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.

கிரிஷ் விஞ்ஞான கேந்திரா (KVK)

  • கிரிஷி விஞ்ஞான் கேந்திரா ஒரு வேளாண் அறிவியல் நிலையமாகும்.
  • இந்த மையம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) மற்றும் விவசாயிகளுக்கு இடையேயான இறுதியான இணைப்பாக செயல்படுகிறது

5. உயிரி-சுட்டிக்காட்டிகள் என்றால் என்ன? மனிதனுக்கு இவை எவ்வாறு உதவுகின்றன?

சூழ்நிலையின் தர நிலையை வெளிப்படுத்தும் ஒரு இனம் அல்லது இனங்களின் தொகுப்பு உயிரி-சுட்டிகள் அல்லது உயிரி சுட்டிகாட்டிகள் எனப்படும்.

இவை மனிதனுக்கு புவியில் ஏற்படும் மாற்றங்களை குறிப்பாக பெருகிவரும் மக்கள் தொகை செயல்பாடுகளால் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களை புரிந்து கொள்ளவும் பட்டியலிடவும் பயன்படுகிறது

6. களையெடுத்தல் என்பதன் பொருள் என்ன?

பயிர்களுடன் வளரும் விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படும். களை நீக்கப்படுதல் களையெடுத்தல் எனப்படும்.

7. பயிர்சுழற்சி என்றால் என்ன?

ஓரே இடத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரிசையில் பல வகைப்பயிர்களை வரிசையாக நடவு செய்தல் பயிற்ச்சுழற்சி எனப்படும்.

பயிர் உற்பத்தி இரு வகைப்படும்

  • ஒரே வகை பயிர் வளர்த்தல்
  • கலப்பு பயிர் வளர்த்தல்

8. பசுந்தழை உரம் என்றால் என்ன?

தாவரங்களின் வளரச்சியை மேம்படுத்துவதற்காக மண்ணில் சேர்க்கப்படும் ஊட்டப்பொருள்கள் பசுந்தழை உரம் எனப்படும்.

V. விரிவாக விடையளி.

1. வேளாண் செயல்முறைகளை விவரி.

மண்ணை தயார்படுத்துதல்

பயிர்ப்பெருக்கத்திற்கான செயல்முறைகளில் மிக முக்கியமானபகுதி மண்ணின் மேல் அடுக்கினை தளர்வடையச் செய்வதாகும்.

பின்வரும் முறைகளில் மண் தயார் செய்யப்படுகிறது.

விதை விதைத்தல்

விதைத்தல் என்பது விதைகளை மண்ணில் ஊன்றச் செய்யும் செயலாகும். விதைக்கப்படும் விதைகள் தரமிக்கவையாக கவனமுடன் தேர்வு செய்யப்பட வேண்டும்.

உரமிடுதல்

தாவரங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மண்ணில் சேர்க்கப்படும் ஊட்டப் பொருள்கள் உரங்கள் எனப்படும்.

நீர்ப் பாசனம்

தாவரங்களின் முறையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நீர் அவசியமானதாகும். தாவரங்கள் வேர்த்தொகுப்பின் உதவியால் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுகின்றன. சீரான இடைவெளியில் பயிர்களுக்கு நீர் அளித்தல் நீர்ப்பாசனம் எனப்படும். கிணறு, குழாய்க் கிணறு, குளம், ஏரி, ஆறு, அணை, கால்வாய் போன்றவை பல்வேறு நீர்ப்பாசன ஆதாரங்களாகும்.

களையெடுத்தல்

விவசாய நிலத்தில் முக்கியமான பயிர் வகைகளுடன் பல விரும்பத்தகாத தாவரங்களும் வளரலாம். இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படுகின்றன. களைகளை நீக்கும் செயல் களையெடுத்தல் எனப்படும்.

அறுவடை செய்தல்

விளைந்த பயிர்களை வெட்டிச் சேகரிக்கும் செயல் அறுவடை எனப்படும். பயிர்களை அறுவடை செய்திட பல்வேறு முறைகள் பயன்படுகின்றன.

