8th Std Science Term 1 Solution in Tamil | Lesson.6 நுண்ணுயிரிகள்

பாடம்.6 நுண்ணுயிரிகள்

நுண்ணுயிரிகள் Book Back Solution

பாடம்.6 நுண்ணுயிரிகள்

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

1. நுண்ணுயிரிகள்————ஆல் அளவிடப்படுகின்றன.

  1. செமீ
  2. மிமீ
  3. மைக்ரான்
  4. மீட்டர்

விடை : மைக்ரான்

2. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை ———–

  1. புரோட்டோசோவா
  2. வைரஸ்
  3. பாக்டீரியா
  4. பூஞ்சை

விடை : வைரஸ்

3. ——————– ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.

  1. வைரஸ்
  2. ஆல்கா
  3. பூஞ்சை
  4. பாக்டீரியா

விடை : பாக்டீரியா

4. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் —————- பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

விடை : 4

5. ஆல்காவின் தாவர உடலம் ———– என அழைக்கப்படுகிறது.

  1. தண்டு
  2. தாலஸ்
  3. இலை
  4. வேர்

விடை : தாலஸ்

II கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. —————– பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது.

விடை : பெனிசிலியம் கிரைசோ ஜீனம்

2. ————— என்பவை நோய்த் தொற்றுடைய புரதத் துகள்களாகும்.

விடை : பிரியான்

3. செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் ——————— எனப்படுகின்றன.

விடை : விரியான்

4. நுண்ணுயிரிகளை ————— ன் உதவியுடன் காண முடியும்.

விடை : நுண்ணோக்கியன்

5. பாக்டீரியாவின் ஒரு முனையில்  கசையிழைகள் பெற்றவை ——— ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

விடை : ஒரு முனை கற்றைக் கசையிழை

IV. பொருத்துக

1. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாதடுப்பூசி
2. காசநோய்பிரியான்
3. குருலேக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்
4. புரோபயாட்டிக்ஸ்பாக்டீரியா
5. எட்வர்ட் ஜென்னர்ரைசோபியம்
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

IV. சரியா? தவறா?

1. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.

விடை : சரி

2. பெண் அனோபிலஸ் கொசுக்கள் டெங்கு வைரஸை எடுத்துச் செல்கின்றன.

விடை : தவறு

சரியான கூற்று : பெண் அனோபிலஸ் கொசுக்கள் பிளாஸ்மோபயம் என்ற நுண்ணுயிரியை எடுத்துச் செல்கின்றன.

3. சின்னம்மை தொற்று நோயாகும்.

விடை : சரி

4. சிட்ரஸ் கேன்கர் பூச்சிகளால் பரவுகிறது.

விடை : தவறு

சரியான கூற்று : சிட்ரஸ் கேன்கர் காற்று / நீர்  மூலம் பரவுகிறது.

5. ஈஸ்ட் அதிக அளவில் ஆல்கஹாலை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

விடை : சரி

V கூற்று மற்றும் காரணம்.

கீழ்க்காணும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிப்பிடவும்.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
  3. கூற்று சரி. காரணம் தவறு.
  4. கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

1. கூற்று : மலேரியா புரோட்டோசோவாவினால் உண்டாகிறது.

காரணம் : இந்நோய் கொசுவினால் பரவுகிறது.

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று : ஆல்காக்கள் பிறசார்பு உயிரிகளாகும்.

காரணம் : அவை பச்சையத்தை பெற்றிருப்பதில்லை.

விடை : கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

VI மிகக் குறுகிய வினா.

1. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.

  • ரைசோபியம்
  • சயனோ பாக்டீரியா
  • நாஸ்டாக்

2. வினிகர் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.

அசிட்டோபாக்டர் வினிகர் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியாவாகும்

3. ஏதாவது மூன்று புரோட்டோசோவாக்களின் பெயர்களை எழுதுக.

  • எண்டமீபா ஹிஸ்டாலைடிகா
  • பிளாஸ்மோடியம்
  • டிரிபனோசோமோ

4. பெனிசிலியத்தைக் கண்டறிந்தவர் யார்?

