6th Std Science Term 1 Solution | Lesson.3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பாெருட்கள்

பாடம்.3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பாெருட்கள்

நம்மைச் சுற்றியுள்ள பருப்பாெருட்கள் பாட விடைகள்

பாடம்.3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பாெருட்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1.  _________________ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல

  1. தங்க மோதிரம்
  2. இரும்பு அணி
  3. ஒளி
  4. எண்ணெய்த் துளி

விடை : ஒளி

2. 400 மி.லி கொள்ளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன்

  1. 400 மி.லி
  2. 600 மி.லி
  3. 200 மி.லி
  4. 800 மி.லி

விடை : 200 மி.லி

3.   தர்பூசணிபழத்தில் உள்ள விதைகளை ____________________ முறையில் நீக்கலாம்.

  1. கைகளால் தெரிந்தெடுத்தல்
  2. வடிகட்டுதல்
  3. காந்தப் பிரிப்பு
  4. தெளிய வைத்து இறுத்தல

விடை : கைகளால் தெரிந்தெடுத்தல்

4. அரிசி மற்றும் பருப்புகளில் கலந்துள்ள லேசான மாசுப் பொருள்களை _________________ முறையில் நீக்கலாம்.

  1. வடிகட்டுதல்
  2. வண்டலாக்குதல்
  3. தெளிய வைத்து இறுத்தல்
  4. புடைத்தல்

விடை : புடைத்தல்

5. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனற்றுள் ________________ அவசியம் தேவைப்படுகிறது.

  1. மழை
  2. மண்
  3. நீர்
  4. காற்று

விடை : புடைத்தல்

6. _______________ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.

  1. திடப்பொருள் – திடப்பொருள்
  2. திடப்பொருள் – நீர்மம்
  3. நீர்மம் – நீர்மம்
  4. நீர்மம் – வாயு

விடை : திடப்பொருள் – நீர்மம்

7. பின்வருனவற்றுள் எது கலவை அல்ல

  1. பாலுடன் காபி
  2. எலுமிச்சை ஜூஸ்
  3. நீர்
  4. கொட்டைகள் புதைந்த ஐஸ்கிரீம்

விடை : நீர்

II. கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா ? திருத்தி எழுதுக.

1. காற்று அழுத்தத்திற்கு உட்படாது

விடை : தவறு

சரியான விடை : காற்று அழுத்தத்திற்கு உட்படும்

2. திரவங்களுக்கு குறிப்பிட்ட பருமன் இல்லை . ஆனால் குறிப்பிட்ட வடிவம் உண்டு

விடை : தவறு

சரியான விடை : திரவங்களுக்கு குறிப்பிட்ட பருமன், வடிவம் உண்டு

3. திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகருகின்றன.

விடை : தவறு

சரியான விடை :  திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகராது.

4. சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவி, அந்நீரை வடிகட்டுதல் மூலம் பிரித்தெடுக்கலாம்.

விடை : சரி

5. திடப்பொருள்களில் இருந்து நீர்மப்பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.

விடை : தவறு

சரியான விடை : திடப்பொருள்களில் இருந்து திடப்பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.

6. தானியத்தையும் உமியையும் தூற்றுதல் மூலம் பிரிக்கலாம்.

விடை :சரி

7. காற்று ஒரு தூய பொருளாகும்

விடை : தவறு

சரியான விடை : காற்று ஒரு கலவை

8. தயிரிலிருந்து வெண்ணெய் வண்டலாக்குதல் முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.

விடை : தவறு

சரியான விடை : தயிரிலிருந்து வெண்ணெய் கடைதல் முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பருப்பொருள் என்பது ___________________ ஆல் ஆனவை.

விடை : மிகமிகச் சிறிய துகள்கள்

2. திண்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி ___________________ ஆல் ஆனவை.

விடை : திரவம் மற்றும் வாயு

3. நெல் தாவரத்திலிருந்து தானியங்களை ___________________ முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.

விடை : தூற்றுதல்

4. ‘உப்புமாவில் இருந்து ___________________ முறையில் மிளகாயினை நீக்கலாம்.

