Tamil Nadu 6th Standard Tamil Book Term 3 பாரதம் அன்றைய நாற்றங்கால் Solution | Lesson 1.1

பாடம் 1.1. பாரதம் அன்றைய நாற்றங்கால்

நூல் வெளி

தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.

கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.

புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.

இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

I. சொல்லும் பாெருளும்

  • மெய்- உண்மை
  • தேசம் – நாடு

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

  1. திருவாசகம்
  2. திருக்குறள்
  3. திரிகடுகம்
  4. திருப்பாவை

விடை : திருக்குறள்

2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்

  1. காவிரிக்கரை
  2. கங்கைக்கரை
  3. கங்கைக்கரை
  4. யமுனைக்கரை

விடை : காவிரிக்கரை

3. கலைக்கூடமாகக் காட்சி தருவது

  1. சிற்பக்கூடம்
  2. ஓவியக்கூடம்
  3. பள்ளிக்கூடம்
  4. சிறைக்கூடம்

விடை : சிற்பக்கூடம்

4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நூல் + ஆடை
  2. நூலா + டை
  3. நூல் + லாடை
  4. நூலா + ஆட

விடை : நூல் +ஆடை

5. எதிர் + ஒலிக்க என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. எதிரலிக்க
  2. எதிர்ஒலிக்க
  3. எதிரொலிக்க
  4. எதிர்ரொலிக்க

விடை : எதிரொலிக்க

III. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகை, மோனைச் சாெற்களை எடுத்து எழுதுக

மோனைச் சாெற்கள்

  • புதுமைகள் – பூமியின்
  • காளிதாசனின் –  காவிரிக் கரையில்
  • புல்வெளி – புன்னகை
  • ன்னை – ன்னிய
  • ல்லை – ட்டி
  • ண்ணல் – றத்தின்

எதுகைச் சாெற்கள்

  • மெய்களைப் – மெய்யுணர்வு
  • ன்னை – அன்னிய

IV. குறுவினா

1. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்று கவிஞர்களின் பெயர்களை குறிப்பிடுக

திருவள்ளுவர், காளிதாசர், கம்பர் ஆகியோர் தாராபாரதியின் பாடலில் இடம் பெற்றள்ள கவிஞர்கள் ஆவார்கள்

2. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைநத்து கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.

மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகும் ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலப்பதை “மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்கு கரையில் நலம் கேட்கும்!” என்று காட்சிப்படுத்துகிறார் கவிஞர்

V. சிறுவினா

தாராபாரதி பாடலின் கருத்தைச் சுருக்கி எழுதுக.

பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு.

திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது.

காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

குமரி முனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தாெடுக்கப்படுகின்றன. மேற்கே தாேன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.

புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது.

அறத்தின்  ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

கூடுதல் வினாக்கள்

I. பொருள் கூறுக

  1. மெய் – உண்மை
  2. தேசம் – நாடு
  3. அமுதம் – அமிர்தம்
  4. கோல் – கம்பு
  5. அமுதசுரபி – எடுக்க எடுக்க குறையாமல் உணவு தரும் கலன்

II. பிரித்து எழுதுக

  1. தேசமிது = தேசம் + இது
  2. வாசலிது =  வாசல் + இது
  3. மேலாடை = மேல் + ஆடை
  4. மெய்யுணர்வு = மெய் + உணர்வு
  5. பூக்காடு = பூ + காடு
  6. அமுதக்கவிதை = அமுதம் + கவிதை
  7. வாசலிது = வாசல் + இது
  8. கைத்தடி = கை + தடி
  9. கலைக்கூடம் = கலை + கூடம்
  10. இசையமைக்க = இசை + அமைக்க

III. எதிர்ச்சொல்

  1. மெய் x பொய்
  2. பழமை x புதுமை
  3. அமுதம் x நஞ்சு

IV. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இராதாகிருஷ்ணன் எனும் இயற்பெயர் கொண்டவர்

  1. கவிமணி
  2. சுரதா
  3. தாராபாரதி
  4. வாணிதாசன்

விடை : தாராபாரதி

2. கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்ற கவிஞர்

  1. பெருஞ்சித்திரனார்
  2. தேவநேயப்பாவணர்
  3. வாணிதாசன்
  4. தாராபாரதி

விடை : தாராபாரதி

3. தாராபாரதியின் படைப்புகளில் பொருந்தாதது?

  1. புதிய விடியல்கள்
  2. மலரும் மாலையும்
  3. இது எங்கள் கிழக்கு
  4. விரல் நுனி வெளிச்சங்கள்

விடை : மலரும் மாலையும்

4. பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடல் வரிகளை எழுதியவர்  யார்?

  1. தாராபாரதி
  2. பாரதிதாசன்
  3. பாரதியார்
  4. சுப்பிரமணிய பாரதி

விடை : தாராபாரதி

V. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக ________ திகழ்கின்றது.

விடை: பாரத நாடு

2. பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடல் ________ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

விடை: தாராபாரதியின் கவிதைகள்

3. பூமியின் கிழக்கு வாசலாக திகழ்வது ________

விடை: இந்திய நாடு

4. குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் _______ தொடுக்கப்படுகின்றன.

விடை: மாலையாகத்

VI. குறுவினா

1. தாராபாரதியின் நூல்கள் யாவை?

புதிய விடில்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள்

2. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழ்வது எது?

பூமியின் கிழக்கு வாசலாகத் திகழ்வது நமது இந்திய நாடு

3. நம்நாடு அணிந்திருக்கும் ஆடை எது?

திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது.

4. கங்கை மற்றும் காவிரி வரை உள்ளவை எவை?

காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

5. அன்னை பாரத நாடு எவ்வாறு திகழ்கின்றது என தாராபாரதி கூறுகிறார்?

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாகவும், பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கியும் வருகின்றது என தாராபாரதி கூறுகிறார்.

7. எது அறத்தின் ஊன்றுகோலாக விளங்குகின்றது?

அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

8. தாராபாரதி பற்றிய குறிப்பு வரைக

  • தாராபாரதியின் இயற்பெயர் இராதா கிருஷ்ணன்
  • கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்
  • புதிய விடில்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்

 

சில பயனுள்ள பக்கங்கள்