Tamil Nadu 9th Standard Tamil Book Term 1 புறநானூறு Solution | Lesson 2.4

பாடம் 2.4. புறநானூறு

நூல்வெளி

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

புறநானூறு புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது.

பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புற வாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது.

இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்று செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

குடபுலவியனார்

பழஞ்செந்தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளுள் குட நாடும் ஒன்று. இது குடபுலம் எனவும் வழங்கப்பெறும்.

குட நாட்டில் பிறந்ததால், குடபுலவியனார் என இப்புலவர் அழைக்கப்படுகிறார்.

குடபுலவியனார் பாடிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அவை இரண்டும், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பற்றிப் பாடப்பட்டவை.

அவற்றுள் ஒன்று, அவன் பேராண்மையினைப் பாராட்டுவதோடு, புலவருடைய போர்க்களம்பாடும் திறனையும் புலப்படுத்துகிறது.

மேலும் அரசனுக்கு அரிய அறவுரையினைச் சொல்வதாகவும் உழவின் சிறப்பையும் நீர் நிலைகளின் தேவையையும் உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

பொதுவியல் திணை

வெட்சி முதலிய புறத்திணைகளுக் கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன் உள்ள திணைகளில் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.

முதுமொழிக்காஞ்சித் துறை

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையை கூறுதல்

சொல்லும் பொருளும்

  • யாக்கை – உடம்பு
  • புணரியோர் – தந்தவர்
  • புன்புலம் – புல்லிய நிலம்
  • தாட்கு – முயற்சி, ஆளுமை
  • தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறை வில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்

இலக்கணக்குறிப்பு

  • மூதூர், நல்லிசை, புன்புலம் – பண்புத்தொகை
  • நிறுத்தல் – தொழிற்பெயர்
  • அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
  • நீரும் நிலமும், உடம்பும் உயிரும் – எண்ணும்மை
  • அடுபோர் – வினைத்தொகை.
  • கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. நிறுத்தல் – நிறு + த் + தல்

  • நிறு – பகுதி
  • த் – சந்தி
  • அன் – சாரியை
  • தல் – தொழில் பெயர் விகுதி

2. காெடுத்தோர் – காெடு +த் + த் + ஓர்

  • காெடு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக.

மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

  1. மறுமை
  2. பூவரசு மரம்
  3. வளம்
  4. பெரிய

விடை : வளம்

குறுவினா

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்பு தருக.

நீர் இல்லாமல் அமையாத உடல் உணவால் அமையும். உணவே முதன்மையானக உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

சிறுவினா

நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடையவோ, உலகு முழுவதையும் வெல்லவோ, நிலையான புகழைப் பெற விரும்பினால் நான் சொல்வதைக் கேள்!

நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமையும். உணவையே முதன்மையாக உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.

உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர்.

தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனுக்கு சிறிதும் உதவாது. அதனால், நான் கூறியதை விரைவாகக் கடைப்பிடிப்பாயாக!

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.

நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும்
பெறுவர்.

இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. நீரின்றி அமையா யாக்கை பாடல்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. பதிற்றுப்பத்து
  4. பரிபாடல்

விடை : புறநானூறு

2. உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. அகநானூறு
  2. பதிற்றுப்பத்து
  3. பரிபாடல்
  4. புறநானூறு

விடை : புறநானூறு

3. உணவு தந்தவர் ________ தந்தவர் ஆவர். 

  1. உடல்
  2. துன்பம்
  3. மகிழ்ச்சி
  4. உயிர்

விடை : புறநானூறு

4. புணரியோர் என்பதன் பொருள்

  1. உடல்
  2. உடம்பு
  3. தந்தவர்
  4. புல்லிய நிலம்

விடை : தந்தவர்

5. புன்புலம் என்பதன் பொருள்

  1. புல்லிய நிலம்
  2. உடல்
  3. உடம்பு
  4. தந்தவர்

விடை : புல்லிய நிலம்

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. பண்பாட்டு கருவூலமாக _____________ திகழ்கிறது.

விடை : புறநானூறு

2. புறநானூறு _____________ நூல்களுள் ஒன்று.

விடை : எட்டுத்தொகை

3. யாக்கை என்பதன் பொருள் _____________.

விடை : உடம்பு

4. உணவு என்பது _____________ நீரும் ஆகும்.

விடை : நிலத்துடன்

5. குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வழங்கிய அறிவுரை

விடை : நீர்நிலை பெருக்குதல்

குறு வினா

1. எவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்?

நிலம், நீர், காற்று என்பவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்.

2. எவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும்?

இயற்கை நமக்கு கொடையாக தந்திருக்கும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை உரிய முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

3. நம் முன்னாேர்கள், நீர்நிலைகளை உருவாக்குபவர்கள் எவ்வாறு போற்றினர்?

நீரின் இன்றியமையாமையை உணர்ந்த நம் முன்னாேர்கள், நீர்நிலைகளை உருவாக்குபவர்கள் “உயிரை உருவாக்குபவர்கள்” என்று போற்றினர்.

4. உணவு தந்தவர் எதனை தந்தவர் ஆவர்?

உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.

5. யார் வீணாக மடிவர் என குடபுலவியனார் கூறுகிறார்?

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.

6. பொதுவியல் திணை என்றால் என்ன?

வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.

7. பொருண்மொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன?

சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்து உரைப்பது பொருண்மொழிக் காஞ்சித்துறையாகும்..

குறுவினா

புறநானூறு குறிப்பு வரைக

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது.

பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை ஆகியவை பற்றி கூறுகிறது.

பண்டைய மக்களின் புறவாழ்வைக் காட்டுகின்றது.

பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

புறநானூற்று தொடர்கள்

அ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! ( புறம் -18)

ஆ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே ! (புறம் – 189)

இ) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம்-192)

ஈ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! (புறம் – 312)

உ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ! (புறம்-183)

சிறுபஞ்சமூலம் – பாடல் வரிகள்

குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சொர்க்கத்து இனிது

– சிறுபஞ்சமூலம் 64

சில பயனுள்ள பக்கங்கள்