சர். அலெக்ஸாண்டர் பிளம்மிங பெனிசிலியத்தைக் கண்டறிந்தவர் ஆவார்

5. தடுப்பூசி போடுவதன் மூலம் எந்த நோயைத் தடுக்கலாம்?

  • தட்டம்மை
  • பொன்னுக்கு வீங்கி
  • ரூபெல்லா
  • காசநோய்

VII குறுகிய வினா.

1. வடிவத்தின் அடிப்படையில் நான்கு வகையான பாக்டீரியாக்களின் பெயர்களை எழுதுக.

  • பேசில்லை – கோல் வடிவ பாக்டீரியா
  • ஸ்பைரில்லா – சுருள் வடிவ பாக்டீரியா
  • காக்கை – கோள அல்லது பந்து வடிவ பாக்டீரியா
  • விப்ரியோ – கமா வடிவ பாக்டீரியா

2. எதிர்உயிர்க்கொல்லி என்றால் என்ன?

‘ஆன்டி’ என்ற வார்த்தை ‘எதிராக’ என்ற உயிருடன் உள்ள உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன பொருள்படும். எதிர்உயிர்க்கொல்லி பொருள்கள் உயிருடன் உள்ள உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன.

எ.கா. பெனிசிலின், ஸ்ட்ரெப்டோமைசின்

3. நோய்க்கிருமிகள் என்றால் என்ன?

மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிரமிகள் என்றழைக்ப்படுகின்றன

எ.கா. பாக்டீரியா. வைரஸ். புரோட்டோசோவா, ஆல்கா, பூஞ்சை

4. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் மனிதரில் எவ்வாறு நுழைகின்றன?

  • நோய்க்கிருமிகள் உடலுக்குள் தோல், வாய் அல்லது மூக்கின் வழியாக உள்ளே நுழைந்து நோய்களை ஏற்படுத்துகின்றன.
  • வைரஸினால் உண்டாகும் ‘ஃப்ளூ’ காய்ச்சல் காற்றின் மூலம் பரவுகிறது.
  • நோயாளிகள் தும்மும்போது தெறிக்கும் திவலைகளில் உள்ள வைரஸ்கள் காற்றில் பரவி நலமான ஒருவரின் சுவாசத்தின் போது உள் நுழைகின்றன.

5. விவசாயத்தில் நுண்ணுயிரிகள் அத்தியாவசியமானவை ஏன்?

இயற்கை உரம்

  • நுண்ணுயிரிகள் கழிவுகளை மட்கச் செய்வதால், சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
  • இந்நிகழ்வின் போது, நைட்ரேட்டுகள் மற்றும் கனிம ஊட்டப்பொருள்கள் மட்கும் கழிவுகளிலிருந்து வெளியேறி, மண்ணை வளமுடையதாக்குகின்றன.
  • இந்த உரம் இயற்கை உரம் என அழைக்கப்படுகிறது.

நைட்ரஜன் நிலைநிறுத்தம்:

  • பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் பாக்டீரியங்கள், வளிமண்டல நைட்ரஜனை நைட்ரேட்டுகளாக மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை வளப்படுத்துகின்றன.
  • இது தாவரங்களின் வளர்ச்சிக்குத் அத்தியாவசியமானதாகும்.
  • மண்ணில் தனித்து வாழும் பாக்டீரியங்களான, சயனோ பாக்டீரியா, நாஸ்டாக் போன்றவையும் உயிரியல் முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன

உயிரியகட்டுப்பாட்டு காரணிகள்:

பயிர்களுக்கு தீங்குயிரிகளிடமிருந்து பாதுகாப்பளிப்பதில் நுண்ணுயிரிகள் உதவுகின்றன.

  • பேசில்லஸ் துரின்ஞியன்ஸிஸ் (Bt பஞ்சு) பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  • டிரைக்கோடெர்மா (பூஞ்சை) வேர்களுக்குப் பாதுகாப்பளித்து, தாவரங்களில் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  • பாக்குலோ வைரஸ்கள் (வைரஸ்) பூச்சிகள், மற்ற கணுக்காலிகளைத் தாக்குகின்றன.

VIII நெடு வினா.

