9th Std Science Solution in Tamil | Lesson.3 பாய்மங்கள்

பாடம் 3 பாய்மங்கள்

பாய்மங்கள் வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு

  1. குறையும்
  2. அதிகரிக்கும்
  3. அதே அளவில் இருக்கும்
  4. குறையும் அல்லது அதிகரிக்கும்

விடை: அதிகரிக்கும்

2. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த _______ காரணமாகும்.

  1. அடர்த்தி
  2. அழுத்தம்
  3. திசைவேகம்
  4. நிறை

விடை: அடர்த்தி

3. அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம், அதனுடைய

  1. அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது.
  2. அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
  3. குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
  4. அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது.

விடை:  அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.

4. நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதனை கீழுள்ள வரைபடம் விளக்குகிறது. இதற்கான காரணம் என்ன?

  1. அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
  2. அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
  3. ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது
  4. மேலே கூறிய யாவும்

விடை:  ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. பொருளானது திரவத்தில் மூழ்கி இருக்கும்போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ________ ஆகத் தோன்றும்.

விடை: குறைவானதாக

2. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி _________ ஆகும்.

விடை: காற்றழுத்தமானி

3. திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதிப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.

விடை: அடத்தியை

4. பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் _____________ மூலம் வேலை செய்கிறது.

விடை: வளிமண்டல அழுத்தத்தின்

5. பாய்மங்களில் உள்ள ஒரு பொருளின் மீது மிதப்பு விசை செயல்படுகிறது. ஏனெனில் அதன் __________ பகுதியில் உள்ள அழுத்தம் அதன் மேல் பகுதியில் உள்ள அழுத்தத்தைவிட அதிகமாகும்.

விடை: கீழ்

III. சரியா? தவறா?

1. இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப்பு விசையைத் தீர்மானிக்கிறது.

விடை: சரி

2. ஒரு பொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.

விடை: சரி

3. மிக உயரமாள கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் அதிக அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.

விடை: சரி

4. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.

விடை: சரி

5. நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.

விடை: சரி

IV. பொருத்துக

1. அடர்த்திhρg
2. 1 கிராம் எடைபால்
3. பாஸ்கல் விதிநிறை / பருமன்
4. பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம்அழுத்தம்
5. பால்மானி980 டைன்
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஈ, 4 – அ, 5 – ஆ

V. சுருக்கமாக விடையளி. 

1. திரவம் ஏற்படுத்தும் அழுத்தம் எந்தெந்த காரணிகளைப் பொறுத்தது?

திரவங்களால் ஒரு புள்ளியில் செயல் ­படுத்தப்படும் அழுத்தமானது கீழ்கண்டவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது.

  • ஆழம் (h)
  • திரவத்தின் அடர்த்தி (ρ)
  • புவியீர்ப்பு முடுக்கம் (g)

2. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?

ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பதற்கு காரணம் ஹீலியம் வாயுவின் நிறை காற்றின் நிறையை விட குறைவு.

3. கடல் நீரில் நீந்துவது ஆற்று நீரில் நீந்துவதைவிட எளிதாக இருப்பது ஏன்?

கடல் நீரின் அடர்த்தி அதிகம் எனவே அதன் மிதப்பு விசையும் அதிகம்

4. வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன?

பூமியானது குறிப்பிட்ட உயரம் வரை (ஏறத்தாழ 300 கிமீ) காற்றால் சூழப்பட்டுள்ளது. இதனை புவியின் வளிமண்டலம் என்றழைக்கிறோம்.

5. பாஸ்கல் விதியைக் கூறு

அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசையானது, திரவங்கங்களின் அனைத்துத் திசைகளிலும் சீராக கடத்தப்படும் என்பதே பாஸ்கல் விதி ஆகும்.

VI. விரிவாக விடையளி.

1. சிறிய பரப்பின் மீது செயல்படும் விசை அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதை ஒரு செயல்பாட்டின் மூலம் விளக்குக.

