9th Std Science Term 3 Solution in Tamil | Lesson.9 அண்டம்

பாடம் 9 அண்டம்

பாடம் 9. அண்டம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. சூரிய மையக் காெள்கையை முன்மாெழிந்தவர் யார்?

  1. டைக்காே பிராஹே
  2. நிகாேலஸ் காேபர்நிக்கஸ்
  3. டாலமி
  4. ஆர்க்கிமிடிஸ்

விடை: நிகாேலஸ் காேபர்நிக்கஸ்

2. இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள காேள் அல்ல?

  1. புதன்
  2. சனி
  3. யுரேனஸ்
  4. நெஃப்டியூன்

விடை: புதன்

3. செரஸ் என்பது ___________

  1. விண்கல்
  2. விண்மீன்
  3. காேள்
  4. சிறுகாேள்

விடை: சிறுகாேள்

4. A என்ற சூரியனைச் சுற்றி வர எடுத்துக் காெள்ளும் சுழற்சி நேரம் B என்ற காேளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், காேள் A வின் தூரம் காேள் B யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?

  1. 4
  2. 5
  3. 2
  4. 3

விடை: 4

5. __________ ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.

  1. 13.7 மில்லியன்
  2. 15 மில்லியன்
  3. 13 மில்லியன்
  4. 20 மில்லியன்

விடை: 13.7 மில்லியன்

6. இவற்றுள் எது சரியான வாக்கியம்?

A) நம் சூரிய மண்டலத்தில் எட்டு காேள்கள் உள்ளன.

B) செவ்வாய் காேளைத் தவிர, அனைத்துக் காேள்களும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன.

  1. A மட்டும் சரியானது
  2. B மட்டும் சரியானது
  3. A மற்றும் B சரியானது
  4. இரு வாக்கியங்களும் தவறு

விடை: A மட்டும் சரியானது

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. சூரியனின் திசைவேகம் ……………….. கி.மீ/வி.

விடை: 1.250

2. முனைகளில், சூரியனின் சுழற்சி வேகம் ………………….. நாட்கள்

விடை: 2.36

3. இந்தியாவின் முதல் செயற்கைக்காேள் …………………….

விடை:  ஆரியபட்டா.

4. கெப்ளரின் மூன்றாம் விதியை ……………………………………….. விதி என்றும் அழைப்பர்.

விடை: ஒத்திசைவுகளின்

5. நம் சூரிய குடும்பத்திலுள்ள காேள்களின் எண்ணிக்கை ………………….. ஆகும்.

விடை: 8

6. …………………… எனும் இயற்கைத் துணைக்காேள் மட்டுமே காேள் சுழலும் திசைக்கு எதிர் திசையில் அமைந்துள்ளது.

விடை: டிரைட்டான்

III. சரியா? தவறா? எனக் கூறுக:

1. பன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்.

விடை: சரி

2. ஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு சுழலும் பின்னர் தாேன்றும்

விடை: தவறு

சரியான விடை: ஹேலிஸ் வால்மீன் 76 வருடங்களுக்கு சுழலும் பின்னர் தாேன்றும்

3. பூமிக்கு அருகே உள்ள காேள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும்.

விடை: தவறு

சரியான விடை: பூமிக்கு அருகே உள்ள காேள்களுக்கு சுழலும் திசைவேகம் அதிகமாக இருக்கும்.

4. புதன் காேள் சிவப்புக்காேள் என்றழைக்கப்படுகிறது.

விடை: தவறு

சரியான விடை: செவ்வாய் காேள் சிவப்புக்காேள் என்றழைக்கப்படுகிறது.

5. சனி மற்றும் யுரேனஸ் காேள்களுக்கிடையே உள்ள தாெலைவு, பூமி மற்றும் புதனுக்கிடையே உள்ள தாெலைவின் 10 மடங்குகள் ஆகும்.

விடை: தவறு

சரியான விடை: சனி மற்றும் யுரேனஸ் காேள்களுக்கிடையே உள்ள தாெலைவு, பூமி மற்றும் புதனுக்கிடையே உள்ள தாெலைவின் 20 மடங்குகள் ஆகும்

IV. சுருக்கமாக விடையளி.

1. சூரிய மண்டலம் என்றால் என்ன?