1. பாக்டீரியா மற்றும் அதன் அமைப்பினைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  • பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான புரோகேரியோட்டுகள் (உட்கரு அற்றவை) ஆகும்.
  • இவை பூமியில் முதன் முதலில் தோன்றிய வாழும் உயிரினமாகக் கருதப்படுகிகின்றன.
  • வகைப்பாட்டியலில் மொனிரா என்னும் உலகத்தின் கீழ் இது இடம் பெற்றுள்ளது.
  • பாக்டீரியாவைப் பற்றிய படிப்பு ‘பாக்டீரியாலஜி’ எனப்படுகிறது.
  • பாக்டீரியா 1µm முதல் 5 µm (மைக்ரோமீட்டர்) அளவுடையது.
  • இவை இரண்டு வகைப்படும்,
    1. காற்று சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது)
    2. காற்றில்லா சுவாச பாக்டீரியா ( சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை)

செல் அமைப்பு

  • பாக்டீரியாவின் வெளி அடுக்கு செல் சுவரினால் ஆனது.
  • உட்கரு பொருள்கள் நியூக்ளியாய்டு எனக் குறிப்பிடப்படுகின்றன.
  • இவற்றில் உட்கரு சவ்வு காணப்படுவதில்லை.
  • சைட்டோபிளாசத்தில் கூடுதலாகக் காணப்படும் குரோமோசோமல் டி.என்.ஏக்கள் பிளாஸ்மிட் என  ழைக்கப்படுகின்றன.
  • புரதச் சேர்க்கையானது 70 S வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது.
  • சவ்வினால் மற்ற சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் (மைட்டோகாண்ட்ரியா, கோல்கை உடலம், எண்டோபிளாச வலைப்பின்னல்) காணப்படுவதில்லை.
  • கசையிழையினால் இடப்பெயர்ச்சி நடைபெறுகின்றது

2. மருத்துவத் துறையில் நுண்ணுயிரிகள் எவ்வாறு பயன்படுகின்றன?

எதிர்உயிர்க்கொல்லிகள் (ஆன்டிபயாட்டிக்)

  • ‘ஆன்டி’ என்ற வார்த்தை ‘எதிராக’ என்ற பொருள்படும். எதிர்உயிர்க்கொல்லி பொருள்கள் உயிருடன் உள்ள உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன.
  • இது மற்ற உயிரினங்களுக்கு நச்சாக உள்ளது.
  • முதன் முதலில் எதிர்உயிர்க்கொல்லி மருந்தான பெனிசிலின் சர். அலெக்ஸாண்டர் பிளம்மிங் என்பவரால் 1928 – இல் கண்டறியப்பட்டது.
  • எதிர் உயிர்க்கொல்லியான பெனிசிலின், பெனிசிலியம் கிரைசோஜீனம் என்ற பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது.
  • இது டெட்டனஸ், டிப்தீரியா போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. ஸ்ட்ரெப்டோமைசின் எனும் எதிர்உயிர்க்கொல்லி ஸ்ரெப்டோமைசிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்படுகிறது.
  • இது பல்வேறுபட்ட பாக்டீரித் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. எ.கா. பிளேக்.

2. தடுப்பூசிகள்

  • தடுப்பூசிகள் இறந்து போன அல்லது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன .
  • எட்வர்ட் ஜென்னர், முதன் முதலில் பெரியம்மைக்கான தடுப்பூசியினைக் கண்டறிந்தார். வாக்சினேஷன் என்ற சொல் இவரால் சூட்டப்பட்டது.
  • நோயாளியின் உடலில் இத்தடுப்பூசியானது செலுத்தப்படும் போது, உடலிலிருந்து நோய் எதிர்ப்பொருள்கள் (ஆன்டிபாடிகள்) உற்பத்தியாகி நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போரிடுகின்றன.
  • இந்த நோய் எதிர்ப்பொருள்கள் உடலிலேயே தங்கியிருந்து, எதிர்காலத்தில் அக்குறிப்பிட்ட நோய்க்கிருமிகளின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. எனவே வாக்சினேஷன் நோய்த்தடுப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
  • எ.கா. தட்டம்மைக்கான MMR தடுப்பூசி, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, காசநோய்க்கான BCG தடுப்பூச

