பாடம்.12 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

பாடம்.12 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
கலைச்சொற்கள்
| இடம் பெயர்பவர் | ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம் பெயர்பவர் | Migrant |
| குடியேற்றம் | தன்னுடைய நாட்டிலிருந்து தனிநபர் அல்லது குழுவாக வேறொரு நாட்டினுள் குடியேறுதல் | Immigration |
| குடியேறுபவர் | தன்னுடைய நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்குக் குடியேறுபவர் | Immigrant |
| குடிபெயர்தல் | தனிநபர் அல்லது குழுவாக வேறொரு புதிய நாட்டில் குடிபுகுதல் | Emigration |
| குடி பெயர்பவர் | சர்வதேச எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு புதிய நாட்டில் குடி புகுபவர்கள். | Emigrant |
| உந்து காரணிகள் | மக்கள் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல காரணமாக அமையும் காரணிகள் | Push factors |
| இழு காரணிகள் | பிறப்பகுதிகளில் இருந்து ஓர் இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் | Pull factors |
| கால்நடையுடன் இடம்பெயர்வு | பருவகால இடம்பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது. மக்கள் அவர்களின் கால்நடைகளுடன் காலநிலைக்கு ஏற்ப அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சமவெளி மற்றும் மலைகளுக்கு இடையே இடம் பெயர்வது. | Transhumance |
சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. மக்கள் _______ லிருந்து _______ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்
- கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
- நகர்புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
- மலையிலிருந்து சமவெளிக்கு
- சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
விடை: கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
2. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றாெரு நாட்டிற்கு இடம் பெயர்தல் எனப்படுகி்றது.
- குடிபுகுபவர்
- அகதி
- குடியேறுபவர்
- புகலிடம் தேடுபவர்
விடை: குடியேறுபவர்
3. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது
- கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
- கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
- நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
- நகரத்தில் இருந்து நகரத்திற்கு
விடை: கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
4. பாேரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ________ ஐ சார்நதது.
- மக்களியல்
- சமூக மற்றும் கலாச்சாரம்
- அரசியல்
- பாெருளாதாரம்
விடை: அரசியல்
5. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம்
- உணவு தானிய உற்பத்தி
- கால்நடை வளர்ப்பு
- மீன் பிடித்தல்
- வேட்டையாடுதல்
விடை: உணவு தானிய உற்பத்தி
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. நகரமயமாதல் _______ எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
விடை: மூன்று
2. _______ என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.
விடை: வேலைவாய்ப்பின்மை
3. இந்தியாவின் _______ மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தாெகையாக் காெண்டது.
விடை: புது டெல்லி
4. ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ______ இடம்பெயர்வு எனப்படும்.
விடை: தன்னார்வ
5. நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி _______ வளர்ச்சியால் அதிகரிக்கிறது.
விடை: மக்கள் தொகை
பொருத்துக
| 1. குடியேற்றம் | குடிபுகுபவர் |
| 2. குடியிறக்கம் | வெளியேறுதல் |
| 3. இழுக்காரணி | வேலை வாய்ப்பின்மை |
| 4. உந்து காரணி | சமூக மற்றும் பண்பாடடு இடம் பெயர்வு |
| 5. திருமணம் | வேலை வாய்ப்பு |
| விடை : 1 – ஆ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஈ | |
சரியா? தவறா? எனக் குறிப்பிடு
1. குடிசைப்பகுதிகள் பாெதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
விடை: சரி
2. நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.
விடை: சரி
3. நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.
விடை: தவறு
4. பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.
விடை: தவறு
5. மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது
விடை: சரி
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.
1. கூற்று : நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம் : கிராமத்தில் இருநது நகரத்திற்கு இடம்பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல
- கூற்று சரி ஆனால் காரணம் தவறு
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
- கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை: கூற்று சரி ஆனால் காரணம் தவறு
சுருக்கமாக விடையளி
1. இடம்பெயர்தல் வரையறு?
ஒரு நபரே அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும்
2. கிராமப்புறத்திலிருநது நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணஙகள் யாவை?
வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிக்காக கிராமப்புறத்திலிருநது நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணஙகள் ஆகும்
3. சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணஙகளைக் கூறுக.
- எரிமலை வெடிப்பு
- நில அதிர்வு
- வெள்ளம்
- வறட்சி
4. இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
- இயற்கை வளங்கள் மற்றும் கனிமங்கள் மிகுந்த பகுதிகள்
- வேலை வாய்பிற்கேற்ற சூழல்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பு
5. நகரமயமாக்கம் என்றால் என்ன?
நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சரம் அதிகரிப்பதே நகரமயமாதல் எனப்படுகிறது.
6. உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக
- டோக்கியோ (ஜப்பான்)
- புதுதில்லி (இந்தியா)
- சாங்காய் (சீனா)
- மெக்சிகோ நகரம் (மெக்சிகோ)
- சா பாலோ (பிரேசில்)
விரிவான விடையளி
1. இடம்பெயர்தலின் பல்வேறு வகைகள் யாவை? அவைகளை விளக்குக
நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள்
- உள்நாட்டு இடம்பெயர்வு
- சர்வதேச இடம் பெயர்வு
இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்வுகள்
- தன்னார்வ இடம்பெயர்வு
- தன்னார்வமில்லா (அ) கட்டாய இடம் பெயர்வு
இடம் பெயர்ந்த இடத்தில் தங்கம் கால அளவின்அடிப்படையில் இடம் பெயர்வுகள்
- குறுகிய கால இடம்பெயர்வு
- நீண்ட கால இடம் பெயர்வு
- பருவ கால இடம் பெயர்வு
2. இடம்பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக
சூழியல் அல்லது இயற்கை காரணங்கள்
- எரிமலை வெடிப்பு
- நில அதிர்வு
- வெள்ளம்
- வறட்சி
பொருளாதார காரணங்கள்
- வளமான வேளாண் நிலம்
- வேலைவாய்ப்பு
- தொழில் நுட்ப வளர்ச்சி
சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள்
- பெண்களின் திருமணத்திற்க பின் இடம்பெயர்வு
- புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம் பெயர்தல்
மக்கள் தொகை சார்ந்த காரணங்கள்
- வயது
- பாலினம்
- அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை
அரசியல் காரணங்கள்
- காலனி ஆதிக்கம்
- போர்கள்
- அரசாங்கக் கொள்கைகள்
3. நகரமயமாக்கலினால் ஏற்படும் சாவல்களை ஆராய்க
குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதிகள்
விரிவான நகரமயமாக்கலால் தரமற்ற குடியிருப்புகள் மற்றும் குடிசைப்பகுதிகள் அதிக அளவில் உருவாகின்றன
மக்கள் நெரிசல்
சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழல் பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்க காரணமாகிறது.
தண்ணர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம்
முறையாக நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு மோசமான நிலையில் உள்ளது
போக்குவரத்து மற்றும் நெரிசல்
இரு சக்கர வாகனங்கள் மற்றம் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் ஏற்படுகிறது. வாகப்பெருக்கம் காற்ற மாசு அடைய காரணமாகின்றன
மாசுடைதல்
நகரங்கள், தொழிலகங்களிலிருந்த வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர் நிலைகளையும் புகை மற்றும் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தையும் மாசுபடுத்துகின்றன.
சில பயனுள்ள பக்கங்கள்