சூரியனும் அதைச் சுற்றி வரும் விண்பொருள்களும் சேர்ந்து சூரிய மண்டலம் என அழைக்கப்படுகின்றன.

2. சுழற்சித் திசைவேகம் வரையறு.

காேளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ச உயரத்தில், செயற்கைக் காேள் ஒன்று வட்டப் பாதையில் சுற்றி வருவதற்கு அளிக்கப்படும் கிடைமட்டத் திசைவேகம் சுழற்சித் திசைவேகம் என வரையறுக்கப்படுகிறது.

3. சுற்றுக்காலம் வரையறு

புவியை ஒரு முறை முழுமையாக சுற்றி வர இரு செயற்கைக்கோள் எடுத்துக்கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்

4. துணைக்கோள் என்றால் என்ன? துணைக்கோளின் இரு வகைகள் யாவை?

ஒரு சுற்றுப்பாதையில் கோளைச் சுற்றிவரும் பொருள் துணைக்கோள் என்றழைக்கப்படும்

  1. இயற்கை துணைக்கோள்
  2. செயற்கை துணைக்கோள்

5. உட்புறக்கோள் குறிப்பு வரைக

உட்புற சூரிய மண்டலத்தில் காணப்படும் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை உட்புறக்கோள்கள் என்றழைக்கப்படுகின்றன.

6. வால் விண்மீன்கள் என்றால் என்ன?

அதி நீள்வட்டப் பாதையில் நம் சூரியனைச் சுற்றிவரம் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள்களே வால் விண்மீன்கள் எனப்படும். இவை சூரியனை நெருங்கும்போது ஆவியாகி தலை மற்றும் வால் ஆகியவை உருவாகின்றன

7. கெப்பளரின் விதிகளை வரையறு

முதல்விதி – நீள்வட்டங்களின் விதி

சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.

இரண்டாம் விதி – சமபரப்புகளின் விதி

கோளின் மையத்தையும் சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக்கோடு சமகாலங்களில் சம பரப்புகளை கடக்கிறது.

மூன்றாம் விதி – ஒத்திசைவுகளின் விதி

எந்த இரு கோள்களுக்கும் சுற்றுக் காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்முடிகளின் விகித்திற்கு சமம்

8. பூமியில் உயிர் வாழ்வதற்கான காணிகள் யாவை?

சூரிய மண்டலத்திலுள்ள கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும் தான் உயிர் வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது.

9. காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?

ஒரு நாெடிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் சூரியன் (9 lakh கி.மீ/ம) பால்வெளியை ஒரு முறை சுற்றிவர 225 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்தக் காலம் தான் காஸ்மிக் ஆண்டு எனப்படுகிறது.

10. சுகன்யான் – குறிப்பு வரைக

2022-ம் ஆண்டில் இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும். இதன் முதல் பணிக்குழுவில் மூன்று விண்வெளி வீரர்கள் இருப்பர். ஐி.எஸ்.எல்.வி.-II ராக்கெட் மூலம் விண் வெளிக்கு இவர்களை எடுத்து செல்லும் திட்டம் சுகன்யான் என்றழைக்கப்படுகிறது.

V. விரிவாக விடையளி

1. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.

புதன்:

சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்தான் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும். புதன் மிகவும் மங்கலாகவும், சிறியதாகவும் காணப்படுவதால், வெறும் கண்ணால் பார்ப்பதைவிட ஒரு தொலைநோக்கியால் அதை நன்கு காண முடியும். அதை எப்போதும் கிழக்கு அல்லது மேற்குத் திசையின் கீழ்வானத்தில் மட்டுமே காண இயலும்.

வெள்ளி:

கிட்டத்தட்ட பூமியின் அளவையொத்த ஒரு சிறப்புக்கோள் வெள்ளி. நம் சூரியமண்டலத்தில் காணப்படும் கோள்களிலேயே அதிக வெப்பநிலை கொண்டது வெள்ளி ஆகும். நிலவிற்குப் பிறகு, வானத்தில் தெரியும் மிகப்பிரகாசமான வான்பொருள் இதுவே. மற்ற கோள்களைப்போல் அல்லாமல், இது எதிர்த் திசையில் சுழல்வதால், இங்கு சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது. வெள்ளியை நாம் வெறும் கண்ணால் எளிதில் காணலாம். அது கிழக்கு அல்லது மேற்குத் திசையில் கீழ்வானத்தில் தெரியும்.

