பாடம் 1.3 ஒருவன் இருக்கிறான்
நூல் வெளி
- கு.அழகிரிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடைசெவல் என்னும் ஊரில் பிறந்தவர்.
- இவர் பிரசண்ட விகடன், சக்தி, தமிழ் நேசன் முதலான இதழ்களில் பணியாற்றிவயர்.
- கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
- புது வீடு புது உலகம், மூன்று பிள்ளைகள், கவிச்சக்கரவர்த்தி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
- ஒருவன் இருக்கிறான் என்ற கதையானது கு.அழகிரிசாமி சிறுகதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
பாடநூல் வினாக்கள்
குப்புசாமியை நினைத்துக் கண்ணீர் விட்ட நிகழ்வை எழுதுக
முன்னுரை:
யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில், குஅழகிரிசாமி தனது ” ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.
குப்புசாமியின் குடும்ப நிலை:
காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது. சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள்.
நோயுற்ற குப்புசாமி:
சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.
ஆறுமுகம்:
வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.
முடிவுரை:
” பண்புடையார்ப் பட்டுண்டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்”
பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஒருவன் இருக்கிறான் கதையின் ஆசிரியர்
- அண்ணாதுரை
- அழகர்சாமி
- அழகிரிசாமி
- சுஜாதா
விடை: அழகிரிசாமி
2. கு.அழகிரிசாமி பிறந்த ஊர்
- துலுக்கர்குளம்
- இடையன்குளம்
- இடைசெவல்
- துடியன்குளம்
விடை: இடைசெவல்
3. கரிசல் வரிசையில் மூத்தவர்
- ராஜநாரயணன்
- அழகிரிசாமி
- கந்தர்வன்
- ஜெயகாந்தன்
விடை: அழகிரிசாமி
4. அழகிரிசாமி பணிபுரிந்த இதழ்களில் பொருந்தாதது
- பிரசண்ட விகடன்
- சக்தி
- தமிழ் நேசன்
- அழகி
விடை: அழகி
குறுவினா
கு.அழகிரிசாமி எழுதிய நூல்களை எழுதுக
- புது வீடு புது உலகம்
- மூன்று பிள்ளைகள்
- கவிச்சக்கரவர்த்தி