6th Std Social Science Term 2 Solution | Lesson.3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

பாடம் 3. குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை பாட விடைகள்

பாடம். 3. குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

அருஞ்சால் விளக்கம்

  1. சமத்துவம் – Egalitarian
  2. மடாலயம் – Monastery
  3. ஆய்வுக்கட்டுரை – Treatise
  4. பேரச்சமும் நடுக்கமும் – Horror

சரியான விடையைத் தேர்தெடுக்கவும்:

1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

  1. அங்கம்
  2. மகதம்
  3. கோசலம்
  4. வஜ்ஜி

விடை: மகதம்

2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

  1. அஜாதசத்ரு
  2. பிந்து சாரா
  3. பத்மநாப நந்தா
  4. பிரிகத்ரதா

விடை: பிந்து சாரா

3. கீழ்க்காண்பவற்றில் எது மெளரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

  1. அர்த் சாஸ்திரம்
  2. இண்டிகா
  3. முத்ராராட்க்ஷம்
  4. இவையனைத்தும்

விடை: இவையனைத்தும்

4. சந்திரகுப்த மெளரியர் அரியணையைத் துறந்து _________என்னும் சமணத் துறவியோடு சரவணபெகோலாவுக்குச் சென்றார்.

  1. பத்ரபாகு
  2. ஸ்துலபாகு
  3. பார்ஸவநாதா
  4. ரிஷாநாதா

விடை: பத்ரபாகு

5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் __________

  1. டாலமி
  2. கெளடில்யர்
  3. ஜெர்சக்ஸ்
  4. மெகஸ்தனிஸ்

விடை: மெகஸ்தனிஸ்

6. மெளரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  1. சந்திர குப்த மொரியர்
  2. அசோகர்
  3. பிரிகத்ரதா
  4. பிந்துசாரர்

விடை: பிரிகத்ரதா

கூற்றைக் காரணத்துடன் பொருத்துக / சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கூற்று : அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.

காரணம் : தர்மத்தின் கொள்கையின்படி, அவர் ஆட்சி புரிந்தார்.

  1. கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  2. கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
  3. கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
  4. கூற்று தவறு; ஆனால் காரணம் சரி

விடை: கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.

2. கூற்று 1 : ஒட்டு மொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மெளரியர் ஆவார்.

கூற்று 2 : மெளரியரின் நிர்வாகம் பற்றிய செய்திககள அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.

  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1,2 ஆகிய இரண்டும்
  4. 1ம் இல்லை 2ம் இல்லை

விடை: 2 மட்டும்

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.

1. மகத்தின் முதல் அரசர் சந்திரகுப்தர் மெளரியர்

2. ராஜகிரிகம் மகத்தின் தலைநகராய் இருந்தது.

  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 மற்றும் 2
  4. 1 ம் இல்லை 2ம் இல்லை

விடை: 2 மட்டும்

4. கீழ்க்காண்பனவற்கைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.

  1. நந்தா – சிசுநாகா – ஹரியங்கா – மெளரியா
  2. நந்தா – சிசுநாகா – மெளரியா – ஹரியங்கா
  3. ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா
  4. சிசுநாகா – மெளரியா – நந்தா – ஹரியங்கா

விடை: ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா

5. கீழ்க்கண்டவற்றில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று.

1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்

2. அடர்ந்த காடுகள் மரங்ககளயும், யானைகளையும் வழங்கின.

3. கடலின் மீதான ஆதிக்கம்

4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்

  1. 1, 2 மற்றும் 3 மட்டும்
  2. 3 மற்றும் 4 மட்டும்
  3. 1, 2 மற்றும் 4 மட்டும்
  4. இவையனைத்தும்

விடை: 3 மற்றும் 4 மட்டும்.

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ________ மகத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.

விடை: ராஜகிரகம்

2.  முத்ராட்சசத்தை எழுதியவர் ________

விடை: விசாகதத்தர்

3. ________ பிந்துசாரரின் மகனாவார்.

விடை: அசோகர்

4. மெளரியப் பேரரசை தோற்றுவித்தவர் ________

விடை: சந்திரகுப்த மௌரியர்

5. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ________ பணியமர்த்தப்பட்டனர்.

விடை: தர்ம மகாமாத்திரர்கள்

சரியா? தவறா?

1. தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மெளரியருக்கு வழங்கப்பட்டது

விடை: தவறு

2. அசோகர் கலிங்கப்பாேரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்

விடை: தவறு

3. கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்

விடை: சரி

4. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப்பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்

விடை: தவறு

5. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன

விடை: சரி

பொருத்துக

1. கணாஅர்த்தசாஸ்திரம்
2. மெகஸ்தனிஸ்மதச் சுற்றுப்பயணம்
3. சாணக்கியாமக்கள்
4. தர்ம யாத்திரைஇண்டிகா
விடை : 1 – இ, 2 – ஈ, 3-அ, 4-ஆ

ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகனளக் குறிப்பிடவும்.