  • மணற்பாங்கான பரப்பின் மீது நிற்கவும். உங்கள் கால்கள் ஆழமாகச் செல்லும்.
  • அதே பரப்பின் மீது படுத்துப் பாருங்கள். என்ன நடக்கிறது? படுக்கும் போது, முன்புபோல் உடல் ஆழகமாக மணலுக்குள் செல்லாது.
  • இந்த இரு நிகழ்வுகளிலும், மணல் மீது செயல்படும் விசையை ஏற்படுத்தும் உங்கள் உடலின் எடையானது மாறாமல் உள்ளது.
  • பரப்பிற்குச் செங்குத்தாகச் செயல்படும் இந்த விசையானது உந்துவிசை எனப்படுகிறது.
  • மணலில் நிற்கும்போது செயல்படும் விசையானது கால்களின் பரப்பிற்கு சமான பரப்பளவில் செயல்படுகிறது.
  • ஆனால் படுத்திருக்கும் நிலையில் அதே விசையானது உடலின் பரப்பளவிற்கு சமமான பரப்பில் செயல்படுகிறது.
  • உடலின் பரப்பளவு கால்களின் பரப்பளவை விட அதிகமாகும்.
  • உந்து விசையின் விளைவாக தோன்றும் அழுத்தமானது. அது செயல்படும் பரப்பளவை சார்ந்ததாகும்.
  • எனவே மணலில் நிற்கும் போது ஏற்படும் உந்து விசையின் விளைவு படுக்கும் போத உந்து விசையின் விளைவை விட அதிகம்.

2. காற்றழுத்தமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை விவரிக்கவும்.

வளிமண்டல அழுத்தத்தை அளக்க காற்றழுத்தமானி என்னும் கருவி பயன்படுகிறது. இத்தாலிய இயற்பியலாளர், டாரிசெல்லி என்பவர் முதன்முதலாக பாதரச காற்றழுத்தமானியை உருவாக்கினார்.

9th Science Guide Fluids Answers in Tamil mercury barometer

அமைப்பு

  • ஒரு முனை திறந்தும் ஒரு முனை மூடியும் உள்ள நீண்ட கண்ணாடிக் குழாயில் பாதரசம் நிரப்பப்பட்டு தலைகீழாக ஒரு கொள்கலனில் வைக்கப்பட்ட ஒரு அமைப்பை இது கொண்டுள்ளது.
  • தலைகீழாகக் கவிழ்க்கும் போது, திறந்திருக்கும் முனையை கட்டை விரலால் மூடி, பாதரசம் உள்ள கொள்கலனில் கவிழ்க்க வேண்டும்.

செயல்படும் விதம்

  • காற்றழுத்தமானி அதிலுள்ள பாதரசத்தை வெளியில் உள்ள காற்றின் அழுத்தத்துடன் சமன்செய்து இயங்குகிறது.
  • காற்றின் அழுத்தம் அதிகரிக்கும் போது, கொள்கலனில் உள்ள பாதசரம் கண்ணாடிக் குழாயினுள் தள்ளப்படுகிறது.
  • காற்றின் அழுத்தம் குறையும் போது, குழாயினுள் உள்ள பாதரசம் வெளியேற்றப்படுகிறது. குழாயின் மூடிய முனைக்கும், உள்ளே உள்ள பாதரசத்திற்கும் இடையே காற்று இல்லாமல் வெற்றிடமாக உள்ளது.
  • வெற்றிடம் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்த இயலாது. ஆகையால் குழாயில் உள்ள பாதரசம் வளிமண்டலத்தின் அழுத்தத்தைத் துல்லியமாக வழங்குகிறது.
  • இக்கருவியை ஆய்வகத்திலோ அல்லது வானிலை மையத்திலோபயன்படுத்தலாம்.

3. பொருளின் அடர்த்தி எவ்வாறு அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது?

