பாடம் 2.5. ஆகுபெயர்
குறுவினா
காலவாகுபெயர் குறிப்பு தருக
கார் அறுத்தான்
- கார் என்னும் காலப்பெயர் காலத்தைக் குறிக்காது அக்காலத்தில் விளையும் பயிருக்குப் பெயராகி வந்தது எனவே இது காலவாகு பெயராகும்.
சிறுவினா
அளவையாகு பெயர்களின் வகைகளை விளக்குக.
எண்ணலளவை ஆகுபெயர்:
ஒன்று என்னும் எண்ணுப் பெயர் அவ்வெண்ணைக் குறிக்காமல், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்ததால் இது எண்ணலளவை ஆகுபெயர் ஆகியது. எடுத்தலளவை ஆகுபெயர் :
இரண்டு கிலோ – நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையைக் குறிக்காது. அவ்வளவையுள்ள பொருளுக்குப் பெயராகி வந்துள்ளதால் எடுத்தலளவை ஆகுபெயராயிற்று. முகத்தலளவை ஆகுபெயர்:
முகந்து அளக்கும் அரை லிட்டர் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையைக் குறிக்காது, அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது. நீட்டலளவை ஆகுபெயர்:
நீட்டி அளக்கும் ஐந்து மீட்டர் என்னும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவையைக் குறிக்காமல், அவ்வளவையுள்ள பொருளுக்குப் பெயராகி வந்துள்ளது. |
கூடுதல் வினாக்கள்
I. பலவுள் தெரிக
1. ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது _________
- எச்சம்
- ஆகுபெயர்
- தொழிற்பெயர்
- வினையாலணையும் பெயர்
விடை: ஆகுபெயர்
2. ஆகுபெயர்கள் __________ வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- 12
- 13
- 14
- 16
விடை: 16
3. சினையாகுபெயருக்கு சான்று
- கார் அறுத்தான்
- மருக்கொழுந்து நட்டான்
- மஞ்சள் பூசினாள்
- வற்றல் தின்றான்
விடை: மருக்கொழுந்து நட்டான்
4. அஃகசாலை என்பது ……………………. த்தைக் குறிக்கும்.
- அங்காடிகள் அமைந்துள்ள இடம்
- யவனர்கள் இருக்கின்ற இடம்
- நாணயங்கள் அச்சடிக்கும் இடம்
- அரேபியர்க ளின் பந்தர் இடம்
விடை : நாணயங்கள் அச்சடிக்கும் இடம்
5. கூற்று 1 – காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகமாகும்.
கூற்று 2 – வண்டியூர் என்னும் ஊர் காஞ்சி மாநகரத்தில் அமைந்துள்ளது.
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 2 சரி, 1 தவறு
- கூற்று 1 சரி, 2 தவறு
விடை : கூற்று 1 சரி, 2 தவறு
6. யவனப்பிரியா என்பது எதனைக் குறிக்கும்?
- மிளகு
- முத்து
- சங்கு
- தந்தம்
விடை : மிளகு
7. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள்
- பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு
- குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து
- மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
விடை : மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
8. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.
- காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
- பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள்.
- காவிரியாற்றின் கழிமுகம் எதற்காக அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்விதம் அழைக்கப்பட்டன?
- காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- காவிரியாற்றின் கழிமுகம் எங்கு அமைந்திருந்தது? – பகலில் கடைகள் எவ்வாறு இயங்கின?
- காவிரியாற்றின் கழிமுகம் எதனால் அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எப்படி அழைக்கப்பட்டன?
விடை : காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
கற்பவை கற்றபின்…
ஆகுபெயரைக் கண்டறிக.
அ.
- தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள் – தொழிலாகு பெயர்
- தமிழரசி வள்ளுவரைப் படித்தாள் – கருத்தாவாகு பெயர்
ஆ.
- மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது – இடவாகு பெயர்
- நாடும் வீடும் நமது இரு கண்கள் – சினையாகு பெயர்
இ.
- கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள் – தொழிலாகு பெயர்
- கலைச்செல்வி பச்சை உடுத்தினாள் – பொருளாகுபெயர் (முதலாகு பெயர்)
ஈ.
- நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி – எண்ணலளவையாகு பெயர்
- நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும். – காரியவாகு பெயர்
உ.
- ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறது – தொழிலாகு பெயர்
- நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா? – இடவாகு பெயர்
ஆகுபெயர் அமையுமாறு தொடர்களை மாற்றி எழுதுக.
அ. மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்.
- மதுரையில் இரவு வணிகம் உண்டு
ஆ. இந்தியா வீரர்கள் எளிதில் வென்றனர்.
- இந்தியா எளிதில் வென்றது.
இ. நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்.
- நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கமே சிரித்தது
ஈ. நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்க முடியாது
- நீரின்றி உலகு இயங்காது
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்க்க.
Conversation between two friends meeting by chance at a mall.
Aruna: Hi Vanmathi! It’s great to see you after a long time.
Vanmathi: It’s great seeing you. How long has it been? It must be more than 6 months. I’m doing good. How about you?
Aruna: Fine. I have come with my parents. They are inside the grocery shop. What about you?
Vanmathi: I came with my father. He has gone to buy tickets for a 3D movie.
Aruna: Which movie?
Vanmathi: Welcome to the jungle.
Aruna : Great! I am going to ask my parents to take me to that movie.
இரண்டு தோழிகள் வணிக வளாகத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது நடந்த உரையாடல்
| அருணா | வான்மதி, என்ன ஒரு ஆச்சர்யம் நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைப் பார்க்கிறேன் மகிழ்ச்சி |
| வான்மதி | எனக்கும் மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் தான்! உன்னைப் பாரத்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய். |
| அருணா | நான் பெற்றோருடன் வந்தேன். அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் உள்ள பிரிவில் உள்ளார்கள். நீ? |
| வான்மதி | நான் என் தந்தையுடன் வந்தேன். இவ்வளாகத்தில் நடைபெறும் முப்பரிமாண திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்கச் சென்றிருக்கிறார். |
| அருணா | என்ன படம்? |
| வான்மதி | காட்டுக்குள் வரவேற்பு |
| அருணா | ஓ…. நானும் என் பெற்றோரிடம் அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்கப் போகிறேன். |
பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.
1. புத்தகம் படிக்கலாம் ( நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)
(எ.கா.) நல்ல புத்தகம் படிக்கலாம், நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்
- நாளும் நல்ல புத்தகம் ஆழ்ந்து, உணர்ந்து, மகிழ்ந்து படிக்காலாம்.
2. விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)
- திடலில் அனைவருடன் மாலையில் சேர்ந்து ஓடியாடி விளையாடுவது நன்று
பிழை நீக்குக.
பெறுந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.
பெருந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது. எப்போது அறையை விட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.
தொடரில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து நீக்குக.
அ. மலையேறிய மக்கள் மாலையின் வேகவேகமாய்க் கீழிறங்கின.
- மலையேறி மக்கள் மாலையில் வேகவேகமாய்க் கீழிறங்கின
ஆ. எங்கள் ஊர் சந்தையில் காய்க்கறிகள் கிடைக்கும்.
- எங்கள் ஊர் சந்தையில் காய்கறிகள் கிடைக்கும்.
இ. பண்டைத் துறைமுகங்களில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது.
- பண்டைத் துறைமுகங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஈ. சிட்டுக்கு சிறகுகள் முளைத்தது.
- சிட்டுக்கு சிறகுகள் முளைத்தன
ஆகுபெயர்களை அட்டவணைப்படுத்துக.