சேமிப்பு

அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளின் முக்கிய அம்சம் சேமிப்பு ஆகும். ஏனெனில், பயிர்கள் பருவகாலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், ஆண்டு முழுவதும் மக்களுக்குத் தேவைப்படுகின்றன.

2. நீர்ப்பாசன முறைகளைப் பற்றி விளக்குக.

தாவரங்களின் முறையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நீர் அவசியமானதாகும். தாவரங்கள் வேர்த்தொகுப்பின் உதவியால் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுகின்றன. சீரான இடைவெளியில் பயிர்களுக்கு நீர் அளித்தல் நீர்ப்பாசனம் எனப்படும். நீர் பாய்ச்சும் கால அளவும், எண்ணிக்கையும் பயிருக்குப் பயிரும், மண்ணிற்கு மண்ணும் மற்றும் பருவநிலைக்கு பருவநிலையும் வேறுபடுகின்றன. நீர்ப்பாசனம் மூலம் நிலத்திற்கு உரங்களையும் இடமுடியும். கிணறு, குழாய்க் கிணறு, குளம், ஏரி, ஆறு, அணை, கால்வாய் போன்றவை பல்வேறு நீர்ப்பாசன ஆதாரங்களாகும். குறைவான செலவில், சரியான நேரத்தில் போதுமான அளவில் பயிர்களுக்கு சீராக நீரளிப்பதே மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் எனப்படும்.

இரண்டு முறைகளில் நீர்ப் பாசனம் செய்யப்படுகிறது.

அ. பாரம்பரிய முறைகள்
ஆ. நவீன முறைகள்

அ. பாரம்பரிய முறைகள்

இம்முறைகளில் கைகளால் நீர் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள், கிணற்றிலிருந்து அல்லது நீர்க் கால்வாயிலிருந்து தானாகவோ அல்லது எருதுகளின் உதவியுடனோ நீரை இழுத்து விவசாய நிலத்தில் பாய்ச்சுகின்றனர். பல்வேறு நீர் ஆதாரங்களிலிருந்து நீரை மேலே கொண்டுவர விசையியக்கக் கருவிகள் (Pump) பயன்படுகின்றன. டீசல், உயிர்வாயு, மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவை இக்கருவிகளை இயக்கத் தேவையான சில முக்கிய ஆற்றல் மூலங்களாகும். நீர் இறைத்தல் முறைகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. இந்த முறைகள் செலவு குறைந்தவை. ஆனால், இவற்றின் திறன் மிகக்குறைவு ஆகும். ஏனெனில், நீர் நிலத்தில் சமமாகப் பாய்வதில்லை. அதிகளவு நீர் இழப்பையும் இவை ஏற்படுத்துகின்றன.

ஆ. நவீன முறைகள்

பாரம்பரிய முறைகளில் உள்ள குறைகளுக்குத் தீர்வாக நவீன நீர்ப்பாசன முறைகள் உள்ளன. நிலத்தில் ஒரே அளவிலான ஈரப்பதம் காணப்பட இவை உதவுகின்றன.

நவீன முறைகள் இரண்டு அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை:

• தெளிப்பு நீர்ப் பாசன அமைப்பு
• சொட்டு நீர்ப் பாசன அமைப்பு

தெளிப்பு நீர்ப் பாசன அமைப்பு

தெளிப்பு நீர்ப்பாசனம் பயிரின் மீது நீரைத் தெளிப்பதோடு சரியான நீர்பரவலுக்கும் உதவுகிறது. இது நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு ஏற்ற முறையாகும். இதில், உந்துவிசையியக்கக் கருவி ஒன்று குழாய்களோடு இணைக்கப்படுகிறது. இது அழுத்தத்தை உருவாக்குவதால் குழாயின் நுண்துளைகளின் வழியாக நீரானது தெளிக்கப்படுகிறது.