விடை : கைகளால் தெரிந்தெடுத்தல்

5. நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க ___________________ முறை பயன்படுத்தப்படுகிறது.

விடை : தெளிய வைத்து இறுத்தல்

6. ஊசி, பென்சில் மற்றும் இரப்பர் வளையம் இவற்றில் ___________________  காந்தத்தால் கவரப்படும்.

விடை : ஊசி

7. குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுவாக ___________________ நீராக அமையும்.

விடை : தூய நீர்

IV. தாெடர்பின் அடிப்படையில் நிரப்புக.

1. திண்மம் : கடினத்தன்மை : வாயு :  ____________

விடை : அழுத்தத்திற்கு உட்படும்

2. துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உடையது : வாயு : __________________ : திண்மம் 

விடை : துகள்களுக்கு இடையே குறைந்த இடைவெளி உள்ளது

3. உமி – தானியங்கள் : தூற்றுதல் : மரத்தூள் – சுண்ணக்கட்டி :  ____________

விடை : கைகளால் தெரிந்தெடுத்தல்

4. சூடான எண்ணெயிலிருந்து முறுக்கினை எடுத்தல் : ____________ : காபியை வடி கட்டியபின் அடியில் தங்கும் காபித்தூள் : ____________ .

விடை : வடிகட்டுதல்

5. சுழற்சி இரும்பு – கந்தகம் கலவை : ____________ : : உளுத்தம் பருப்பு – கடுகு கலவை : உருட்டுதல்.

விடை : காந்தப் பிரிப்பு முறை

V. 1.பொருத்துக

1. எளிதில் உடையக்கூடியது (நொறுங்கும் தன்மை)உலோகத்தட்டு
2. எளிதில் வளையக்கூடியதுரப்பர் வளையம்
3. எளிதில் இழுக்கலாம்பருத்தி, கம்பளி
4. எளிதில் அழுத்தலாம்மண்பானை
5. எளிதில் வெப்பமடையும்நெகிழி ஒயர்(wire)
Ans : 1 -ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

V. 2.பொருத்துக

1. கண்களால் பார்க்ககூடிய தேவையற்ற பகுதிப் பொருளை நீக்குதல்சுண்ணாம்புக்கட்டி (சாக்பீஸ் தூள்) நீருடன் கலந்திருத்தல்காந்தப் பிரிப்பு
2. லேசான மற்றும் கனமான பகுதிப் பொருட்களைப் பிரித்தல்மணல் மற்றும் நீர்தெளிய வைத்து இறுத்தல்
3. கரையான மாசுப்பொருள்களை நீக்குதல்இரும்பு சார்ந்த மாசுக்கள்வடிகட்டுதல்
4. காந்தத்தன்மை கொண்ட பகுதிப்பொருளை காந்தத்தன்மை அற்ற பகுதிப் பொருட்களில் இருந்து பிரித்தல்அரிசி மற்றும் கல்கைளால் தேர்வு செய்தல்
5. நீர்மங்களில் இருந்து திண்மங்களைப் பிரித்தல்உமி மற்றும் நெல்தூற்றுதல்
Ans : 1 – ஈ – ஈ, 2 – உ – உ, 3 – அ – இ, 4 – இ – அ, 5 – ஆ – ஆ 

VI. குறுவினா

1. பருப்பாெருள் வரையறு.

பருப்பொருள் என்பது நிலை உடையது மற்றும் இடத்தை அடைத்துக் கொள்கிறது.

2. சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி, தூசு பாேன்ற நுண்ணிய மாசுப் பாெருட்கள் எவ்வாறு நீக்கப்படுகிறது?

சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசுப் பொருட்கள் தெளியவைத்து இறுத்தல் மூலம் நீக்கப்படுகிறது.

3. கலவைகளை நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும்?

கலவைகளில் உள்ள மாசுக்களையும் தீங்கு விளைவிக்கும் பகுதிப் பொருட்களையும் நீக்குதல்

(எ.கா) அரிசியில் உள்ள கற்களை நீக்குதல்.

