Tamil Nadu 9th Standard Tamil Book Term 3 பொருளிலக்கணம் Solution | Lesson 1.5

பாடம் 1.5. பொருளிலக்கணம்

பலவுள் தெரிக

1. வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.

  1. சிலம்பு, மேகலை, குழை, கடகம்
  2. நோம்பு, நீராடல், திருநாள், விழா
  3. ஊசல், கழங்காடல், ஓரையா்ல், அம்மானை
  4. கூத்து, பாடினி, இசை, சிற்பம்

விடை : கூத்து, பாடினி, இசை, சிற்பம்

கூடுதல் வினாக்கள்

I. குறு வினா

1. பொருளிலக்கணம் எத்தனை வகைப்பபடும்?

பொருளிலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என இருவகைப்படும்

2. அகப்பொருள் என்றால் என்ன?

தலைவனுக்கும், தலைவிக்கும் இடையில் உள்ள அன்பையும், வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவதே அகப்பொருள் ஆகும்.

3. புறப்பொருள் என்றால் என்ன?

அகம் சாராத அறம், பொருள், வீடு, கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியவற்றைப் பற்றிக் கூறுவது புறப்பொருள் ஆகும்

4. அகத்திணை என எதனை கூறுவர்?

அகப்பொருள் ஒழுக்கத்தைப் பற்றி கூறும் இலக்கணம் அகத்திணை என கூறுவர்.

5. புறத்திணை என எதனை கூறுவர்?

புறப்பொருள் ஒழுக்கத்தைப் பற்றி கூறும் இலக்கணம் புறத்திணை என கூறுவர்.

II. சிறு வினா

1. புறம் – புரம் என்பதன் பொருள் வேறுபாடு கூறு

புறம் (வெளியே)

  • புறத்தோற்றம், புறநகர்

புறம் (பக்கம்)

  • உட்புறம், வெளிப்புறம், வலப்புறம், மேற்புறம்

புரம் (நகரம்)

  • காஞ்சிபுரம், விழுப்புரம்

2. தொல்காப்பியர் காட்டும் அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?

  • கைக்கிளை
  • குறிஞ்சி
  • முல்லை
  • மருதல்
  • நெய்தல்
  • பாலை
  • பெருந்திணை என ஏழு வகைப்படும்.

3. புறப்பொருள் வெண்பாமாலை கூறும் புறத்திணை வகைகளை கூறு

  • வெட்சி
  • கரந்தை
  • வஞ்சி
  • காஞ்சி
  • நொச்சி
  • உழிஞை
  • தும்பை
  • வாகை
  • பாடாண்
  • பொதுவியில்
  • கைக்கிளை
  • பெருந்திணை

III. நெடு வினா

1. ஐவகை நிலங்களையும் அதன் விளக்கங்களையும் கூறுக

  • குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும்.
  • முல்லை – காடும் காடு சார்ந்த இடமும் முல்லை ஆகும்.
  • மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும்.
  • நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும்
  • பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை ஆகும்.

2. ஐவகை திணைகளையும் அதற்குரிய ஒழுக்கங்களையும் விவரிக்க

குறிஞ்சித் திணை:-

தலைவனும், தலைவியும் உள்ளத்தால் இணைவது குறிஞ்சித் திணை.

முல்லைத் திணை:-

தலைவன் வருகைக்காக தலைவி காத்திருத்தல் முல்லைத் திணை.

மருதத் திணை:-

தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் சிறுபிணக்காகிய ஊடல் மருதத் திணை.

நெய்தல் திணை:-

கடலுக்குச் சென்ற தலைவன் உரிய பொழுதில் திரும்பாததற்கு தலைவி வருந்தியிருத்தல் நெய்தல் திணை.

பாலைத் திணை:-

தலைவன், தலைவியை விட்டு பிரிதல் பாலைத் திணை.

3. புறத்திணை வகைகளின் விளக்கங்களையும் அதன் துறை எண்ணிக்கைகளையும் விவரிக்க

வெட்சித் திணை:-

  • மன்னரின் ஆணைப்படி, வீரர்கள் பகை நாட்டு ஆவின் கூட்டங்களை கவர்தலும், கவர்ந்தவற்றை மீட்டலும்.
  • 14 துறைகளை உடையது.

