Tamil Nadu 11th Standard Tamil Book காவியம் Solution | Lesson 2.3 A

பாடம் 2.3. A காவியம்

11ஆம் வகுப்பு தமிழ், காவியம் பாட விடைகள் - 2022

கவிதைப்பேழை > 2.3. A காவியம்

நூல்வெளி

பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் இலங்கையில் பிறந்தவர்.

இவர் பானுச்சந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற புனைப்பெயரில் எழுதியவர்.

புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர்.

ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

இவரின் படைப்புகள்

  • சிறுகதை தொகுப்பு – லங்காபுரிராஜா
  • நாடகம் – நக்ஷத்திரவாசி
  • கட்டுரைத் தொகுப்பு – வெயிலும் நிழலும்

பலவுள் தெரிக

1. பிரமிள் என்ற புனைப்பெயர் கொண்டவர்

  1. முத்துலிங்கம்
  2. சிவராமலிங்கம்
  3. அழகிய பெரியவன்
  4. பால முரளி

விடை : சிவராமலிங்கம்

2. சிவராமலிங்கத்தின் புனைப்பெயர்களில் பொருந்தாததை கண்டறி

  1. பானுச்சந்திரன்
  2. பாலச்சந்திரன்
  3. அப்ரூசிவராம்
  4. தருமு சிவராம்

விடை : பாலச்சந்திரன்

3. சிவராமலிங்கத்தின் கவிதைகள் முழுமையாக ……………. என்னுமு் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன

  1. தருமு சிவராம் கவிதைகள்
  2. லங்காபுரி ராஜா
  3. வெயிலும் நிழலும்
  4. பிரமிள் கவிதைகள்

விடை : பிரமிள் கவிதைகள்

4. இறகு தொகுதியை …………… என்பர்

  1. பிரமிள்
  2. சிறகு
  3. இறக்கை
  4. புரவி

விடை : சிறகு

V. பொருத்துக

1. லங்காபுரி ராஜாஅ. கவிதைத்தொகுப்பு
2. நக்ஷத்திரவாசிஆ. கட்டுரைத்தொகுப்பு
3.வெயிலும் நிழலும்இ. நாடகம்
4. பிரமிள்ஈ. சிறுகதைத்தொகுப்பு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

 

சில பயனுள்ள பக்கங்கள்