| விமலா கூடத்தில் உள்ள தட்டிலிருந்த டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள். மல்லிகையைப் படத்திற்குச் சூட்டினாள். அடுப்பிலிருந்து பாலை இறக்கினாள். பின்பு தோட்டத் திற்குச் சென்றாள். விமலாவைப் பார்த்தவுடன் தோட்டம் அமைதியானது! “தலைக்கு இருநூறு கொடுங்கம்மா ” என்று தோட்டத்தில் வேலை செய்தவருள் ஒருவர் சொன்னார். வெள்ளை மனங்கொண்ட வேலையாட்களின் கூலியைக் குறை க்க விரும்பாமல் அதனை அவளும் ஏற்றுக்கொண்டாள். அவர்கள் சென்றதும், காலையில் சாப்பிடப் பொங்கல் வைத்தாள். வீட்டில் சமையல் செய்ய, எந்தெந்தப் பொருள்கள் குறைவாக உள்ளன என்பதை ப்பற்றிச் சிந்தித்தாள். “சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும். துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் வாங்க வேண்டும்” எனத் திட்டமிட்டாள். அலைபேசி அழைத்தது. அரை நிமிடம் அலைபேசியில் வந்த வயலின் கேட்டு மகிழ்ந்தாள் . பிறகு எடுத்துப் பேசினாள் . கடைக்குப் போய்விட்டு வந்த பிறகு, பாதியில் விட்டிருந்த சிவசங்கரியைப் படித்து முடிக்கவேண்டும் என்று நினைத்தாள் . |
| டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள் | டிசம்பர் என்னும் காலப்பெயர் பூவுக்கு ஆகி வந்ததால் (காலவாகு பெயர்) |
| பாலை இறக்கினாள் | பால் கொதித்த பாத்திரத்தை இறக்கினாள், கருவி பாலுக்கு அகி வந்தது (கருவியாகு பெயர்) |
| தலைக்கு இருநூறு | ஒவ்வொருவருகு்கும் என்பதைத் தலை என்னும் சினைப்பெயரால் உணர்த்துகிறது (சினையாகு பெயர்) |
| சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். | 5 கிலோ அரிசியை குறிக்க… எடுத்து அளந்து தருவது (நிறுத்து) (எடுத்தலளவை ஆகு பெயர்) |
| தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும். | முகந்து அளக்கும் எண்ணெய் (முகத்தலளவையாகு பெயர்) |
| துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் | நீட்டி அளக்கும் துணி உலர்த்தும் கொடியை குறிக்கும் (நீட்டலளவையாகு பெயர்) |
| சிவசங்கரியைப் படித்து முடிக்க வேண்டும் | சிவசங்கரி நூலைக் குறிக்கும் (கருத்தாவாகு பெயர்) |
வரைபடத்தை உற்றுநோக்கி வினாக்களுக்கு விடையளிக்க.

அ. வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள பண்டைய நகரங்கள் எவை?
- கீழடி
- மதுரை
- காஞ்சி
- கொடுமலை
- கரூர்
- உறையூர்
ஆ. பண்டைய நகரங்களாகவும் துறைமுகங்களாகவும் விளங்கி, இன்று அகழாய்விற்குரிய இடங்களாகத் திகழ்வன எவை?
- அரிக்கமேடு
- கீழடி
- ஆழகன்குளம்
- கொற்கை
இ. பண்டைத் துறைமுகம், இன்றைய துறைமுகம் – வரைபடம் உணர்த்தும் வேறுபாடுகளைச் சுட்டுக.
- சிவப்பு வண்ணம் – பண்டைய துறைமுகம்
- நீல வண்ணம் – இன்றைய துறைமுகம்
ஈ. முத்துக் குளித்தலுக்குப் பெயர் பெற்ற துறைமுகங்கள்
- தூத்துக்குடி
- கொற்கை
உ. புகழ்பெற்ற பண்டைத் துறைமுகங்கள் இன்று இல்லாமைக்கான காரணங்களைச் சிந்தித்து எழுதுக
- கடல்கோல்களால் அழிந்தன
- சரியாக பராமரிக்கப்படாதலால் ஆழயாமில்லாமல் அழிந்தன
ஆகுபெயர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
(விளைச்சல் , பால், முழம், மதுரை, வெள்ளை, பள்ளி.
1. விளைச்சல்
- வெள்ளத்தினால் நெல் விளைச்சல் பாதித்தது
2. பால்
- பசும்பால் உடம்புக்கு நல்லது
3. முழம்
- ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
4. மதுரை
வைகை ஆறு மதுரை மாவட்டத்தில் ஓடுகிறது
5. வெள்ளை
- பாலும், கள்ளுமும் வெள்ளை நிறத்தில் காணப்படும்
6. பள்ளி
- அறிவுக்கண் தருவது பள்ளி
பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi
- ஒரு நாட்டின் பண்பாடானது மக்களின் இதயங்களிலும், ஆன்மாவிலும் தங்கியுள்ளது – மகாத்மா காந்தி
2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
- மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் – ஜவஹர்லால் நேரு
3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa
- அன்புக் குறைவும், தொண்டுப் பற்றாக்குறையும் தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சனை – அன்னைதெராசா
4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
- உங்கள் கனவுகள் நனவாகும் வரை கனவு காணுங்கள் – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera
- வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செயவதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் – ஷிவ் கேரா
வடிவம் மாற்றுக.
பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.
1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.:
| விடை : தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. மேலும் கீழும்
விடை : ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.
2. மேடும் பள்ளமும்
விடை : மனித மேடும் பள்ளுமும் நிறைந்தது
3. நகமும் சதையும்
விடை : நண்பர்கள் எப்போதும் நகையும் சதையும் போல இருக்கின்றனர்.
4. முதலும் முடிவும்
விடை : இறைவன் கையில் தான் முதலும் முடிவும் உள்ளது
5. கேளிக்கையும் வேடிக்கையும்
விடை : திரைப்படங்கள் கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்தது
6. கண்ணும் கருத்தும்
விடை : நம் செயலில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
- கர்நாடகம்
- கேரளா
- இலங்கை
- ஆந்திரா
விடை : இலங்கை
3. பிரித்து எழுதுக:
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
- கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
- கண்டெடுக்க + பட்டு + உள்ளன
- கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
விடை : கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன இது எவ்வகைத் தொடர்?
- வினாத்தொடர்
- கட்டளைத்தொடர்
- செய்தித்தொடர்
- உணர்ச்சித்தொடர்
விடை : செய்தித்தொடர்
மொழியை விளையாடு
பொருள் எழுதித் தொடரமைக்க.
கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;
அ) அலை – அழை
| அலை | கடலலை – இன்று கடல் அலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது. |
| அழை | வர வழைத்தல் – என் திருமணத்திற்கு நண்பர்களை அழைத்துள்ளேன் |
ஆ) கரை – கறை
| கரை | ஆற்றின் ஓரம் – ஆற்றங்கரையை பலபடுத்த பனைமரங்கள் வளர்க்ப்படுகின்றன |
| கறை | படிவது கறை – துணியில் கறை படிந்துள்ளது |
இ) குளவி – குழவி
| குளவி | பூச்சி வகைகளுள் ஒன்று – குளவி வீட்டின் நிலைப்படியில் கூடு கட்டுகிறது |
| குழவி | குழந்தை – குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்) |
ஈ) வாளை – வாழை
| வாளை | மீன் வகைகளில் ஒன்று – ஆற்றில் வாளை மீன் துள்ளிக் குதித்தது. |
| வாழை | வாழைப்பழம் – முக்கனிகளுள் ஒன்று வாழைப்பழம். |
உ) பரவை – பறவை
| பரவை | பரந்துள்ள கடல் – மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றார் பரவை. |
| பறவை | பறப்பவை – பறவைகள் பறந்து சென்றன. |
ஊ) மரை – மறை
| மரை | தாமரை – தாமரை நீர் நிலையில் மலரும். |
| மறை | வேதம் – வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன. |
அகராதியில் காண்க.
அ) இயவை
- வழி, மூங்கில், அரிசி, துவரை, தோரை நெல், காடு
ஆ) சந்தப்பேழை
- சந்தனப் பெட்டி
இ) சிட்டம்
- நூல் சிட்டம், உரிந்து கருகியது, பெருமை அறிவு, நீதி, உயர்ந்து
ஈ) தகழ்வு
- அகழ், அறிவு. உண்கலம்
உ) பௌரி
- பெரும் பண் வகை
பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக..
கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித் தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.
காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.
- வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்
குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்
2. விழாவறை காதை குறிப்பிடும் விழா (6)
- இந்திரவிழா
5. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளது (3)
- தவறு
7. பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று (7)
- தவளை ஓட்டம்
10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் (2)
- விதி
13. மா + அடி இதன் புணர்ந்த வடிவம் (3)
- மாவடி
19. கொள்ளுதல் என்பதன் முதல்நிலை திரிந்த சொல் (2)
- கோள்
வலமிருந்து இடம்
9. தூய்மையற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் (2)
- சிரை
11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் (3)
- ஆய்வு
12. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் (5)
- சாத்தனார்
18. தனி + ஆள் சேர்த்து எழுதுக. (4)
- தனியாள்
மேலிருந்து கீழ்
1. தமிழர்களின் வீர விளையாட்டு (7)
- ஏறு தழுவுதல்
2. இவள் + ஐ சேர்ந்தால் கிடைப்பது (3)
- இவளை
3. மரத்தில் காய்கள் _______ ஆகக் காய்த்திருந்தன (4)
- திரட்சி
5. உரிச்சொற்களுள் ஒன்று (2)
- தவ
6. _______ சிறந்தது (2)
- சால
8. நேரத்தைக் குறிப்பிடும் வானியல் சொல் (2)
- ஓரை
12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை (4)
- சாடிகள்
15. காய் பழுத்தால் _______ (2)
- கனி
கீழிருந்து மேல்
14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது (3)
- வத்தி
17. யா முதல் வரும் வினாப்பெயர் (2)
- யார்
18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது (4)
- தக்கார்
ஒளிந்துள்ள தமிழ்நாட்டின் துறைமுகங்களைக் கண்டறிந்து எழுதுக.
1. கல்வியில் தடம் பதித்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.
- கடலூர்
2. பூம்பொழில் புகும் கார் கால மேகம்
- பூம்புகார்
3. தூக்கத்தில் துள்ளிக் குதிக்கும் கரடி-
- தூத்துக்குடி
4. எட்டும் தொண் ணூறும் எண்ணுப்பெயர்கள்
- எண்ணூர்
அகராதியில் காண்க.
- தரங்கம் – அலை
- தொள்ளை – துளை
- நியமம் – தெரு
- பாடிலம் – நாடு
- மாறன் – பாண்டியன்
வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக்கொண்டு காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. சொற்களை உருவாக்குக.

கால், காலை, கான், புத்தகம், புல், புத்தி, அகல், அவல், கல், அதிகம், கறி, தறி, புதன், வலை, அறிவன், கலை, கத்தி, கவலை, காவல், அலை, தில்லை, தலை

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
வினைமுற்றை வினையாலணையும் பெயராக்கித் தொடர்களை இணைக்க.
1. மதுரையில் தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்தார்கள் ; அவர்கள் பாண்டிய மன்னர்கள்
- மதுரையில் தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்தவர்கள் பாண்டிய மன்னர்கள் .
2. நேற்று ஒருவன் வந்தான்; அவன் என் தம்பி.
- நேற்று வந்தவன் என் தம்பி
3. அவர் மகிழுந்தை நிறுத்தினார்; வீட்டிற்குள் நுழைந்தார்.
- மகிழ்வதை நிறுத்தியவர் வீட்டிற்குள் நுழைந்தார்
4. கூண்டுக்குள் கிளியைக் கண்டார்; அதை வானில் பறக்கவிட்டார்.
- கூண்டுக்குள் கிளியை கண்டவர் அதை வானில் பறக்கவிட்டார்
5. எனக்குக் கவிதை நூலைத் தருவார்; அவரே அதன் பதிப்பாளர்.
- எனக்கு கவிதை நூலைத் தந்தவர் அதன் பதிப்பாளர்
கலைச்சொல் அறிவோம்
- நடுகல் – Hero stone
- புடைப்புச் சிற்பம் – Embossed sculpture
- தொல்லியல் – Archaeology
- அகழாய்வு – Excavation
- பண்பாட்டு அடையாளம் – Cultural Identity
- கழிமுகங்கள் – Estuaries
- கலங்கரைவிளக்கம் – Lighthouse
- துறைமுகங்கள் – Ports
- பண்டமாற்றுமுறை – Commodity Exchange
- இளநீர் – Tender Coconut, அகழி – Moat
- கரும்புச் சாறு – Sugarcane Juice
- காய்கறி வடிசாறு – Vegetable Soup
அறிவை விரிவுசெய்
- தமிழர் நாகரிகமும் பண்பாடும் – தட்சிணாமூர்த்தி
- தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா.இராசமாணிக்கனார்
- தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம்
- தொல்லியல் நோக்கில் சங்ககாலம் – கா.ராஜன்
- தமிழர் சால்பு – வித்தியானந்தன்
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு.மேத்தா
- தமிழ்பழமொழிகள் – கி.வா.ஜகந்நாதன்
- இருட்டு எனக்கு பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) – ச.தமிழ்ச்செல்வன்
சில பயனுள்ள பக்கங்கள்