பாடம்.3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

பாடம்.3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
கலைச்சொற்கள்
| புதிய அமைப்பு | Apparatus | New system |
| உரிமை கோருபவர் | Claimants | A person making a claim |
| விவசாயி | Cultivator | A person who cultivates the land |
| அத்துமீறல் | Encroachment | Intrusion on |
| கடன் தருபவர் | Moneylender | A person who lends money to people, at a high rate of interest |
| முக்கியமாக | Predominantly | Mainly |
| குத்தகையாளர்/ குடியிருப்பவர் | Tenants | A person who occupies land rented from a land lord |
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
- மகல்வாரி முறை
- இரயத்துவாரி முறை
- ஜமீன்தாரி முறை
- இவற்றில் எதுவுமில்லை
விடை: இவற்றில் எதுவுமில்லை
2. எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
- ஹேஸ்டிங்ஸ் பிரபு
- காரன்வாலிஸ் பிரபு
- வெல்லெஸ்லி பிரபு
- மிண்டோ பிரபு
விடை: காரன்வாலிஸ் பிரபு
3. மகல்வாரி முறையில் மகல் என்றால் என்ன?
- வீடு
- நிலம்
- கிராமம்
- அரண்மனை
விடை: கிராமம்
4. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
- மகாராஷ்டிரா
- மதராஸ்
- வங்காளம்
- பஞ்சாப்
விடை: பஞ்சாப்
5. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
- ஹேஸ்டிங்ஸ் பிரபு
- காரன்வாலிஸ் பிரபு
- வெல்லெஸ்லி பிரபு
- வில்லியம் பெண்டிங் பிரபு
விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
6. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
- பம்பாய்
- மதராஸ்
- வங்காளம்
- இவற்றில் எதுவுமில்லை
விடை: வங்காளம்
7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
- மகாத்மா காந்தி
- கேசப் சந்திர ராய்
- திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
- சர்தார் வல்லபாய் பட்டேல்
விடை: திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
- சர்தார் வல்லபாய் பட்டேல்
- மகாத்மா காந்தி
- திகம்பர் பிஸ்வாஸ்
- கேசப் சந்திர ராய்
விடை: சர்தார் வல்லபாய் பட்டேல்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _______ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.
விடை: மகால்வாரி முறை
2. மகல்வாரி முறை _______ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம்.
விடை: ஹோலட் மெகன்சி
3. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி _______ல் நடைபெற்றது.
விடை: வங்காளத்தில்
4. மாப்ளா கலகம் _______ல் நடைபெற்றது.
விடை: கேரளாவில்
5. ’சம்பரான் விவசாயச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு _______
விடை: 1918
பொருத்துக
| 1. நிரந்தர நிலவரி திட்டம் | மதராஸ் |
| 2. மகல்வாரி முறை | இண்டிகோ விவசாயிகளின் துயரம் |
| 3. இரயத்துவாரி முறை | வடமேற்கு மாகாணம் |
| 4. நீல் தர்பன் | வங்காளம் |
| 5. சந்தால் கலகம் | முதல் விவசாயிகள் கிளர்ச்சி |
| விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ, 5 – உ | |
சரியா, தவறா?
1. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
விடை: சரி
2. இரயத்துவாரி முறை, தாமன் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை: சரி
3. குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது
விடை: தவறு
4. பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் 1918ல் நிறைவேற்றப்பட்டது.
விடை: தவறு
கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்யவும்
1. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.
- இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.
- விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
- இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
விடை: விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
2. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
- சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
- நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
- தக்காண கலகம் 1873 ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
- மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.
விடை: நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
பின்வரும் வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வரிகளில் விடையளி
1. நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.
- ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
- விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக ஜமீன்தார்கள் செயல்பட்டனர்.
2. இரயத்துவாரி முறையின் சிறப்புக் கூறுகள் யாவை?
- வருவாய் ஒப்பந்தம் நேரடியாக விவசாயிகளுடன் செய்துகொள்ளப்பட்டது.
- நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
- அரசு, விளைச்சலில் 45 லிருந்து 50 சதவீதம் வரை வரியாக நிர்ணயம் செய்தது.
3. மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.
- கிராமத் தலைவர், சலுகைகளை தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் தவறாகப் பயன்படுத்தினார்.
- இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.
- இம்முறையானது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக இருந்தது. மேலும் இது கிராமத்தின் உயர் வகுப்பினருக்கு இலாபகரமானதாக அமைந்தது.