வஞ்சித் திணை:-

  • மண்ணாசைக் கொண்டு அரசன் போர் தொடுத்தலும், மண்ணாசையுடன் வரும் பகையரசனோடு எதிர் நின்று போரிடுதலும்.
  • 13 துறைகளை உடையது.

உழிஞைத் திணை:-

  • பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும், கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன் கோட்டையக் காத்தலும்.
  • 8 துறைகளை உடையது.

தும்பைத் திணை:-

  • தனது வலிமையை நம்பிப் போரிட வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன் போரிடுதல்.
  • 12 துறைகளை உடையது.

வாகைத் திணை:-

  • போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் மற்றவரிலிருந்து மேம்பாடு மிக்கவராகத் தனித்து நிற்றல்.
  • 18 துறைகளை உடையது.

காஞ்சித் திணை:-

  • நிலையாமையை உணர்த்துவது சிறப்புடைய வீட்டின்பம் காரணமாக, பலவழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய நல்ல நெறியினை மேற்கொள்ளுதல்.
  • 20 துறைகளை உடையது.

வாகைத் திணை:-

  • ஒருவர் பெற்ற கல்வி, புகழ், ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல்.
  • 20 துறைகளை உடையது.

கற்பவை கற்றபின்…

I. பாடலில் காணப்படும் நிலம், கருப்பாெருள் ஆகியன பற்றி எழுதுக

நெறிமருப்பு எருமையின் ஒருத்தல் நீள்இனம்
நெறிமருப்பு ஏற்றினம் சிவம்பப் பண் உறீஇப்
பாெறிவரி வராலினம் இரியப் புக்குடன்
தவறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே.

பாடலில் காணப்படும் நிலம்:-

மருதம்

பாடலில் காணப்படும் கருப்பாெருள்கள்:-

எருமை, ஏறு, வரால் (விலங்குகள்), உழுநர் (மக்கள்)

II. பாெருத்துக

1. உழிஞைஅ. எதிர் நின்று பாேரிடுதல்
2. வஞ்சிஆ. பசுக்கூட்டங்களைக் கவர்தலும் மீட்டலும்
3. பாடாண்இ. வலிமையை நம்பிப் பாேராடுதல்
4. தும்பைஈ. ஒருவரின் மேன்மைகளைப் பாடுதல்
5. வெட்சிஉ. பகை மன்னரின் காேட்டையை முற்றுகையிடல்
விடை : 1 – உ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ

III. தொல்காப்பியம் கூறும் புறத்திணைகளையும் ஒழுக்கங்களையும் அட்டவணைப்படுத்துக

வெட்சித் திணை:-

மன்னரின் ஆணைப்படி, வீரர்கள் பகை நாட்டு ஆவின் கூட்டங்களை கவர்தலும், கவர்ந்தவற்றை மீட்டலும்.

வஞ்சித் திணை:-

மண்ணாசைக் கொண்டு அரசன் போர் தொடுத்தலும், மண்ணாசையுடன் வரும் பகையரசனோடு எதிர் நின்று போரிடுதலும்.

உழிஞைத் திணை:-

பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும், கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன் கோட்டையக் காத்தலும்.

தும்பைத் திணை:-

தனது வலிமையை நம்பிப் போரிட வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன் போரிடுதல்.

வாகைத் திணை:-

போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் மற்றவரிலிருந்து மேம்பாடு மிக்கவராகத் தனித்து நிற்றல்.

காஞ்சித் திணை:-

நிலையாமையை உணர்த்துவது சிறப்புடைய வீட்டின்பம் காரணமாக, பலவழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய நல்ல நெறியினை மேற்கொள்ளுதல்.

பாடாண் திணை:-

ஒருவர் பெற்ற கல்வி, புகழ், ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல்.

