Tamil Nadu 8th Standard Tamil Book Term 1 தமிழ்மொழி வாழ்த்து Solution | Lesson 1.1

பாடம் 1.1. தமிழ்மொழி வாழ்த்து

தமிழ்மொழி வாழ்த்து – பாடல்

*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!*

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!

– பாரதியார்

நூல் வெளி

  • கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.
  • சி.சுப்பிரமணிய பாரதியார் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர்
  • கவிதைகள் மட்டுமின்றி சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசன கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர்.
  • சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
  • இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  1. நிரந்தரம் – காலம் முழுமையும்
  2. வண்மொழி – வளமிக்கமொழி
  3. வைப்பு – நிலப்பகுதி
  4. இசை – புகழ்
  5. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  6. தொல்லை – பழமை, துன்பம்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____

  1. வைப்பு
  2. கடல்
  3. பரவை
  4. ஆழி

விடை : வைப்பு

2. என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. என் + றென்றும்
  2. என்று + என்றும்
  3. என்றும் + என்றும்
  4. என் + என்றும்

விடை : என்று + என்றும்

3. வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. வான + மளந்தது
  2. வான் + அளந்தது
  3. வானம் + அளந்தது
  4. வான் + மளந்தது

விடை : வானம் + அளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. அறிந்ததுஅனைத்தும்
  2. அறிந்தனைத்தும்
  3. அறிந்ததனைத்தும்
  4. அறிந்துனைத்தும்

விடை : அறிந்ததனைத்தும்

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. வானம்அறிந்து
  2. வான்அறிந்த
  3. வானமறிந்த
  4. வான்மறிந்

விடை : வானமறிந்த

III. தமிழ்மொழி வாழ்த்து இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக

  1. வாழ்க – வாழிய
  2. ங்கள் – ன்றென்றும்
  3. ண்மொழி – ளர்மொழி
  4. கன்று – றிந்த

IV. குறுவினா

1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்டு வாழ்கிறது

2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது

V. சிறுவினா

தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!

எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் தமிழே வாழ்க!

ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் புகழ்கொண்ட தமிழே வாழ்க!

உலகம் உள்ள வரையிலும் தமிழே வாழ்க!

எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.

தமிழ் உயர்வுற்று  உலகம் ழுழுவதும் சிறப்படைக!

பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.

என்றென்றும் தமிழே! வாழ்க

வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க

கற்றவை கற்றபின்

படித்துச் சுவைக்க.

செந்தமிழ் அந்தாதி

செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்.

உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம்
பயிரும்நீ; இனபம்நீ; அன்புத் தருவும்நீ;
வீரம்நீ; காதல்நீ; ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ; யாவும்நீ யே!

– து. அரங்கன்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _____________ கருத்தை அறிவிக்கும் கருவியாகும்

விடை : மொழி

2. தமிழர்கள் தமிழை ________ ஆகக் கருதி போற்றி வந்துள்ளனர்

விடை : உயிர்

3. _________ அறிந்த தனைத்து அறிந்து வளர் மொழி வாழியவே

விடை : வானம்

4. இசை என்பதற்கு பொருள் _________

விடை : புகழ்

5. தமிழ்தேனீ என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் __________

விடை : பாரதிதாசன்

6. இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர் _____________

விடை : பாரதியார்

7. கவிதைகள் மட்டுமின்றி சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர் _____________

விடை : பாரதியார்

8. நிரந்தரம்  என்பதற்கு பொருள் _____________

விடை : காலம் முழுமையும்

9. தொல்லை என்பதற்கு பொருள் _____________

விடை : பழமை

II. குறு வினா

1. பாரதியாரின் பன்முக ஆற்றல் யாவை?

  • கவிஞர்
  • எழுத்தாளர்
  • இதழாளர்
  • சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர்
  • விடுதலைப் போராட்ட வீரர்

2. பாரதியார் நடத்திய இதழ்கள் எவை?

  • இந்தியா
  • விஜயா

3. பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?

  • சிந்துக்குத் தந்தை
  • செந்தமிழ்த் தேனீ
  • புதிய அறம் பாட வந்த அறிஞன்
  • மறம் பாட வந்த மறவன்

4. தமிழ்நாடு எவ்வாறு ஒளிர்கிறது?

பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி ஒளிர்கிறது

5. எந்த இருள் நீங்கட்டும் என பாரதியார் கூறுகிறார்?

எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.

6. தமிழ்மொழி எங்கு சிறப்படைய வேண்டும் என பாரதியார் கூறுகிறார்?

தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவது சிறப்படைய வேண்டும்.

6. தமிழ்மொழி எங்கு சிறப்படைய வேண்டும் என பாரதியார் கூறுகிறார்?

II. சிறு வினா

பாரதியார் குறிப்பு வரைக

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.

இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர்

சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசன கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர்.

சில பயனுள்ள பக்கங்கள்