பாடம் 2.1 இயற்கையைப் போற்றுவோம்
சொல்லும் பொருளும்
- திங்கள் – நிலவு
- கொங்கு – மகரந்தம்
- அலர் – மலர்தல்
- தார் – மாலை
- சென்னி – சோழ மன்னன்
- அங்கண் – அழகிய இடம்
- அளி – கருணை
- ஞாயிறு – கதிரவன்
- திகிரி – ஆணைச்சக்கரம்
- பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்
- மேரு – இமயமலை
- நாமநீர் – அச்சம் தரும் கடல்
நூல் வெளி
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் பொ.ஆ (கி.பி.) இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக அமைந்துள்ள பாடல்கள், சிலப்பதிகாரத்தின் வாழ்த்துப் பகுதியாக இடம் பெற்றுள்ளன. அப்பகுதி நமக்கு பாடப்பகுதியாக தரப்பட்டுள்ளது. |
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கழுத்தில் சூடுவது
- தார்
- கணையாழி
- தண்டை
- மேகலை
விடை : தார்
2. கதிரவனின் மற்றொரு பெயர்
- புதன்
- ஞாயிறு
- சந்திரன்
- செவ்வாய்
விடை : ஞாயிறு
3. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- வெண் + குடை
- வெண்மை + குடை
- வெம் +குடை
- வெம்மை + குடை
விடை : வெண்மை + குடை
4. அங்கண் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- அம் + கண்
- அ + கண்
- அங் + கண்
- அங்கு + கண்
விடை : அம் + கண்
5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- கொங்குஅலர்
- கொங்அலர்
- கொங்கலர்
- கொங்குலர்
விடை : கொங்கலர்
6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- அவன்அளிபோல்
- அவனளிபோல்
- அவன்வளிபோல்
- அவனாளிபோல்
விடை : அவனளிபோல்
பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
- போற்றுதும் – போன்று
- மேரு – மேல்
- திகரி – திரிதலான்
- அவன் – அளிபோல்
பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக
- திங்களை – கொங்கு
- போற்றுத் – பொற்கோட்டு
- அலர்தார்ச் – உலகு
- மாமழை – நாம
குறுவினா
1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
சிலப்பதிகாரக் காப்பியம் திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்தி தொடங்குகிறது
2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?
மனிதன் இயங்குவது, வாழ்வதும் இயற்கையினால்தான் அவ்வியற்கை இல்லாமல் மனிதனால் இயங்க முடியாது, அதுவே உயிரினங்களுக்கு மணி முடி அதனால் தான் இயற்கையைப் போற்றுகிறோம்
சிந்தனை வினா
இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
|
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. சேர மன்னனை குறிக்கும் சொல்
- ஞாயிறு
- தார்
- மாலை
- சென்னி
விடை: சென்னி
2. ஒலி வேறுபாடு அறிக: அழி – அளி
- கொடு – தானம்
- வைக்கோல் – மாற்று
- அழிவு – சீதை
- அழிவு – கருணை
விடை: அழிவு – கருணை
3. நிலா, சந்திரன், மதி, அம்புலி என்ற பொருள் தரும் ஒருசொல்
- ஞாயிறு
- திங்கள்
- செவ்வாய்
- வெள்ளி
விடை: திங்கள்
4. தமிழின் முதல் காப்பியம் ________
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
- வளையாபதி
- குண்டலகேசி
விடை : சிலப்பதிகாரம்
5. வானிலிருந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதுக் கிடைப்பது
- வானி + லிருந்து
- வானில் + லிருந்து
- வானி + இருந்து
- வானில் + இருந்து
விடை : வானில் + இருந்து
6. மேனின்று என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- மேல் + நின்று
- வானில் + லிருந்து
- வானி + இருந்து
- மேல் + நின்று
விடை : மேல் + நின்று
7. பொன் + கோட்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
- பொன்கேட்டு
- பொற்கேட்டு
- பொன்கோட்டு
- பொற்கோட்டு
விடை : பொற்கோட்டு
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் ________
விடை : இளங்கோவடிகள்
2. இளங்கோவடிகள் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று ________ கூறுகிறது.
விடை : சிலப்பதிகார பதிகம்
3. சென்னி என்பது ________க் குறிக்கும் பெயர்.
விடை : சோழனை
4. திகிரி என்பது குறிக்கும் பொருள் ________
விடை : ஆணைச்சக்கரம்
5. இளங்கோவடிகள் ________ நூற்றாண்டைச் சேர்ந்தவர்
விடை : கி.பி. 2
பாெருத்துக
1. குடை | ஞாயிறு |
2. சக்கரம் | மழை |
3. அருள் | திங்கள் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ |
குறுவினா
சிலப்பதிகாரம் எவ்வாறு போற்றப்படுகிறது?
- ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியம் ஆகும்.
- இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது.
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சில பயனுள்ள பக்கங்கள்