பயனளிக்கும் ஒரு பகுதிப் பொருளினை அதன் மற்ற பகுதிப் பொருட்களில் இருந்து தெனித்தெடுத்தல்

(எ.கா) பெட்ரோலியத்தில் இருந்து பெட்ரோல் பெறுதல்.

ஒரு பொருளை மிகுந்த தூய நிலையில் பெறுதல்

(எ.கா) தங்கச் சுரங் கத்தில் இருந்து தங்கம் பெறுதல்.

4. கலவைக்கு ஒரு எடுத்துக்காட்டினைக் கூறி அது எவ்வாறு கலவை என்று அழைக்கப்படுகிறது. என்பதைக் காரணத்துடன் நியாயப்படுத்தவும்.

காற்று ஒரு கலவை. ஏனெனில் காற்றில் உயிர்வளி, நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு, நீராவி, மந்தவாயுக்கள் போன்றவை கலந்து காணப்படுகிறது.

5. படிய வைத்தல் : வரையறு.

ஒரு கலவை கனமான பொருட்கள் இருப்பின் அவற்றைச் சிறிது நேரம் அசையாமல் வைக்கும் பொழுது எடை அதிகமான பொருட்கள் வண்டலாகத் தங்கி, மேலடுக்கில் தெளிந்த நீரமம் கிடைக்கும். இம்முறைக்கு படியவைத்தல் என்று பெயர்.

6. தூய்மைப் பாெருளுக்கும் தூய்மையற்ற பாெருளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளைக் கூறுக.

தூய்மைப் பாெருள்தூய்மையற்ற பாெருள்
1. ஒரு தூய பொருள் என்பது ஒரே தன்மையான துகள்களால் மட்டுமே ஆனதுஒரு தூய்மையான பொருள் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான துகள்களை கொண்ட தூய்மையற்ற பொருளாகும்.
2. தூய பொருள்கள் தனிமங்களாவோ அல்லது சேர்மங்களாகேவா இருக்கலாம்.கலவையின் பகுதிப் பொருட்கள் எந்த விகிதத்திலும் கலக்கப்பட்டு இருக்கும்.

VI. சிறுவினா

1. இரப்பர் பந்தை அழுத்தும் பாேது வடிவம் மாறுகிறது? அதை திண்மம் என அழைக்கலமா?

ஆம். ரப்பர் பந்து ஒரு திண்மம் ஆகும். ரப்பர் பந்திற்குள் காற்று நிரம்பியிருக்கும். நம்மால் அதை அழுத்த முடியும். அவ்வாறு அழுத்தும்போது அதில் உள்ள காற்று வெளியேறுகிறது.

2. வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை ஏன்?

வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஏனெனில் வாயுக்களில் உள்ள மூலக்கூறுகளுக்கு இடையே அதிக இடைவெளி காணப்படும். எனேவ அவை கலன் முழுவதும் பரவிக் காணப்படும்.

3. பாலில் இருந்து பாலாடைக் கட்டியை எம்முறையில் பெறுவாய்? விளக்கவும்.

பாலில் இருந்து பாலாடைக் கட்டியை வடிகட்டுதல் முறையில் பிரித்தெடுக்கலாம்.

4. பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றை எவ்வாறு நீக்குவாய்?

பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றை தூற்றுதல் முறை மூலம் நீக்கலாம்

5. உணவுக் கலப்படம் என்றால் என்ன?

கலப்படம் என்பது ஒத்த வடிவம் உடைய, தரம் குறைந்த பொருளை கலந்து ஒரு முதன்மைப் பொருளினைத் தூய்மையற்றதாக மாற்றுவது.

6. ஒரு வெப்பமான காேடை நாளில் வீட்டிற்கு திரும்பிய திரு. ரகு மாேர் பருக விரும்பினார். திருமதி. ரகுவிடம் தயிர் மட்டுமே இருந்தது. அவர் எவ்வாறு தயிரிலிருந்து மாேரைப் பெறுவார்? விளக்கவும்.

ரகு தயிரிலிருந்து மோரைப் பெறுவற்கு கடைதல் என்ற முறையைப் பயன்படுத்தலாம்.

சில பயனுள்ள பக்கங்கள்