4. 1859-60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?
- விவசாயிகளுக்கு மிகவும் தீமை தரும் வகையில் இண்டிகோவை வளர்ப்பதற்கு குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தினர்.
- மேலும் குத்தகை விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் அவுரியை தங்களுக்கு குறைந்த விலைக்கு விற்கும்படியும், வற்புறுத்தப்பட்டனர்.
5. சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?
- சம்பரான் விவசாயிகளின் பிரச்சினையை அறிந்து கொண்ட மகாத்மா காந்தி அவர்களுக்கு உதவ முன்வந்தார்.
- அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, மகாத்மா காந்தியை அக்குழுவின் ஓர் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
- விவசாயிகளின் குறைகள் விசாரிக்கப்பட்டு இறுதியில், மே, 1918ல் சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
6. பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.
- 1928ல் 30 சதவீதம் அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது அதனால், பர்தோலி (குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
- மேலும் விவசாயிகள், உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 12, 1928ல் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர்.
- இதில் பல பெண்களும் கலந்து கொண்டனர்.
விரிவான விடையளி
1. நிலையான நிலவரி திட்டத்தின் நிறை, குறைகளை விவாதிக்க.
நிறைகள்:
- தரிசு நிலங்கள், காடுகள் விவசாய நிலமாக்கப்பட்டது.
- ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாயினர்.
- ஜமீன்தார்கள் நீதி வழங்குவதிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
- ஆங்கில அரசுக்கு நம்பிக்கைக்குரியவர்களாயினர்.
- ஆங்கில அரசுக்கு நிலையான வருவாய் கிடைக்கச் செய்தது.
குறைகள்:
- அரசுக்கும், விவசாயிகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை .
- விவசாயிகள் உரிகைள் மறுக்கப்பட்டு ஜமீன்தார் பொறுப்பில் விடப்பட்டனர்.
- விவசாயிகள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
- ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பர பிரியர்களாகவும் மாறினர்.
- வங்காள கிராமங்களில் ஜமீன்தார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது
2. ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?
- அனைத்து வரிகளும் அதிகபட்ச வருமானம் பெறுவதாக இருந்தது. இது நில விற்பனை, விவசாய அழிவிற்கு வழிவகுத்தது.
- விவசாயிகள் அதிக வரிச்சுமை, பஞ்சம், வறுமை கடன்சுமையால் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்கள் நிலம், வாங்குவோர், வட்டிக்கு பணம் தருபவர்களை தேடிச் சென்றனர். நிலத்தை வாங்கியவர்கள் செல்வந்தாராயினர்.
- ஜமீன்தார்கள், வட்டிக்காரர்கள், வழக்கறிஞர்களால் விவசாயிகள் சுரண்டப்பட்டனர்.
- கிராமங்களுக்கான நிலைப்புத்தன்மை அசைக்கப்பட்டன.
- ஆங்கில பொருட்களால் இந்திய குடிசைத்தொழில்கள் மறைந்தன.
- புதிய சட்ட அமைப்பு, பழமையான பழக்கங்களை மாற்றியது.
- விவசாயிகளின் உழைப்பின் பலன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் நன்மையளிப்பதாக இருந்தது
3. மாப்ளா கிளர்ச்சி பற்றி ஒரு பத்தியில் எழுதுக.
- மாப்ளா விவசாயிகள் (கேரளா) இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிஸ்) ஆங்கில அரசால் அடக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.
- ஏப்ரல் 1920 ல் நடைபெற்ற மலபார் மாநாடு புரட்சிக்கு உத்வேகம் அளித்தது.
- இம்மாநாடு நிலக்கிழார் – குத்தகைகாரர் இடையிலுள்ள உறவை ஒழுங்குப்படுத்த சட்டம் இயற்ற கோரியது.
- 1921ல் கிளர்ச்சியின் ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்கள் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்கள், செய்தி தொடர்பு சாதனங்கள் நிலக்கிழார், வட்டிக்கடைக்காரர்களை தாக்கினர்.
- பின்னர் அரசு தலையீட்டின் மூலம் 2337 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 1650 பேர் காயமடைந்தனர்.
- 45,000 க்கும் மேற்பட்டோர் சிறை பிடிக்கப்பட்டு 1921 டிசம்பரில் கிளர்ச்சி அடக்கப்பட்டது
சில பயனுள்ள பக்கங்கள்