பூமி:

சூரிய மண்டலத்திலுள்ள கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர்வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால்தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப் பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதனால், விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்.

செவ்வாய்:

புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், இது சிவப்புக்கோள் என அழைக்கப்படுகிறது. இதற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன.

வியாழன்:

வியாழன் கோளானது, பெருங்கோள் என அழைக்கப்படுகின்றது. கோள்களிலேயே மிகப்பெரியது இதுவே (புவியை விட 11 மடங்கு பெரியது, 318 மடங்கு எடை கொண்டது). இதற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும் உள்ளன. இதன் நிலவான கானிமீடு என்ற நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவாகும்.

சனி:

வளையங்களுக்குப் பெயர்போன சனி கோள், மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. வெளிப்புற சூரியமண்டலத்தில் காணப்படும் இக்கோளானது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரும் வாயுக்கோளாகும். குறைந்தபட்சம் சனியில் 60 நிலவுகள் உள்ளன. டைட்டன் என்ற நிலவே அதில் பெரியது ஆகும். நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு இதுவாகும். சனியின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.

யுரேனஸ்:

யுரேனஸ் ஒரு குளிர்மிகு வாயுப் பெருங்கோளாகும். பெரிய தொலைநோக்கியின் மூலமாகவே இதைக் காணஇயலும். இது மிகவும் சாய்ந்த சுழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டோடுவது போல் தெரிகின்றது. இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும், குளிர்காலமும் மிக நீண்டு இருக்கும், ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.

நெப்டியூன்:

இக்கோளானது பச்சை நிற விண் மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்தக் கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளூட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு 13 நிலவுகள் உள்ளன, அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்.

2. பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவரி.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் பார்வையில் கீழ்கண்ட வழிகளில் பன்னாட்டு விண்வெளி மையம் நமக்கு பலனை அளித்துள்ளது (அல்லது வருங்காலங்களில் அளிக்கக்கூடும்).

நீர் சுத்திகரிக்கும் முறைகள்

பன்னாட்டு விண்வெளி மையத்தில் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிக்கும் முறைகளைப் பெறலாம். தண்ணீர்த் தட்டுப்பாடு நிறைந்த இடங்களில் வாழும் மக்களுக்கு உயிர் காக்கும் வழிமுறையாக இது இருக்கக் கூடும். பன்னாட்டு விண்வெளி மையத்திற்காக (ISS) உருவாக்கப்பட்ட நீர் மீட்பு அமைப்பு (WRS) மற்றும் ஆக்சிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) ஆகியவை, ஈராக் நாட்டில், சுத்தமான குடிநீர் இல்லை என்பதால், மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தைக் காப்பாற்றி அவர்களை மீண்டும் அங்கு வாழ வழிவகை செய்துள்ளன.

கண்ணைத் தொடரும் தொழில்நுட்பம்

நுண் ஈர்ப்பு நிலையில் ஆய்வுகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட, கண்ணைத் தொடரும் கருவி பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்பட்டுள்ளது. இயக்கக்குறைபாடு மற்றும் பேச்சில் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த கண்ணைத் தொடரும் தொழில்நுட்பமானது வெகுவாகப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, தீவிர இயக்கக் குறைபாடுள்ள ஒரு குழந்தை, அதன் கண் அசைவுகளை மட்டுமே வைத்து அன்றாட செயல்பாடுகளை செய்து கொண்டு யாரையும் சார்ந்திராத வாழ்க்கையை வாழ இயலும்.

