பாடம் 1.2 தமிழாேவியம்
நூல் வெளி
ஈரோடு தமிழன்பன் எழுதிய தமிழோவியம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொளள் அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரோடு தமிழன்பன் சிறுகதை, புதுக்கவிதை முதலிய படைப்புகள் வெளியிட்டுள்ளார் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ புது வடிவங்களில் கவிதை நூல்களில் தந்துள்ளார். இவரது வணக்கம் வள்ளுவ கவிதை நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கில் உள்ளிட்ட மொழியில் மொழி பெயர்க்கப்ட்டுள்ளன. |
தெரிந்து தெளிவோம்
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் – பிங்கல நிகண்டு யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் – பாரதியார் |
இலக்கணக்குறிப்பு
- எத்தனை எத்தனை – அடுக்குத்தொடர்
- விட்டு விட்டு – அடுக்குத்தொடர்
- ஏந்தி – வினையெச்சம்
- காலமும் – முற்றும்மை
பகுபத உறுப்பிலக்கணம்
வளர்ப்பாய் – வளர் + ப் + ப் + ஆய்
- வளர் – பகுதி
- ப் – சந்தி
- ப் – எதிர்கால இடைநிலை
- ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
பலவுள் தெரிக
காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!… இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
- முரண், எதுகை, இரட்டைத் தொடை
- இயைபு, அளபெடை, செந்தொடை
- எதுகை, மோனை, இயைபு
- மோனை, முரண், அந்தாதி
விடை : எதுகை, மோனை, இயைபு
குறுவினா
1. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிரலோய் இருப்பதும் தமிழே!என்ற அடி என்னைக் கவர்ந்த அடிகளாகும். பழைமையான மொழியாக இருந்தாலும், காலம் கடந்து நிற்கும் மொழியாகும் என்பதை இத் தொடர் வழி அறியலாம். |
2. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?
இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வரிகள் அகப்பொருள், புறபொருள் ஆகியவற்றை உணர்த்துகின்றன. |
சிறுவினா
1. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
சங்க இலக்கியத்தில் எண்ணற்ற தமிழ்ச்சொற்கள் காலத்திற்கேற்றப்படி புதுபித்துக் கொள்ளும் வகையில் உள்ளன. மேலும், கடி சொல் இல்லைக் காலத்துப்படினே என்ற தொல்காப்பிய நூற்பா வரிகள் புதிய சொல்லுருவாக்கத்திற்கு வழி செய்வதாலும் காலந்தோறும் தமிழ்மொழி தன்னை புதுப்பித்துக் கொள்கின்றது. |
2. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
|
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் எனக் கூறும் நூல்
- வணக்கம் வள்ளுவ
- பிங்கல நிகண்டு
- தமிழோவியம்
- தமிழன்பன் கவிதைகள்
விடை : பிங்கல நிகண்டு
2. காலம் பிறக்கும் முன் பிறந்தது
- தமிழ்
- உருது
- சமஸ்கிருதம்
- மலையாளம்
விடை : தமிழ்
3. உலகத் தாய்மொழி நாள்
- மார்ச் 21
- ஏப்ரல் 21
- பிப்ரவரி 21
- ஜனவரி 21
விடை : பிப்ரவரி 21
4. வணக்கம் வள்ளுவ என்ற நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்த ஆண்டு
- 2007
- 2005
- 2006
- 2004
விடை : 2004
5. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர்
- சுரதா
- ஜெகதீசன்
- சுப்புரத்தினம்
- காளமேகம்
விடை : ஜெகதீசன்
6. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ புது வடிவங்களில் கவிதை நூல்களில் தந்துள்ளவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- ஈரோடு தமிழன்பன்
- கண்ணதாசன்
விடை : ஈரோடு தமிழன்பன்
7. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே என்ற பாடல் வரிகளை எழுதியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- ஈரோடு தமிழன்பன்
விடை : ஈரோடு தமிழன்பன்
8. விரலை மடக்கியவன் இசையில்லை – எழில்
வீணையில் என்று சொல்வதுபோல என்ற பாடல் வரிகளை எழுதியவர்
- ஈரோடு தமிழன்பன்
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
விடை : ஈரோடு தமிழன்பன்
9. தமிழோவியம் என்பதை பிரித்து எழுதக் கிடைப்பது
- தமிழ் + ஓவியம்
- தமிழோ + வியம்
- தமிழ் + ழோவியம்
- தமில் + ஓவியம்
விடை : தமிழ் + ஓவியம்
8. ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையும் புரிந்துகொள்ள அகராதி தேவையில்லை எனக் கூறியவர்
- ஈரோடு தமிழன்பன்
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
விடை : ஈரோடு தமிழன்பன்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _______, _______ போன்ற நாடுகளில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக திகழ்கிறது.
விடை : இலங்கை, சிங்கப்பூரில்
2. பல சமயங்களையும் ஏந்தி வளர்த்தால் தமிழைத் ______ எனலாம்
விடை : தாய்
3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று ______ பாடினார்
விடை : பாரதியார்
4. ______ காலம் பிறக்கும் முன் பிறந்தது
விடை : தமிழ்மாெழி
குறுவினா
1. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் எவை?
- இலங்கை
- சிங்கப்பூர்
2. மானிட மேன்மையைச் சாதித்திட எதன் வழி, ஓதி நடக்க வேண்டும் என்று ஈரோடு தமிழன்பன் கூறுகின்றார்?
மானிட மேன்மையைச் சாதித்திட திருக்குறள் வழி, ஓதி நடக்க வேண்டும் என்று ஈரோடு தமிழன்பன் கூறுகின்றார்
சிறுவினா
1. ஈரோடு தமிழன்பன் குறிப்பு வரைக
|
2. தமிழோவியம் கவிதையில் கவிஞர் சுட்டும் கருத்துகளை எழுதுக
|
சில பயனுள்ள பக்கங்கள்