சொட்டு நீர் பாசனம்

இம்முறையில் குழாய்களைப் பயன்படுத்தி நீரானது சொட்டு சொட்டாக நிலத்தில் விடப்படுகிறது. நீர் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனம் ஒரு பயனுள்ள முறையாகக் கருதப்படுகிறது.

3. களை என்றால் என்ன? களைக் கட்டுப்பாட்டின் பல்வேறு முறைகளை விளக்குக.

விவசாய நிலத்தில் முக்கியமான பயிர் வகைகளுடன் பல விரும்பத்தகாத தாவரங்களும் வளரலாம். இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படுகின்றன.

களைகளை நீக்கும் செயல் களையெடுத்தல் எனப்படும்.

களை நீக்கம் மிக முக்கியமான செயலாகும். ஏனெனில், களைத் தாவரங்கள் ஊட்டப் பொருள்கள், சூரியஒளி, நீர், வளரிடம் மற்றும் பிற ஆதாரங்களுக்காக பயிர்த் தாவரங்களுடன் போட்டியிடுகின்றன. இதனால், பயிர்களுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து குறைந்து, விளைச்சல் குறைகிறது. எதிர்பார்த்த விளைச்சலை அடைவதற்கு நிலத்திலிருந்து களை நீக்கப்படுதல் அவசியம் ஆகும். விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு களைகளை நீக்கி அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

அவற்றுள் சில கீழே விளக்கப்பட்டுள்ளன.

இயந்திர முறைகள்

இயந்திர முறையானது களைகளை நீக்கப் பயன்படும் ஒரு பொதுவான முறையாகும். களைக் கொத்தியின் உதவியுடன் கைகளால் களையை அகற்றுதல் ஒரு பழமையான களையெடுத்தல் முறை ஆகும். இது களைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த முறையாகும்.

உழுதல் முறைகள்

இது அனைத்து வகையான களைகளையும் அழிப்பதற்கான ஒரு செயல்முறையாகும். ஆழமாக உழுவதன் மூலம் களைகள் மண்ணில் புதைக்கப்படுகின்றன. அல்லது ஆழ உழுதல்மூலம் சூரிய வெப்பத்தில் உலர்த்தப்படுகின்றன.

பயிர்ச் சுழற்சிமுறை

இந்த முறையில் பயிர் சார்ந்த மற்றும் ஒட்டுண்ணி வகைக் களைகளைக் கட்டுப்படுத்த முறையான பயிர்ச்சுழற்சி பின்பற்றப்படுகிறது.

கோடை உழவு

குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்த பிறகு, நிலத்தை ஆழமாக உழுது, களைகளின் தரைகீழ்ப் பகுதிகளை கோடைக்காலத்தில் சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதன் மூலம், பல்வேறு ஓராண்டு மற்றும் பல ஆண்டுகள் வாழும் களைகளை அழிக்கமுடியும்.

உயிரியல் களைக் கட்டுப்பாடு

இந்த முறையில் பூச்சிகள் மற்றும் நோயூக்கிகள் போன்ற உயிர்க் காரணிகள் களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன. களைகளை அழித்தல் உயிரியல் கட்டுப்பாட்டின் நோக்கமாக இல்லாமல், களைத் தாவரங்களை முறைப்படுத்துதலும் குறைத்தலுமே இதன் நோக்கமாக உள்ளது.

வேதியியல் முறைகள்

வேதியியல் முறைகள் சிலவகைக் களைகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் திறன் மிக்கதாக உள்ளன. களைகளைக் கொல்வதற்கு அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பயன்படும் வேதிப் பொருள்கள் களைக்கொல்லிகள் எனப்படுகின்றன. இவ்வேதிப் பொருள்கள் நீருடன் கலக்கப்பட்டு பயிர்களின் மீது தெளிக்கப்படுகின்றன.

பயனுள்ள பக்கங்கள்