IV. ஓவியங்கள் உணர்த்தும் புறத்திணைகளை கண்டறிக

வெட்சித் திணைஉழிஞைத் திணை
காஞ்சித் திணைபாடாண் திணை

மாெழியை ஆள்வாேம்

I. பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு சொற்றொடரை விரிவாக்குக

புத்தகம் படிக்கலாம் (நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)

  1. நல்ல புத்தகம் படிக்கலாம்
  2. நல்ல புத்தகம் ஆழ்ந்து படிக்கலாம்
  3. நல்ல புத்தகம் நாளும் படிக்கலாம்
  4. நல்ல புத்தகம் மகிழ்ந்து படிக்கலாம்
  5. நல்ல புத்தகம் உணர்ந்து படிக்கலாம்
  6. நல்ல புத்தகம் தேர்ந்து படிக்கலாம்

விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவரும்)

  1. ஓடியாடி விளையாடுவது நன்று
  2. மாலையில் விளையாடுவது நன்று
  3. சேர்ந்து விளையாடுவது நன்று
  4. திடலில் விளையாடுவது நன்று
  5. அனைவரும் விளையாடுவது நன்று

II. பிழை நீக்குக

பெறுந்தலைவர் காமராசர் பள்ளி படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழகலை நாள்தோறும் படித்தது. எப்போதும அரையை விட்டு வெளியே  சென்றாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளை தாமே எடுத்து வைத்துக் கொள்வார்.

விடை :-

பெருந்தலைவர் காமராஜர் பள்ளி படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது. எப்போதும அறையை விட்டு வெளியே சென்றாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளை தாமே எடுத்து வைத்துக் கொள்வார்.

III. புதிர் அவிழ்க்க

நான்கெழுத்துக்காரன். முதல் இரண்டும் அம்மாவில் “மா தொலைத்து நிற்கும். அடுத்து எழுத்தைச் சேர்த்தால் வில்லின் துணைவன். கடை இரண்டும் கணக்கில் “இது” என்பர் முழுதாய் பார்த்தால மேகத்திடை தெரிவான் அவன் யார்?

விடை : அம்புலி

IV. அகராதியில் காண்க

1. ஈகை

  • கொடை, உதவி

2. குறும்பு

  • சேட்டை, விளையாட்டு செயல்

3. கோன்

  • அரசன், தலைவன்

4. புகல்

  • சொல், அடைக்கலம், தஞ்கம்

5. மொய்ம்பு

  • வலிமை

V. பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க

(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை)

மானாமதுரை ஒரு அழகான பேரூர், நீண்ட வயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்வூரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவன் பேரொளி வீசிட, சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போரை பேரின்பம் அடையச் செய்கிறது.

VI. குறிப்புகளை கொண்டு மாவட்டத்தின் பெயரை கண்டுபிடிக்க

  1. தமிழக மாவட்டங்களுள் ஒன்று.
  2. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மாவட்டம்.
  3. வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் எனலாம்.
  4. தொடர்வண்டி நிலையத்தோடு இணைக்கப்பட்ட புகழ்வாய்ந்த கடற்கரை துறைமுகம் இங்குள்ளது.
  5. இந்தியாவிலேயே அதிகளவு பழுப்பு நிலக்கரி சுரங்கம் உடைய ஊரைக் கொண்ட மாவட்டம்.
  6. சுரபுன்னைக் காடுகளுடன் வடிய ஏரி இம்மாவட்டத்தின் சுற்றுலாத்தளம் ஆகும்.
  7. போர்த்துக்கீசியர்கள் வணிகம் நடத்திய பழமையான பரங்கிப்பேட்டை இங்குள்ளது.
  8. வாடிய பயிரைக் கண்டபோது வாடிய பசிப்பிணி மருத்துவர் பிறந்து வாழ்ந்த மாவட்டமும் இதுவே.
  9. பாடல் பெற்ற பழமையான பல கோவில்கள் நிறைந்த மாவட்டம்.
  10. இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி அல்லல்படும் மாவட்டம் எனில் மிகையில்லை.

விடை : கடலூர் மாவட்டம்

கலைச்சொல் அறிவோம்

  1. மறப்போர் – Wrestling
  2. இந்திய தேசிய இராணுவம் – Indian National Army
  3. செவ்வியல இலக்கியம் – Classical Literature
  4. நாட்டுப்புற இலக்கியம் – Folk literature

அறிவை விரிவு செய்

  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு. மேத்தா
  • தமிழ் பழமொழிகள் – கி.வா. ஜகந்நாதன்
  • இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) – செ.தமிழ்ச்செல்வன்

 

சில பயனுள்ள பக்கங்கள்