  • ஒரு பொருளானது கொடுக்கப்பட்ட திரவத்தில் மூழ்குவதோ அல்லது மிதப்பதோ, குறிப்பிட்ட அந்த திரவத்தின் அடர்த்தியோடு அப்பொருளின் அடர்த்தியை ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.
  • திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின், அப்பொருளானது அத்திரவத்தில் மிதக்கும்.
  • எடுத்துக்காட்டாக, நீரைவிட அடர்த்தி குறைவான மரக்கட்டை நீரில் மிதக்கும்.
  • நீரை விட அதிக அடர்த்தி கொண்ட பொருள்கள், உதாரணமாக, கல்லானது நீரில் மூழ்கும்.

4. திரவமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை படத்துடன் விவரி.

9th Science Guide Fluids Answers in Tamil Hydrometer

அமைப்பு

  • திரவமானியானது அடிப்பகுதியில் கோள வடிவத்தினாலான குடுவையையும் மேற்பகுதியில் மெல்லிய குழாயையும் கொண்ட நீண்ட உருளை வடிவ தண்டைக் கொண்டுள்ளது.
  • குழாயின் அடிப்பகுதியானது பாதரசம் அல்லது காரீயக் குண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இது திரவமானியானது, மிதப்பதற்கும், திரவங்களில் செங்குத்தாக நிற்பதற்கும் உதவுகிறது.
  • மேலே உள்ள மெல்லிய குழாயில் அளவீடுகள் உள்ளதால், திரவத்தின் ஒப்படர்த்தியை நேரடியாக அளக்க முடிகிறது.

செயல்படும் விதம்

  • சோதிக்க வேண்டிய திரவத்தினை கண்ணாடிக் குடுவையில் நிரப்ப வேண்டும்.
  • திரவமானியை அத்திரவத்தில் மெதுவாக செலுத்தி, மிதக்கவிட வேண்டும்.
  • குழாயின் அளவீடுகள் திரவத்தின் மேற்பகுதியைத் தொடும் அளவு, திரவத்தின் ஒப்படர்த்தியாகும்.

5. மிதத்தல் விதிகளைக் கூறு.

  1. பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும் பொருளொன்றின் எடையானது, அப்பொருளினால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமமாகும்.
  2. மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும் மிதப்பு விசையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும்.

VI. கூற்று மற்றும் காரணம் வினாக்கள்.

கீழ்க்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

  1. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
  2. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
  3. கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
  4. கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை

1. கூற்று: ஒரு பொருள் மதிப்பதற்கு, தனது எடைக்குச் சமமான எடையுள்ள நீரை வெளியேற்ற வேண்டும்.
   காரணம்: அப்பொருள் எந்தவொரு கீழ்நோக்கிய விசையையும் உணர்வதில்லை.

விடை: கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

2. கூற்று : நீரியல் தூக்கியானது பாஸ்கல் விதியின் தத்துவத்தில் செயல்படுகிறது.

காரணம் : அழுத்தம் என்பது ஓரலகு பரப்பில் செயல்படும் உந்து விசையாகும்.

விடை: கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.

3. கூற்று: பொருளானது அதன் எடைக்குச் சமமான எடை கொண்ட திரவத்தை இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் மிதக்கிறது.
  காரணம்: இந்த நிகழ்வில் பொருளானது எந்தவொரு கீழ்நோக்கிய நிகர விசையையும் பெற்றிருக்கவில்லை.

விடை: கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

4. கூற்று : ஒரு கொள்கலனில் நிலையாக உள்ள திரவத்தின் பரப்பின் மீது புவிஈர்ப்பினால் செயல்படும் விசை எப்பொழுதும் கிடைத்தளத்தில் செயல்படும்.
   காரணம்: நிலையாக உள்ள பாய்மத்தின் மீது செயல்படும் விசை பரப்பிற்கு குத்தாக இருக்கும்.

விடை: கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.

5. கூற்று : உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
   காரணம் : இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.

விடை: கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

5. கூற்று : ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைப்பதன் மூலம் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு, தண்டவாளம் பூமியில் புதையுண்டு போகாமல் காக்கப்படுகிறது.
    காரணம் : அழுத்தமானது அது செயல்படும் பரப்புடன் நேர்விகிதத் தொடர்புடையது.

விடை: கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.