3. நுண்ணுயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

மனிதரில் ஏற்படும் நோய்கள்நோயுண்டாக்கும்
நுண்ணுயிரி
பரவும் முறை அறிகுறிகள்தடுப்பு முறைகள்/சிகிச்சை
1. காசநோய்
(டியூபர்குளோசிஸ்)
மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (பாக்டீரியா)காற்றின் மூலமும்,
நோய்த் தொற்றுடைய மனிதனின் சளி மூலமும்
தொடர்ச்சியா இருமல், இரத்தத்துடன் கூடிய சளி, எடை இழப்பு, மூச்சுத் திணறலBCG தடுப்பூசி
காலரா
விப்ரியோ காலரா (பாக்டீரியா)ஈக்களின் மூலமும், அசுத்தமான
உணவு மற்றும் நீரின் மூலமும்
நீர்த்த வயிற்றுப் போக்கு, வாந்தி, விரைவான நீர் இழப்புகாலராவுக்கு எதிரான தடுப்பூசி, தன் சுகாதாரம
சாதாரண சளிஇன்புளூயன்சா
வைரஸ
காற்றின் மூலம்

 

சளி ஒழுகுதல், தும்முதல்நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல்
ரேபிஸ்
ரேப்டோ விரிடி (வைரஸ்)விலங்குகள் கடிப்பதனால்
காய்ச்சல், மாயத்தோற்றம்,பக்கவாதம், உணவை விழுங்க இயலாமைரேபிஸ்க்கு
எதிரான தடுப்பூசி
அமீபிக் சீதபேதிஎண்டமீபா ஹிஸ்டாலைடிகா (புரோட்டோசோவா) உணவு, நீர் மற்றும் ஈக்கள்

 

கடுமையான வயிற்றுப் போக்கு, இரத்தத்துடன்
கூடிய மலம்
முறையான துப்புரவினை பராமரித்தல் மற்றும் மெட்ரோனிடையசோல் எதிர் உயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்த அறிவுறுத்துதல்
மலேரியாபிளாஸ்மோடியம் (புரோட்டோசோவா)பெண் அனோபிலஸ் கொசுகுமட்டல், வாந்தி, கடும் காய்ச்சல்

 

மலேரியாவிற்கு எதிரான குயினைன், குளோரோகுயின் மருந்துகளை  டுத்துக் கொள்ளுதல். மேலும் கொசு வெறுக்கும் களிம்புகள் (விலக்கிகள்), கொசு வலைகளைப் பயன்படுத்துதல்

4. மனிதரில் நன்மை தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை நாம் எவ்வாறு மேம்படுத்தலாம்?

  • லேக்டோ பேசில்லஸ் பாக்டீயத்தினால் பாலில் உள்ள லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாறுகிறது. அதனால் பால் கெட்டியாகிறது (தயிர்). இது புளிப்புச் சுவையைத் தருகிறது.
  • தயிரைப் பதப்படுத்தும் போது பன்னீர் கிடைக்கிறது.
  • ம னி த னி ன் குடலில் வாழும் லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ் எனும் பாக்டீரியா உணவு செரிமானத்தில் உதவுகிறது. மேலும் தீங்கு தரும் நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
  • மனிதனின் குடலில் வாழும் எ.கோலை பாக்டீரியம் வைட்டமின் K மற்றும் வைட்டமின் B கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் உதவுகிறது.

5. புரோபயாட்டிக் பற்றிய சிறுகுறிப்பு வரைக.

தயிர் மற்றும் பிற நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட பால் பொருள்களில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் உயிருள்ள உணவுப் பொருள்கள் புரோபயாட்டிக்குகள் ஆகும்.

எ.கா. லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ் மற்றும் பைபிடோபாக்டீரியம் பைபிடம். இந்த பாக்டீரியங்கள் குடல் பகுதியிலுள்ள நன்மை செய்யும் பலவகையான நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

இதனால் பின்வரும் விளைவுகளில் பங்கேற்கின்றன.

  • குடல் புற்றுநோய் ஆபத்தினைக் குறைக்கின்றன.
  • கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைக் குறைக்கின்றன.
  • நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதனால் வயிற்றுப் போக்கு நோய்களைத் தடுக்கின்றன.

 

பயனுள்ள பக்கங்கள்