  1.  மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா
  2. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

2. ஸ்தூபி என்றால் என்ன?

ஸ்தூபியானது செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்காேள வடிவமுடைய குவிமாடம் பாேன்ற அமைப்பாகும். புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

3. மகத அரச வம்சங்களின் பெயர்கனளக் குறிப்பிடுக.

  • ஹரியங்கா வம்சம்
  • சிசுநாக வம்சம்
  • நந்த வம்சம்
  • மெளரிய வம்சம்

4. மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?

  • நிலங்களே அரசுக்கு வருவாயை ஈட்டித்தந்தது.
  • மொத்த விளைச்சலில் 1/6 பங்கு (பாகா) நிலவாரியாக வசூல் செய்யப்பட்டது.
  • காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள்
  • அரசுக்கு கூடுதல் வருவாயாக அமைந்தன.

5. நகரங்களின் நிர்வாகத்தில் நகரிகாவுக்கு உதவியவர் யார்?

நகர நிர்வாகம் நகரிகா என்னும் அதிகாரியின் கீழிருந்தது, அவருக்கு ஸ்தானிகா, காேபா எனும் அதிகாரிகள் உதவி செய்தனர்.

6. அசாேகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?

அசாேகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறை கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சாேழர், கேரளபுத்திரர் ஆகியாேரையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றன.

7. மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக?

மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல்.

கீழ்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

1. பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசாேகர் என்ன செய்தார்?

  • அசாேகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்த்தைப் பரப்புவதற்காக இல்ங்கைகக்கு அனுப்பி வைத்தார்.
  • தர்மத்தின் காெள்கைகளைப் பரப்புவதற்காக மேற்கு ஆசியா, எகிப்து, கிழக்கு ஐராேப்பா ஆகிய பகுதிகளுக்கு சமயப்பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • அசாேகர் தர்ம- மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.
  • பேரரசு முழுவதிலும் பௌத்த மதத்தைப் பரப்புவதே அவர்களுடைய பணியாகும்.
  • அசாேகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்த மாநாட்டைக் கூட்டினார்.

2. மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.

  • மகதம் கங்கைச் சமவெளியின் கீப்பகுதியில் அமைந்து இருந்தது. வளம் மிகுந் இந்தச் சமவெவளி வேளாண் விளைச்சலடி அதிகரித்தது. இது அரசுக்கு நிலையான, கணிசமான வருமானத்தை அளித்தது.
  • அடர்ந்த காடுகள் கட்டுமானங்களுக்குத் தேவையான ரகங்களையும் படைகளுக்குத் தேவையான யானைகளையும் வழங்கின.
  • அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் காெள்ளவும் அவர்களுக்கு உதவியது

உயர் சிந்தனை வினாக்கள்

1. கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?

  • கி.மு 261ல் அசோகர் கலிங்கத்தின் மீது போர்தொடுத்து வெற்றி பெற்றார்.
  • 13வது பாறைக் கல்வெட்டில் அசோகரே கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரித்துள்ளார்.
  • அப்போருக்குப் பின் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார்.
  • தர்மத்தின் கொள்கையை பரப்புவதற்காக சுற்றுப்பயணங்கள் (தர்மயாத்திரைகள்) மேற்கொண்டார்.
  • அவரது கொள்கை அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மனிதாபிமானத்தை உள்ளடக்கியது.
  • இரக்க உணர்வு, அறக்கொடை, தூய்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

2. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத்திட்டங்களை எழுதுக.

  • அனைவருக்கும் இலவசக் கல்வி
  • இயலாதவர்களுக்கும், முதியோருக்கும், நோயாளிகளுக்கும் தேவையில் உள்ளோருக்கும் இலவச உணவு.
  • அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை.
  • வீடற்றவர்களுக்கு இலவச தங்குமிடம்.
  • அனைவருக்கும் நீதி, பாலினம், மதம், சாதி பாகுபாடின்றி சமத்துவம்.

படங்களைப் படிப்போம்

6th-Std-Social Science-Book-Back-Answers-Term-2-Lesson-3 b

அ) பேராணைகள் என்றால் என்ன?

பேராணைகள் என்பது அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் ஆகும்.

ஆ) எவ்வகைகளில் அசோகரது பேராணைகள் பயன்படுகின்றன?