தானியங்கி கைகள் (robotic arms)மற்றும் அறுவை சிகிச்சைகள்

அறுவை சிகிச்சை மூலம் அகற்ற இயலாத கட்டிகளை (எ.கா, மூளைக் கட்டிகள்) நீக்குவதற்கும் மிகத் துல்லியான முறையில் உடல்திசு ஆய்வு செய்வதற்கும் (biopsy), பன்னாட்டு விண்வெளி மையத்தில் ஆராய்ச்சிக்குத் துணையாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட, தானியங்கி கைகள் பெரிதும் உதவுகின்றன. இத்தகையகருவிகளால் மிகத்துல்லியமான முறையில் உடல் திசு ஆய்வுகளைச் செய்ய முடியும் என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

இவற்றைத் தவிரவும் இன்னும் பல வழிகளில் பன்னாட்டு விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நமக்கு பயனுள்ளதாய் அமைகின்றன. அவையாவன: மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குதல், மார்பகப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, அணுகமுடியாத பகுதிகளுக்குள் செல்வதற்கான மீயொலிக் கருவிகள் உள்ளிட்ட இன்னும் பல.

3. சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன?

காேளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ச உயரத்தில், செயற்கைக் காேள் ஒன்று வட்டப் பாதையில் சுற்றி வருவதற்கு அளிக்கப்படும் கிடைமட்டத் திசைவேகம் சுழற்சித் திசைவேகம் என வரையறுக்கப்படுகிறது.

VI. கருத்துரு வினாக்கள்

1. சில விண்மீன்கள் நீல நிறமாகவும், சில சிவப்பு நிறமாகவும் தோன்றுவது ஏன்?

வெப்பநிலையைப் பொறுத்தும், விண்மீன்கள் வெவ்வேறு வண்ணங்களில் தோன்றலாம். வெப்பமான விண்மீன்கள். வெண்மையாகவோ அல்லது நீலமாகவோ தோன்றும். குளிர்வான விண்மீன்கள் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாகத் தோன்றும்.

2. கோள்கள் நீள்வட்டப்பாதையில் சுழல்வதை எவ்வாறு தொடர்ந்து பராமரிக்க முடிகிறது?

கோள்கள் நீள்வட்டப்பாதையில் சுழல்வதை எவ்வாறு தொடர்ந்து பராமரிக்க காரணம் சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையே உள்ள புவிஈர்ப்பு விசை மற்றும் மையநோக்கு விசை ஆகும்.

3. ஏன் சில செயற்கைக் கோள்கள் புவி நிலை செயற்கைக் கோள்கள் எனக் கருதப் படுகின்றன?

செயற்கைக்கோளானது புவியின் பரப்பிற்கு மேல் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். இவ்வாறாக, புவியைப் பொறுத்து ஒரே நிலையில் இருப்பதால் இவ்வகை செயற்கைகோள்களுக்கு புவிநிலை செயற்கைக்கோள்கள் என்று பெயர்

4. பூமியில் 60 கிகி எடையுள்ள மனிதன் சூரியனில் 1680 கிகி எடையைக் கொண்டிருப்பது ஏன்?

சூரியனில் புவிஈர்ப்பு முடுக்கத்தின மதிப்பு பூமியின் புவிபரப்பு முடுக்கத்தின் மதிப்பை விட 28 மடங்கு அதிகம் ஆகும்

VII. கணக்கீடுகள்.

1. புவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்தில் உள்ள, சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தைக் கொண்டுள்ள செயற்கைக் கோளின் வேகத்தைக் கணக்கிடவும். (R – 6370 கிமீ எனக் கொள்க.).

(குறிப்பு: மணி நேரத்தை வினாடிகளில் மாற்றியபின் கணக்கிடவும்.)

r = 36000Km
வேகம் =தொலைவு / சுழற்சி காலம்
தொலைவு = 2πr
= 2 X 3.14 X 36000
= 226080 Km.
சுழற்சி காலம் = 24 hr = 86400 s
வேகம் = 226080/86400
=2.62 Km /s

2. பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள, கோளின் சுழற்சிக் காலத்தைக் கணக்கிடவும்.

வேகம், V = √(GM/(R+h))
= √ 6.673 X 10-11 X 5.972 X 1024/ (6371+400)
= 0.0767 x 10 5 m/s
சுழற்சி காலம், T = 2π(R+h)/v
= 2 X 3.14 X ( 6371 + 400) X 103 / 0.0767 x 105
= 5543.92 seconds

பயனுள்ள பக்கங்கள்