VIII. கணக்கீடுகள்

1. 200 கிராம் எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரின் மேல் மிதக்கிறது. மரக்கட்டையின் பருமன் 300 cm3 எனில் நீரினால் ஏற்படும் உந்துவிசையைக் கண்டுபிடி.

மரக்கட்டையின் எடை m =200 g
மரக்கட்டையின் பருமன், V = 300 cm3
உந்துவிசை =இடம்பெயர்ந்த திரவத்தின் எடை
=மரக்கட்டையின் பருமன்
உந்துவிசை =300 cm3

2. பாதரசத்தின் அடர்த்தி 13600 kg m–3 எனில் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக.

பாதரசத்தின் அடர்த்தி =13600 kg m–3
நீரின் அடர்த்தி = 1000 kg m–3
ஒப்படர்த்தி =பாதரசத்தின் அடர்த்தி  / நீரின் அடர்த்தி
= 13600 kg m–3 / 1000 kg m
ஒப்படர்த்தி = 13.6

3. நீரின் அடர்த்தி 1 kg cm–3 எனில் அடர்த்தியை SI அலகில் கூறு.

நீர் அடர்த்தியின் SI அலகு = 1000 kg / m3

4. 100 கி எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரில் மிதக்கிறது எனில் அதன் தோற்ற எடையைக் கண்டுபிடி.

மரக்கட்டையின் எடை = 100 g.

ஒரு பொருள் பாய்மத்தில் மிதக்கும்போது, அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்கு சமமான மேல்நோக்கு விசையை உணரும்.
ஒரு மிதக்கும் பொருளுக்கு, மேல்நோக்கு விசை = அப்பொருளின் எடை
ஃ அதன் தோற்ற எடை =  காற்றில் பொருளின் எடை – மேல்நோக்கு விசை = 0

VIII.  உயர் சிந்தனையை வினாக்கள்.

1. வளிமண்டல அழுத்தம் 98.6 கிலோ பாஸ்கல் அளவு இருக்கும்பொழுது பாதரச காற்றழுத்தமானியில் பாதரசத்தின் உயரம் எவ்வளவு இருக்கும்?

வளிமண்டல அழுத்தம் (P) = 98.6 x 103 kPa.
பாதரசத்தின் அடர்த்தி ρHg =13.6 × 103 kg/cm3
புவியீர்ப்பு முடுக்கம் g =9.8 m/s-3
h × ρHg × g
பாதரசத்தின் உயரம் h =Patm / ρHg x g
= 98.6 kPa / (13.6×103)×(9.8ms-2)
= 98.6 103Pa / (13.6×103)×(9.8ms-2)
பாதரசத்தின் உயரம் h = 0.7397 m = 739.7 mm

2. மீன்கள் எவ்வாறு நீரின் மேலும் கீழும் நீந்த முடிகிறது?

  • மீன்கள் நீரில் உள்ள ஆக்ஸிஜனை பெற்றுக் கொண்டு நீரில் மிதக்கும்.
  • ஆக்ஸிஜனை வெளியேற்றி மீண்டும் நீரில் மூழ்கவும் முடிகிறது.

3. ஒரு பனிக்கட்டியை ஒரு குவளை நீரிலும், ஒரு குவளை ஆல்கஹாலிலும் போடும் பொழுது என்ன நிகழ்கிறது என்பதை கவனித்து விவரி.

  • குவளை நீரில் போடப்பட்ட பனிக்கட்டி மிதக்கிறது.
  • ஆல்கஹாலில் போடப்பட்ட பனிக்கட்டி மூழ்கிறது.

எனவே ஆல்கஹாலை விட நீரானது அதிக அடர்த்தி கொண்டது என அறிய முடிகிறது.

4. அடியில் துளையுடன் உள்ள படகு நீரில் செல்லும்பொழுது இறுதியில் மூழ்கிவிடும். ஏன்?

வளிமண்டல அழுத்தத்தை விட நீரின் அழுத்தம் அதிகம் இருப்பதால் இந்த நீரின் அழுத்தம் துளையுடன் படகினை நீரில் மூழ்கச் செய்யும்.

பயனுள்ள பக்கங்கள்