அசோகர் அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், மக்கள் நலன் மீது கொண்டிருந்த அக்கறையையும் தெரிந்துக் கொள்ள பேராணைகள் பயன்படுகின்றன.

இ) இப்பேராணைகள் எங்கெல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன?

தூண்களிலும், பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் இப்பேராணைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஈ) சாஞ்சி கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து முறையின் பெயரென்ன?

பிராமி

உ) பாறைப் பேராணைகள் மொத்தம் எத்தனை உள்ளன?

33 பாறைப் பேராணைகள் உள்ளன.

நான் யார்

1. நான் ஹரியங்கா அரச வம்சத்தைச் சேர்ந்தவன். திருமண உறவுகளின் மூலம் எனது பிரதேசங்களை விரிவுபடுத்தினேன். அஜாதசத்ரு எனது மகன், நான் யார்?

விடை : பிம்பிசாரர்

2. சமூகத்தை மாற்றியமைத்ததில் நான் முக்கியப்பங்கு வகித்தேன். கலப்பைக் கொழுமுனை செய்வதற்கு நான் பயன்படுகிறேன். நான் யார்?

விடை : இரும்பு

3. நான் தேவனாம்பிய என அறியப்பட்டேன். நான் அமைதி வழியை தழுவிக் கொண்டேன் நான் யார்?

விடை : அசோகர்

4. நான் இந்தியாவின் முதல் பேரரசை நிறுவினேன், நான் சல்லேகனா நோன்பிருந்தேன் நான் யார்?

விடை : சந்திரகுப்த மௌரியர்

5. அசோகரின் சிங்கத் தலைப்பகுதி தூணில் நான் காணப்படுகிறேன். நம்முடைய தேசக் கொடியின் மையத்தில் உள்ளேன். நான் யார்?

விடை: அசோக சக்கரம்

பொருள்படுத்தி விடையைக் கண்டுபிடி

6th-Std-Social Science-Book-Back-Answers-Term-2-Lesson-3 a

1. மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம் ________ (39, 30, 27, 6, 5)

விடை: மெளரிய

2. ________ பேரரசு இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். (26, 30, 27)

விடை: ஹரியங்கா

3. ________ புதிய தலை நகரான பாடலிபுத்திரத்திற்கு அடித்தளமிட்டார் (2, 13, 27, 38)

விடை: உதயன்

4. ________ ஒரு முக்கியமான ஏற்றுமதிப்பொருள் (17, 36, 24,11, 19, 22, 31, 34)

விடை: நறுமணப்பொருள்

5. பண்டைய மகத நாட்டில் இருந்த மடாலயம் பின்னர் புகழ்பெற்ற கல்வி நிலையமாக திகழ்ந்தது (18, 35, 16, 14)

விடை: நாளந்தா

6. நிலவரி ________ (20, 5)

விடை: பகா

7. கலிங்கப் போரின் பயங்கரம் ________ பொறிக்கப்பட்டுள்ளது (21, 37, 3, 4, 32, 33, 9, 10)

விடை: பாறைக்கல்வெட்டு

8. கிரேக்கர்கள் பிந்துசாரரை ________ என்று அழைத்தனர் (1, 25, 28, 13, 4, 14)

விடை: அமரிதகதா

9. சாரநாத் தூணின் சிகரப்பகுதியில் அமைந்துள்ளது ________ (13, 28, 24, 7, 8, 3, 4, 29, 23)

விடை: தர்மச்சக்கரம்

10. அமைச்சரவை ________ என அழைக்கப்பட்டது (24, 16, 15, 30, 20, 30, 40, 12)

விடை: மந்திரிபரிஷத்

விடைக்கட்டகம்

கி.மு.(பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் இருந்த இருவகைப்பட்ட அரசுகளின் பெயர்கள் என்ன?

விடை: கணசங்கங்கள், முடியாட்சி அரசர்கள்

இரண்டாம் பௌத்த சபையை வைசாலியில் கூட்டியது யார்?

விடை: காலசோகா

கலிங்கத்தின் தற்போதைய பெயர் என்ன?

விடை: ஒடிசா

நகரத்தை நிர்வகித்தவர்?

விடை: நகரிகா

மூன்றாம் பௌத்த சபை அசோகரால் எங்கு கூட்டப்பட்டது?

விடை: பாடலிபுத்திரம்

ஏதேனும் இரண்டு மகாஜனபதங்களின் பெயர்களை கூறு?

விடை: மகதம், அவந்தி

சுதர்சனா ஏரி வெட்டப்பட்டதைக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

விடை: ஜூனாகத், கிர்னார்

நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?

விடை: தனநந்தர்

மௌரியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளி நாணயங்களின் பெயர் என்ன ?

விடை: பணம்

 

6th Science Book Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்